<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://eathuvarai.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://eathuvarai.wordpress.com</link>
	<description>மரணத்திலிருந்து வாழ்விற்கு</description>
	<lastBuildDate>Sat, 05 Jun 2010 17:05:26 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='eathuvarai.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title></title>
		<link>http://eathuvarai.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://eathuvarai.wordpress.com/osd.xml" title="" />
	<atom:link rel='hub' href='http://eathuvarai.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>இனவாதம் அழிவு வாதமே!</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 20:49:53 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[ஆசிரிய தலையங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=494</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது. கேள்விக்குட்படுத்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது. அமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=494&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/editorial.jpg"><img class="alignnone size-full wp-image-495" title="Editorial" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/editorial.jpg?w=455&#038;h=128" alt="" width="455" height="128" /></a><br />
இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.</p>
<p>கேள்விக்குட்படுத்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p><a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/wrapper-co.jpg"><img class="alignleft size-medium wp-image-505" title="wrapper co" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/wrapper-co.jpg?w=232&#038;h=300" alt="" width="232" height="300" /></a>அமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் பண்புகளில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடித்தளமான அகபுறக்காரணிகளை தீர்ப்பதற்கு மாற்றாக, மேலும் இந்த விடயங்களில் புதிய அரசியலமைப்பானது சிங்கள தேசியவாத சிந்தனைகளை அரசின் கொள்கையாக முன்னிலைப்படுத்தும் என்பதை துணிந்து எதிர்வு கூறமுடியும்.<span id="more-494"></span></p>
<p>ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாகவும் அவரினதும் அவரது குடும்பத்தினதும் அதிகாரத்தை பல ஆண்டுகளுக்கு நீடித்து பாதுகாக்கக் கூடியதாகவும் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதுடன் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமை, கருத்து சுதந்திர உரிமை, பன்மைத்துவ அரசியல் அடையாளம் என்பனவற்றிற்கு பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது.</p>
<p>தேசிய இனப்பிரச்சினையை மிக ஆழமாக்கியதில் 1978இல் அமுலுக்கு வந்த ஜே.ஆர். ஜெய வர்த்தனாவின் அரசியலமைப்பிற்கு பெரும் பங்குள்ளது. அந்த காயங்களை ஆற்றமுடியாது அழிவும் துயரமும் மனக்கசப்பும் முரண்களும் நீடித்து வந்த காலகட்டத்தில் மீண்டுமொரு அரசியல் அமைப்பு இறுக்கம் நிகழ்வது பதற்றத்தையும் அச்சத்தையுமே தருகிறது.</p>
<p>இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மறுப்பு, தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவக் குறைப்பு, பல இன கலாச்சார அடையாளங்களை பலவீனமாக்கும் அரசிய லமைப்பு ஏற்பாடுகள் மேலும் நிலைமையை சிக்கலாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த நிலைமை தொடர்வதற்கும் மீளமீள இறுக்கமுற்று புதிப்பிக்கப்படுவதற்குமான அகபுறச் சூழல்களை உருவாக்கி வருபவர்கள் சிங்கள இனத் தேசியவாதிகள் மட்டுமல்ல. தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லி வருகின்ற அனைத்து அரசியல் தலைமைகளுமே இந்த நிலை நீடிப்பதற்கு காரணகர்த்தாக்களாவர்.</p>
<p>இனவாதத்தை சிங்கள தேசியவாத சக்திகள் மட்டுமே தங்களது அரசியல் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழ் முஸ்லிம் மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள மக்கள் மத்தியில் தீவிர இனவாதத்தையே பரப்புரை செய்து மக்களை இனவாத மயப்படுத்தியே வைத்துள்ளனர்.</p>
<p>சிங்கள இன வெறுப்பு, தமிழின வெறுப்பு, முஸ்லிம் இன வெறுப்பு, மலையக மக்கள் மீதான வெறுப்பு என இலங்கை இனச்சூழல் இனவாதத்தில் ஆழப்புதைந்து கிடக்கிறது. சிறுபான்மை தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்ற புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் என்ற வகையில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டுமேயழிய இனவாத  அடிப்படை வேலைத்திட்டங்களின், பிரச்சாரங்களின் ஊடாக அல்ல என்பதை இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் பிரங்ஞைபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.</p>
<p><strong>ஆசிரியர்</strong></p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>ஆசிரிய தலையங்கம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/494/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/494/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/494/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=494&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/editorial.jpg" medium="image">
			<media:title type="html">Editorial</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/wrapper-co.jpg?w=232" medium="image">
			<media:title type="html">wrapper co</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 00:49:41 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுப் பதிவுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=492</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 [‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.] நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்: மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=492&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010</p>
<p><a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/a-marx1.jpg"><img class="alignnone size-full wp-image-498" title="A.marx" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/a-marx1.jpg?w=455&#038;h=275" alt="" width="455" height="275" /></a></p>
<ul>
<li><em>[‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]</em></li>
</ul>
<p><strong><em>நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:<br />
</em></strong><br />
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p>
<p>உரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.<span id="more-492"></span></p>
<p>“The Magic of Dialogue: Transforming Conflict into Co-operation” என்கிற டானியல் என்புளோவிக்கினுடைய நூற் தலைப்பு நினைவுக்கு வருகிறது. உரையாடலின் அற்புதம் இதுதான். உரையாடல் மூலம் மோதலை ஒத்துழைப்பாகவும் புரிந்துணர்வாகவும் மாற்றிவிட முடியும். டயலாக், டிஸ்கசன், டிபெற் (dialogue, discussion, debate) என்கிற விடயங்கள் முக்கிய மானவை. உரையாடலில் பேசுவது மட்டுமல்ல, பேசுவதைப் போலவே மௌனமாக இருப்பதும் முக்கியம். குறிப்பாக மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல், கேட்டல் என்கிற வகையில் இத்தகைய மௌனமும் முக்கியமாகிறது. விவாதம் என்பது ஒருவரை ஒருவர் எதிர்த்து நமது கருத்துக்களை முன்வைப்பது. ஆனால், கலந்துரையாடல் என்பது வேறுபட்ட சிந்தனைப் போக்குகள் உள்ள பல்வேறு குழுக்களிடையே நடைபெறும் உரையாடல்.</p>
<p>இன்று இலங்கையில் முக்கியமாகத் தேவைப் படுவது ‘Transitional Justice’  (நிலைமாறுகிற காலத்திற் கான நீதி). மனித உரிமைகள் மிகத் திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீறப்படுகிற சூழலில் அதற்கு அப்பால், அதைத் தாண்டிச் செல்லக்கூடிய அவசியம் இருக்கிறது. இலங்கையைப் பொருத்தமட்டில் நாம் எப்போதுமே இனங்களைப் பற்றி மட்டுமே (சிங்களவர், தமிழர், முஸ்லிம்) பேசுகிறோம். Cultural minorities என்கிற கலாச்சாரச் சிறுபான்மையினர்கள் பற்றியெல்லாம் பேசுவது கிடையாது.</p>
<p>இந்த நாட்டிலேயே தேசியவாதம், அடையாள அரசியல், அரசியல்  தீர்வு பற்றியெல்லாம் நிறையப் பேசப்பட்டுள்ளது. ஆனால், Reconciliation எனச் சொல்லப்படுகிற ‘பகைமறப்பு’ அல்லது ‘மீளிணக்கம்’ என்பது இன்றும் பேசுபொருளாக்கப் படவில்லை. அந்த அடிப்படையிலேதான் பேராசிரியர் மார்க்சின் இலங்கை வருகையைப் பயன்படுத்தி இதைப் பேசுபொருளாக ஆக்க முயற்சிக்கிறோம். நாம் உரைப் பாரம்பரியத்திலே வந்தவர்கள். சொற்பொழிவுகளை ஆற்றுதல், அவற்றைக் கேட்டல் என்பனவே இங்கு பழக்கமாக இருந்துள்ளது. அதை மாற்றி ஒரு interactive forum  ஆக இதை உருவாக்கியுள்ளோம். அவையிலிருந்து வேறுபட்ட அபிப்பிராயங்கள், தெளிவுகள், மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதை வரவேற்கிறோம்.</p>
<p>பேராசிரியர் மார்க்ஸ் குறித்து இங்கே ஒரு விரிவான அறிமுகம் தேவையில்லை. அவரது எழுத்துக்களினூடாக அவரை நாம் முழுமையாக அறிந்துள்ளோம். இலங்கைச் சூழலுக்கு அவர் முதன் முதலாக வந்துள்ளார். தற்கால அரசியலை முன்னிறுத்தி ‘பகைமறப்பு &#8211; பன்னாட்டு அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இந்த உரையாடலைத் தொடங்கி வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.</p>
<p><em><strong>பேராசிரியர் அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
உரையாடல்தான் மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. உரையாடலின் மூலமாகவே நாம் நமது மனிதத் தன்மையை மிகைப்படுத்திக் கொள்ள முடியும். ‘dialogic method’ என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக ஏற்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.</p>
<p>பன்மைச் சமூகங்களின் உரையாடல் ரொம்பவும் அத்தியாவசியம் ஆகிறது. கிட்டத்தட்ட இன்று எல்லாச் சமூகங்களுமே பன்மைச் சமூகங்களாகத்தான் இருக்கின்றன. ஒற்றைச் சமூகம் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் பன்மைத் தன்மைகளை உள்ளடக்கிய சமூகங்களாகத்தான் உள்ளன. குறிப்பாக 80களுக்குப்பின் இந்தப் பன்மை அடையாளங்கள் கூடுதலாக தம்மை வெளிப்படுத்தத் தொடங்கி யுள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள தெலுங்கானா போராட்டத்தை அறிந்திருப்பீர்கள். தெலுங்கு மொழி பேசக்கூடிய தெலுங்கானா மக்கள் அதே தெலுங்கு பேசுகிற ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர மக்களிடமிருந்து இன்று பிரிவினை கோரிப் போராடுகின்றனர்.</p>
<p>எனவே இயல்பான அடையாளங்கள் &#8211; natural identies எனச் சொல்லக்கூடிய மொழி, இனம் அல்லது மதம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் நாம் எந்தச் சமூகத்தையும் ஒற்றையாகப் பார்த்துவிட முடியாது என்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. தெலுங்கு பேசும் மக்களுக்குள் குறைந்தபட்சம் இன்று மூன்று பிராந்திய ரீதியான வேறுபாடுகள் (regional variations) செயல்படுகின்றன.</p>
<p>இந்த அடிப்படையில் இன்று ‘regions’  என்ற கருத்தாக்கம் கல்வித்துறையில் முக்கியமாகி வருகிறது. region studies (ரீஜன் ஸ்டடீஸ்) என்பது புதிய பல்கலைக்கழகங்களில் முக்கிய துறையாக உருப்பெறுகிறது. சமீபத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இது தொடர்பான ஒரு பன்னாட்டு கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெற்றது. நான் சற்றுமுன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய ஒற்றைச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளவை உள்ளுக்குள் பல்வேறு “ரீஜன்”களாக இருப்பதும், பல்வேறு தனித்தனிச் சமூகங்களாக அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டவை ஒன்றாகக் கூடி வாழ்கிற ஒரே அரசியல் சமூகமாக விழைவதும் இன்று நடைமுறைகளாக உள்ளன. இந்த நோக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நான் சற்றுமுன் குறிப்பிட்ட  கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. ஆக இந்த இரண்டு வகைகளிலும் regional formationsகளை நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.</p>
<p>ஒரு ‘இயல்பான அடையாளம்’ என்கிற கருத்தாக்கத்திற்கு அப்பால் உள்ளுக்குள் இருக்கக் கூடிய வேறுபாடுகள், அந்த வேறுபாடுகளின் அடிப்படையிலான ‘பிற சமூகங்கள்’ ஆகியவற்றுடன் எந்த அளவு நாம் உரையாடலை மேற் கொண்டுள் ளோம், அவற்றைப் புரிந்து வைத்துள்ளோம் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. உண்மையைச் சொல்வதானால் அருகிலுள்ள மற்ற சமூகங்கள் (others) குறித்த நமது புரிதல் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளுநர் இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவரை ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அந்த மசூதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு பேச வந்த அவர், “எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எங்காவது ஓரிடத்தில் நபிகள் நாயகத்தின் திருஉருவப் படம் ஒன்றை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார். ஒரு மாநில ஆளுநர், ஐ.பி.எஸ். அதிகாரி, நீண்ட நாட்கள் பெரும் பதவியில் இருந்தவர், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிறுபான்மைச் சமூகத்தின் ஒரு அடிப்படையான நம்பிக்கையைக் கூடச் சரிவரப் புரிந்து வைத்திருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். மிக அருகில் வாழ்கிற மற்றவர்களின் மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளா திருத்தல் அல்லது அவற்றைக் கீழானதாக, கேலிக்குரியவையாகப் புரிந்து கொள்ளுதல் என்பதே இன்றைய நடைமுறையாக உள்ளது. உரையாடல்களின் மூலமாகவே மற்றமை குறித்த சரியான புரிதல் அடைவதும், மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளின் நியாயங்களை உணர்வதும் சாத்தியம். உள்ளூர் மொழி ஊடகங்கள், Vernacular Media &#8211; மற்ற சமூகங்களின் பிரச்சினைகளை, அவர்களின் நியாயங்களை எழுதுவதில்லை. இங்கும் அப்படித் தான் பார்க்கிறோம்.</p>
<p>எண்பதுகளின் பின் நிறைய மாற்றங்கள் உலகில் ஏற்பட்டுள்ளன. மற்றவர்களுடனான நமது அருகாமைகள், கூடிவாழ்தல்கள், அதிகரித்துள்ளன. புலப்பெயர்வு, immigration முதலியவை அதிகமாகி யுள்ளன. போக்குவரத்துகள், தகவல் தொடர்புகள், நிதிப் பரிமாற்றங்கள் எல்லாம் பெருகியுள்ளன. இவை தவிர, ஏற்கனவே வரலாற்றில் இருந்துவந்த சமூகங்களும், மற்றவர்களுடன் வாழ்கிற சமூகங் களாகவே இருந்து வந்துள்ளன என்பதும் இன்று வேறெப்போதையும் விட அதிகமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. மற்றவர்களுடன் வாழ்வது என்கிற கலையின் முக்கியத்துவம் இன்று மிகுதியாகியுள்ளது. சொல்லப்போனால் அரசியல் என்பதே மற்றவர் களுடன் கூடிய வாழும் கலைதான். Politics is the art of living with others.</p>
<p>மற்றமையுடன், ‘other’ உடன் வாழ இயலாது என்கிற அடிப்படையில்தான் பன்மை சமூகங்களில் பிரச்சனைகள் எழுகின்றன. லட்சக்கணக்கான மக்களை ரத்தபலி வாங்கும் நடைமுறைகளாகவும் அவை ஆகிவிடுகின்றன. மற்றமையை புரிந்து கொள்ளுதல் என்பது அதன் வித்தியாசங்களுடன் அங்கீகரித்தல், வித்தியாசங்களை மறுத்ததல்ல, வித்தியாசங்களை ஏற்று அதனுடன் வாழ்தல் என்பதே. இதற்கொரு மிகச்சிறந்த உதாரணமாக காந்தி அடிகளைச் சொல்வேன்.</p>
<p>தேசியம் என்பது எப்போதும் ஏதாவது பெரும்பான்மை &#8211; majority  அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும் &#8211; இனம், மொழி, மதம்&#8230; இப்படி. இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவம் பெற்ற இந்திய தேசியமும் அப்படித்தான் இருந்தது. ‘இந்து நேஷனலிசம்’ என்பதாகவே இந்திய தேசியம் கற்பிதம் செய்யப் பட்டது. இதன் முன்னோடிகளாக பங்கிம் சந்திரர், பால கங்காதர திலகர் முதலானோர் இருந்தனர்.</p>
<p>காந்தி இந்திய தேசியத்தின் போக்கையே மாற்றியமைத்தார். அதன் கட்டமைப்பிலேயே மாற்றம் கொண்டு வந்தார். இந்திய தேசியத்தை அவர் பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுப்பாகப் பார்த்தார். 1947-48 பிரிவினைக் கலவரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலு மிருந்த சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென இரு தரப்புகளி லிருந்தும் அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் சுஹ்ராவந்தியின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் பாகிஸ்தான் செல்ல இருந்த போதுதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>இந்திய அரசியலமைப்பு (constitution)  ஒரு மதச்சார்பற்ற &#8211; secular constitutionஆக ஆக்கப்பட்டதில் காந்திக்கு முக்கிய பங்குண்டு. secular என்கிற ஒரு தத்துவார்த்த வகையினத்தை, அரசியல் வகையினமாக (political category)  ஆக்கியது காந்திதான். இந்தியா இப்போது எந்த அளவுக்கு secularஆக உள்ளது என்பது வேறு விடயம். ஆனால் ‘இந்து ராஷ்டிரமாக’ இந்தியா அமையாமல் தடுத்தது காந்திதான். அதற்காகவே அவர் கொல்லப்பட்டார்.</p>
<p>எனினும் காந்தி அம்பேத்கர் முன்வைத்த தலித் மக்களின் தனித்துவத்தை ஏற்காதவராய் இருந்ததும், அதனால் விளைந்த தவறுகளுக்குக் காரணமாக இருந்ததும் வேறு கதை. எனினும், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுதியாகவே அவர் இந்தியாவைக் கண்டார்.</p>
<p>மற்றவர்களுடன் உரையாடுதல், இணைந்து வாழ்தல் என்பது குறித்த அவர் கருத்தொன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். ‘tolerence’  அதாவது ‘சகிப்புத்தன்மை’, ‘சமரசம்’ என்கிற ‘compromise’ ஆகிய இரு சொற்களையும் அவர் ஏற்கவில்லை, கண்டித்தார். ‘சகிப்புத் தன்மை’ என்றால் மற்றது ஏதோ சகிக்க இயலாதது, அதை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்கிற பொருள் வந்துவிடுகிறது. ‘சமரசம்’ செய்து கொள்வது என்றால் நாம் ஏதோ உயர்ந்த இடத்தில் இருப்பதாகவும் மற்றவர்கள் கீழே இருப்பதாகவும், நாம் விட்டுக் கொடுப்பதாகவும் பொருள் வந்துவிடுகிறது. “மற்றவர்களை அவர்களின் வித்தியாசங்களுடன் ஏற்பதே” இன்றைய தேவை என்றார் காந்தியடிகள். மற்றமையின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் என்கிற அடிப்படையில்தான் காந்தியடிகள் மற்றவர்களுடன் வாழ்வதை வரையறுத்தார்.</p>
<p>இன்னும் கொஞ்சம் தத்துவார்த்த ரீதியாக இதைச் சொல்வதென்றால் மற்றதைப் புரிந்து கொள்வதைப் பார்க்கிலும், மற்றதைப் புரிந்து கொள்வதிலுள்ள நமது இயலாமையை நாம் புரிந்துகொள்வதுதான் அவசியம், அல்லது சாத்தியம். மற்றவர்களின் தனித்துவங் களுக்கும் நமக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள், பொருத்தமின்மைகள் இருக்கும். அவற்றோடுதான் நாம் வாழவேண்டும். மாறாக, உமது தனித்துவத்தை நீங்கள் விட்டுவிட்டு வந்தால்தான் உங்களை ஏற்கமுடியும் என்றோ, இந்தத் தேசத்தின் குடி மக்களாகக் கருதமுடியும் என்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதன் மூலம் எந்த ஒற்றுமையும் உருவாக இயலாது.</p>
<p>அந்த வகையில்தான் இந்த differenceஐ வித்தியாசத்தை அங்கீகரிப்பது முக்கியமாகிறது. இந்த வித்தியாசம் பாலியல் அடிப்படையில், மதம், சாதி, இனம், மொழி எனப் பல அடிப்படைகளில் அமையலாம். இந்த வித்தியாசங்களோடு வாழ்தல் என்கிற கலையைக் கற்றுக் கொள்வதில் உரை யாடலின் பங்கு மிக முக்கியமாகிறது. ‘உரையாடல்’ மற்றும் மீளிணக்கம் குறித்துப் பேசுகிற வாய்ப்பை எனக்களித்த இந்த அமைப்பினருக்கு என் நன்றியை இன்னொரு முறை கூறிக் கொள்கிறேன்.</p>
<p>Reconciliation அல்லது ‘பகைமறப்பு’ என்கிற இக் கருத்தாக்கம் 95க்குப் பிறகு உலகில் அதிகம் பேசப் படக்கூடிய ஒன்றாக உருவாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ‘அபார்தெய்ட்’ என்கிற இன ஒதுக்கல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தென் ஆப்பிரிக்கர்கள் தலைமையில் புதிய ஆட்சி ஒன்று அமைந்த பொழுது ‘National Unity and Reconciliation Law’ என்கிற சட்டம் ஒன்றை இயற்றி, அந்த அடிப்படை யில் ‘ட்ரூத் அண்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன்’ (Truth and Reconciliation Commission)  ஒன்றை அமைத்தார்கள். ஆர்ச் பிசப் டெஸ்மான்ட் டுடூ தலைமையில் அமைக்கப்பட்ட அந்த ‘உண்மை மற்றும் பகை மறப்பு ஆணையம்’ சுமார் 3 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் 5 தொகுதிகளாகத் தனது அறிக்கையை அளித்தது. அதை ஒட்டி அடுத்தடுத்து உலகெங்கிலும் சுமார் 25 ஆண்டுகளில் இத்தகைய ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.</p>
<p>அர்ஜென்டினா, சிலி, கனடா, எல்சால்வடார், பிஜி, கானா, கதேமாலா, லைபீரியா, மொராக்கோ, பனாமா, பெரு, சியரோ லியோன், தென் கொரியா, கிழக்குத் தீமோர், லைபீரியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்படப் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக அர்ஜென்ட்ரீனாவில் ‘National Commission for Disapperance’ (காணாமலடிக்கப் பட்டவர்கள் குறித்த தேசிய ஆணையம்), கனடாவில் ‘Indian Residencial School Truth and Reconciliation Commission’, எல்சல்வடாரில் Commission for the Truth’  என்றும் சியோரோலியோன், பெரு, பனாமா, லைபீரியா போன்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா போலவே ‘Truth and Reconciliation Commission’ என்ற பெயரிலும் இந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.</p>
<p>இந்தப் பல்வேறு நாடுகளிலும் இந்த ஆணையங்கள் செயற்பட்ட விதம், சந்தித்த சிக்கல்கள், விளைந்த பயன்கள் ஆகியவற்றை நாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தோமானால், இன்றைய சூழலில் இத்தகைய முயற்சி எந்த அளவிற்குப் பயன்படும் அல்லது பயன்படாது என்பது குறித்து நாம் யோசிக்க முடியும்.<br />
இந்தப் பகைமறப்பு குறித்துப் பேசுவதில் நமக்கு ஒரு சிக்கலும் தயக்கமும் உள்ளது.</p>
<p>பகைமறத்தல் குறித்து பெரிய அளவில் உள்நாட்டு/வெளிநாட்டு மோதல்களினூடாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று முதலில் நாம் பேச வேண்டியிருப்பது உண்மைதான். இன்னொரு பக்கம் அவர்களிடம் சென்று இது குறித்துப் பேசுவது என்ன நியாயம் என்கிற கேள்வியும் எழுகிறது. தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இதுகாறும் பாதிக்கப்பட்ட மக்கள் மோதலினூடாக வென்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு இது பேசப் பட்டது. இதுகாறும் இன ஒதுக்கல்கள் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் மோதலில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும்போது அதனிடம் பகைமறப்பு குறித்துப் பேசுதல் எந்த அளவிற்கு நியாயம், எந்த அளவிற்குப் பயன்தரும்? எனினும் ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்வைத் தொடர வேண்டியுள்ளது. நாம் இப்படியே இருந்துவிட முடியாது. வரலாற்று இயக்கத்திலிருந்து ஒதுங்கி நின்றுவிட முடியாது. இப்படிப் பிரச்சினைகளின் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கித்தான் நாம் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பகைமறத்தல் பற்றிப் பேசுவதிலுள்ள சிக்கல்களை இத்தகைய ஆணையங்களைத் தலைமையேற்று நடத்திய பலரும் சந்தித்துள்ளனர். இவர்களது அனுபவங்களை யெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு அது விளங்குகிறது. தென்கொரியா, லைபீரியா மற்றும் சில நாடுகளில் இந்த ஆணையத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் தங்களின் அனுபவத்தைச் சொல்லும் போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னிப்பதற்குத் தயாராக இல்லாத நிலையைக் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>அது இயல்புதான். நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய அளவில் கடும் இழப்புகளுக்கும், கிட்டத்தட்ட இருபது அல்லது முப்பது அல்லது அந்தந்த நாட்டின் தனித் துவங்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாகக் கடுமையான ஒதுக்கப்படல்களுக்கும், இழிவுகளுக்கும் ஆட் பட்டவர்கள் அவர்கள். கண்முன் தன் பிள்ளைகளை, பெற்றோரை, சகோதரியரை, கணவரை, மனைவி யைக் கொடூரமான அனுபவங்களின் பின்னணியில் பறிகொடுத்தவர்கள் அவர்கள். இந்தப் பகையை மறந்துவிடுதல் எளிதான விடயமன்று. இந்த ஆணையங்களில் பணி செய்தவர்கள் இந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டுதான் செயல் பட்டுள்ளனர்.</p>
<p>இந்தப் பகைமறப்பு ஆணையங்களின் செயற் பாடுகள், சந்தித்த சிக்கல்கள் ஆகியன குறித்துப் பேசுவதற்கு முன்னதாக, இவை எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக இருந்த தென் ஆப்பிரிக்கப் பகை மறப்பு ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து முதலில் பார்ப்போம்.</p>
<p>ஐந்து தொகுதிகளாக ஆணையத்தின் அறிக்கை அமைந்திருந்தது. முதல் தொகுதி அறிமுகம். கமிஷனுக்குள்ளும் சமூகத்திலும் இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள், கமிஷனின் அடிப்படை மற்றும் பணிகள், எத்தகைய ஆய்வு முறை பயன் படுத்துவது என்பன.</p>
<p>மோதலின்போது எல்லாத் தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இரண்டாம் தொகுதியில் அடக்கப் பட்டன. இதன் முதல் பகுதி 1960-1990 காலகட்டத்தை உள்ளடக்கியது. 1990களின் தனித்துவமான அரசியல் சூழல், அரசின் பங்கு ஆகியன தனி அத்தியாயமாக எழுதப்பட்டது. தென்ஆப்ரிக்காவின் உள்ளே, வெளியே நிகழ்ந்தவை தனித்தனியாகப் பட்டியலிடப் பட்டன.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து மனித உரிமை மீறல்கள் இதில் தொகுக்கப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் மீறல்கள் எவ்வாறு இருந்தன என பிராந்திய ரீதியாக மீறல்கள் ஆய்வு செய்யப் பட்டன. குறிப்பான பகுதிகளின் மீது கவனம் குவிக்கப்பட்டது.</p>
<p>நான்காம் தொகுதியில் பாதிப்புகள் நிகழ்ந்த சமூகக் களம் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறுவனங்களைச் செவிமடுத்தல் அல்லது institutional hearings என்கிற வகையில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு சுயபரிசீலனை செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கட்டாய இராணுவ சேவை, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், இறுதியாகப் பெண்கள் என மூன்று சிறப்புச் செவிமடுத்தல்களும் தொகுக்கப்பட்டன.</p>
<p>ஐந்தாம் தொகுதியில் பகுப்பாய்வு, கண்டு பிடிப்புகள், பரிந்துரைகள் ஆகியன அமைந்தன. கமிஷனின் சிறுபான்மைக் கருத்தும் இதில் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இவைதவிர மன்னிப்பு வழங்குவதற்கான கமிற்றி தனது பணி முடிந்தவுடன் கூடுதல் அறிக்கை ஒன்று அது தொடர்பாக அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.</p>
<p>பகைமறப்பு ஆணையங்களுக்கான விசாரணை எல்லைகள், அதிகாரங்கள் ஆகியன (mandate)  அவ்வச் சூழல்களுக்குத் தக வேறுபட்டு அமைந்துள்ளன. ஒரு சில நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்தல் (rehabilation)  இழப்பீடு அளித்தல் (compensation)  ஆகியவை ஆணையங்களின் அதிகாரத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தன. வேறு சில நாடுகளில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளித்தல், பாதிப்புகளுக்குக் காரணமான வர்களுக்கு தண்டனையைப் பரிந்துரைப்பது அல்லது வழங்குவது ஆகியன ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் கொண்டு வரப்படவில்லை. உண்மை மற்றும் பகைமறப்பு ஆகியன குறித்து அமைக்கப் படுகிற ஆணையத்தின் நோக்கம் அதுவாக இராது என்கிற கருத்தைச் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பொதுப் புலத்திற்கு (Public Domain)  கொண்டு வருவது ஒன்றே இத்தகைய ஆணையங்களின் நோக்கமாக இருக்க முடியும். இழப்பீடு மற்றும் தண்டனை வழஙகுதல் ஆகியன இந்த நோக்கங்களுக்கு எதிராக அமைந்து விடும் என்கிற கருத்தைத் தென் கொரிய ஆணையத் தின் தலைவர் கிம் டோங் சூன் கூறியுள்ளனார்.</p>
<p>யாருக்கு, எவ்வளவு இழப்பீடு அளிப்பது, என்ன தண்டனை அளிப்பது முதலான விவாதங்கள் பொதுப்புலத்திற்கு உண்மைகளைக் கொண்டு வரும் பிரதான பணியைப் பின்னுக்குத் தள்ளிவிடும். தவிரவும், இந்த அடிப்படையில் ஏற்படும் முரண்பாடுகள் பாதிப்பிற்குள்ளான சமூகத்தின் ஒற்றுமையைப் பாதிக்கவும் கூடும் என்று இவர் கூறுகின்றார்.</p>
<p>பகைமறப்புச் செயற்பாடுகள் என்பதைப் பொருத்தமட்டில் அதில் முக்கியமாக நான்கு அம்சங்கள் உள்ளன. அவை:</p>
<p>1. முதலில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அரசு மற்றும் ஊடக வலு ஆகியவற்றினூடாக பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட தீங்குகள் மறைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த உண்மைகள் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்திற்குள்ளேயே முடங்கி விடு கின்றன. பாதிப்பிற்குக் காரணமான சமூகத் திலுள்ள சாதாரண மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும்கூட அவை தெரிவதில்லை. மாற்றுச் சமூகங்களுக்குத் தெரியாதுள்ள இந்நிலை தகர்க்கப்பட வேண்டும். ஆக, மறைந்து போன கடந்த காலத்தின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பொதுப்புலத்தில் வைப்பது Truth and Reconciliation Commission-ன் முதற்பணியாகிறது.</p>
<p>2. உண்மைகளைப் பதிவு செய்தல் என்பதற்கு அடுத்தபடியாக, பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை யும், கண்ணியத்தையும் (dignity) திருப்பி அளிக்கக்கூடிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்தவர்களுக்கு சிலை உட்பட்ட நினைவுச் சின்னங்களை அமைத்தல், இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசுப் பிரதிநிதிகள், மாற்றுச் சமூகத்தினர் உட்பட எல்லோரும் பங்கு பெறுதல், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங் களிடம் அரசாங்கம் வெளிப்படையாக மன்னிப்புக் கோருதல், பாதிக்கப்பட்டவர்களில் எஞ்சியோருக்கு வேலை வாய்ப்பு, உதவித் தொகை உட்பட்ட இழப்பீடுகள் வழங்குதல் என்கிற பல வடிவங்களில் இது அமையலாம்.</p>
<p>3.அடுத்து வருவது பகை மறப்பும் மன்னிப்பும். மன்னிப்பதில் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான சிக்கல் என்னவெனில் மன்னிப்பது என்பதில் இரண்டு கட்டங்கள் (phases) உண்டு. முதலில் யாரை மன்னிப்பது என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். பாதிக்கப்பட்டவர் பெயர் தெரியாத, அடையாளம் தெரியாத ஒருவரை மன்னித்துவிட முடியாது. எனவே குற்றவாளி யார் என அவருக்குத் தெரிய வேண்டும். இனவெறியர் கள், உளவுத்துறையினர், காவல்துறையினர் இப்படி யார் பாதிப்புக்குக் காரணமானவர்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படுகிற, எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக வேண்டும். அப்படி இல்லாமல் யாரோ ஒரு ‘எக்சையோ’, ‘ஒய்யையோ’ மன்னிப்பது சாத்தியமில்லை. இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பாத்திரமானவர் கள் நேரடியாக உணர்ந்து ஏற்பது, மன்னிப்புக் கோருவது என்பன இந்த அடிப்படையில் மன்னிப்பது இரண்டாவது கட்டமாகிறது. குற்றவாளிகள் தம் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையிலும், தட்டிக் கழிக்கும் நிலையிலும் மன்னிப்பு சாத்திய மில்லை.</p>
<p>4 .உண்மைகளை வெளிக்கொணர்வது, பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவது, மன்னிப்பது என்பதற்கு அடுத்தபடியாக வருவது நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த நீதி என்பது legal justice &#8211; சட்டப்பூர்வமான நீதியாக இருக்கலாம். சட்டபூர்வ மான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற சாத்தியக் கூறுகள் இல்லாத சூழலில் அது ஒரு Social Justice &#8211; சமூக நீதி, Historical Justice &#8211; வரலாற்று நீதியாக இருத்தல் அவசியம். குற்றவாளிகளின் பெயர்களைச் சொல்லி வெளிப்படுத்துவது நீங்கள் இந்தப் பாலியல் வன்முறையை அல்லது படுகொலையைச் செய்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்கைத் தொடர்ந்து, அதனுடைய ‘லாஜிகல் எண்டு’க்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கிக் கொடுக்கிற Legal Justice-ஐ நோக்கிக் கொண்டு செல்கிற பணி சில வேளைகளில் பகை மறப்பு ஆணையத்தின் எல்லைக்குள் வராமல் இருக்கலாம். எடுத்துக் காட்டாக இந்தியாவில் நியமிக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மசூதியை இடித்த 68 பேரை அது அடையாளம் காட்டியது. நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைக்க வில்லை. (இந்த கமிஷன் ஒரு பெரிய கேலிக்கூத்து என்பது வேறு விடயம்.) இப்படியான legal justice-ஐ நிலைநாட்டுவது Political set up-ன் பணி. குற்றத்தின் குரூரத் தன்மையை சமூகத்தின் கண்களுக்குக் கொண்டுவருவது முதலானவை இந்த Social Justice-ல் அடங்கும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் என்பது மட்டுமின்றி இப்படியான நடவடிக்கை கள் யார் கண்ணிலும் படாமல் போய்விடாது என்று வருங்காலம் குறித்த அச்சமும் உருவாகும். இது legal justiceஆக உருப்பெறுவது என்பது எந்த அளவிற்குச் சமூகம் விழிப்பாக உள்ளது என்பதைப் பொறுத்தது. Historical Justice என்பதைப் பொருத்தமட்டில் இந்த உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய வகையில் வரலாறு திருத்தப்படுவதில் அடங்கியுள்ளது.</p>
<p>இரண்டு அம்சங்கள் இங்கே வலியுறுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. அவை (i)  அத்துமீறல்கள் என்பன பொதுவாக அரசு மற்றும் அதன் இராணுவம் ஆகியவற்றின் மூலமாகவே பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும் பல சந்தர்ப்பங்களில் ‘Non-State Actors’ எனச் சொல்லப்படும் அரசல்லாத இராணுவ அமைப்புக்கள், ஆயுதப் போராட்டங்கள் ஆகியவற்றாலும் மேற்கொள்ளப் படுவதுண்டு. பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள அப்பாவி மக்கள் பலரும் இதன் மூலம் பாதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் பாதிக்கப் பட்டவர்களாகவும், இந்த அத்துமீறல்களுக்குக் காரணமானவர்கள் பாதிப்புக்குக் காரணமானவர்கள் (perpetrators) என்பதாகவும் அணுகப்படுதல் பகை மறப்புச் செயற்பாடுகளில் அவசியம். (ii) Legal justice, Social Justice, Historical Justice ஆகியன பற்றிச் சொன்னேன். இதுகாறும் பாதிக்கப்பட்ட சமூகங்களே மோதலில் (conflicts)  தோல்வியடைந்த சமூகங் களாகவும் கருதப்படக் கூடிய நிலையில் இவை எல்லாவற்றிற்கும் மேலாக Political Justice &#8211; அரசியல் நீதி &#8211; அதாவது அரசியல் தீர்வு பகை மறப்பின் முதல் நிபந்தனையாகிறது. மோதலுக்குக் காரணமான அரசியல் காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முழுமையான அரசியல் நீதி வழங்கும் போதே மன்னிப்புக்குரிய சூழல் உருவாகும். எதிர்கால அமைதிக்கும் அதுவே உத்தரவாதமாகும். இத்தகைய நிலை உருவாகும்போதுதான் பகைமறப்பு ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். இல்லாது போனால் இதை எதற்காகச் செய்கிறார்கள் என்கிற அவநம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உருவாகும். அது இந்த ஆணையத்தின் நோக்கத்தை சிதறடித்துவிடும். இனி இந்தப் பகை மறப்புச் செயற்பாடுகள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்ப்போம். ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.</p>
<p>பகைமறப்பு ஆணையத்திற்கும் மனித உரிமைகள் தொடர்பான ஆணையங்களுக்கும் சில வித்தியாசங் கள் உண்டு. பகைமறப்பு ஆணையங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வரையறுத்துக் கொண்டு அதில் நடைபெற்ற அத்துமீறல்களை ஆய்வு செய்யும். எடுத்துக்காட்டாகத் தென் ஆப்ரிக்காவில் 1960 முதல் 1994 வரை எனக் காலவரையறை செய்திருந்தார்கள். அந்தக் காலகட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட Gross Human Rights Violations &#8211; பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தக் காலகட்டம் வேறுபடும். ஆனால், Human Rights Commission-ன் செயல்பாடு ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு தொடர்பானதாகவும், அதிலுள்ள மனித உரிமை மீறலை ஆய்வதாகவும் உள்ளது.</p>
<p>அடுத்து எப்போதும் பகை மறப்பு ஆணையம் என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மனித உரிமைச் செயற்பாடுகள் என்பன பொதுவாக அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராகவே அமையும். எனவே இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்காது. உண்மையை அறிவதற்குத் தேவையான ‘ரெக்கார்ட்ஸ்’ (ஆவணங்கள்) முதலியன கிடைக்காமலிருக்க வாய்ப்பு அதிகம்.</p>
<p>ஆக Truth and Reconciliation Commissionகளின் வெற்றியில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அப்படி இல்லாதபோது அது வெற்றியடைவதில்லை. ஆனால் நடைமுறை என்னவாக இருந்துள்ளது என்றால் அரசாங்க ஒத்துழைப்பு &#8211; தென்னாப்பிரிக்கா போன்ற பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த நாடுகளிலும் கூட முழுமையாகக் கிட்டியதில்லை. பாதிப்புக்குக் காரணமானவர்களே வெற்றி பெற்று அமர்ந்துள்ள சமூகங்களில் சொல்ல வேண்டிய தில்லை. பெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருக்கும் அரசு நிறுவனங்கள் எனில் அவை போலீஸ், மிலிரறி, இன்ரலிஜன்ஸ் ஆகியவைதான். எனவே உண்மைகளை வெளிக் கொணர்வதில் இந்த மூன்று நிறுவனங்களில் ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் கடந்த காலங்களில், தென் ஆப்ரிகா உட்பட, குறிப்பாக தென் கொரியாவில் இந்த ஒத்துழைப்பு பூரணமாகக் கிட்டியதில்லை.</p>
<p>தென் கொரியாவில் 1945 தொடங்கி மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை ஆய்வதற்காக ஆணையம் நியமிக்கப்பட்டது. அதனுடைய ‘செயர்மன்’ ஆக நியமிக்கப்பட்ட கிம் டோங் சூன் ஒரு சோஷியாலஜி பேராசிரியர் உலகறிந்த ஒரு மனித உரிமைப் போராளி. மூன்றாண்டு கால கெடு ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்கிடையில் அரசாங்கம் மாறிவிடுகிறது. புதிதாக வந்த அரசிற்கு இந்த பகை மறப்பு ஆணையத்தில் அக்கறையில்லை. 1945 முதல் நடைபெற்றுள்ள உரிமை மீறல்க¬ளை விசாரிக்க 3 ஆண்டுகள் போதாது, மேலும் 2 ஆண்டுகள் தேவை என ஆணையம் கேட்டிருந்ததும் புதிய அரசோ காலகெடு முடிந்துவிட்டு எனச் சொல்லி ‘செயர்மனை’ நீக்கிவிட்டு அவர்களுக்குத் தலையாட்டக்கூடிய புதிய நபர் ஒருவரை நியமித்து இரண்டு மாத காலகெடு மட்டும் நீடிக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. பல முக்கிய மனித உரிமை மீறல்களையும் உண்மை களையும் மூடி மறைக்கக்கூடிய கமிஷனாக அது மாற்றப்பட்டது.</p>
<p>இது குறித்து அப்பேராசிரியர் விரிவாக எழுதியுள்ளார். உண்மைகளை மறைப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது இந்த அனுபவத்திலிருந்து நமக்கு விளங்குகிறது. அரசு, போலீஸ், மிலிறரி, இன்ரலிஜன்ஸ் முதலியன உண்மைகளை மறைக்க முயலும்போது, உள் நாட்டிலுள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இது போன்ற உரையாடலுக்கான அமைப்புகள், பீஸ் இனிஷியேற்றிவ்ஸ் (Peace initiatives) முதலானவற்றின் பங்கு முக்கியமாகிறது. அவை வெளியிலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆப்ரிக்காவில் புதிய ஆட்சி அமைந்தபோதும் பழைய அதிகாரிகள் தொடர்ந்ததனால் கொமிசனுக்குப் போதிய ஒத்துழைப்பு கிட்டவில்லை. பகை மறப்பு ஆணைய விசாரணை, வாக்குமூலம் பதிவு செய்தல் எல்லாம் மூடிய அறைக்குள்ளேயே நடைபெற்றன. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியார்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இச்சமயத்தில் 23 மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து நீதிமன்றத்தை அணுகிய பின்னரே திறந்த விசாரணை தொடங்கியது.</p>
<p>திறந்த விசாரணையிலும் சில சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் தமது வாக்குமூலங்களை வெளிப்படை யாகப் பதிவு செய்யத் தயங்கலாம். அவர்களுக்குத் தேவையானால் விலக்கு அளிக்கலாம். பிற விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக நடந்து அவை அங்குள்ள நேஷனல் புராக்காஸ்ரிங் கார்ப்பரேஷனால் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவும் பட்டன. நோர்வேயின் நிதி உதவியுடன் கிட்டத்தட்ட முழு விசாரணையுமே வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. ஆக, பகைமறப்பு ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டபோதும் வெளியிலிருந்து அதைக் கண்காணித்து அரசுத் தடைகளை எதிர்த்து நிற்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்புகளின் பணி இன்றியமையாததாகிறது. அத்தகைய வாய்ப்பில்லாத சூழல்களில் பகைமறப்புச் செயற்பாடுகள் கேலிக்குரியதாகிவிடும் வாய்ப்பை மறுக்க இயலாது.</p>
<p>தென் கொரிய பகை மறப்பு ஆணையத் தலைவர் உண்மையை வெளிக் கொணர்வது, ஏற்கனவே நிலவும் கதையாடலுக்கு மாற்றான ஒரு எதிர்க் கதையாடல் &#8211; Counter Narrative  ஒன்றை பொதுப் புலத்தில் மிதக்க விடுவது மட்டுமே பகை மறப்புச் செயலில் பிரதானமானது எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டேன். இழப்பீடு கொடுப்பது முக்கிய மில்லை என அவர் கருதினார்.</p>
<p>ஆனால், வேறு பலர் எப்படிக் கருதுகிறார்கள் என்றால் இழப்பீடு கொடுப்பது என்பது வெறுமனே இழப்பீடு கொடுப்பதற்கான விடயம் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெரிய அளவில் இழப்பீடு அளிக்கப்பட்டு விடுவதுமில்லை. தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கலால் பாதிக்கப் பட்டவர்களில் உயிரோடு இருந்தவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வெறும் 23 ஆயிரம் பேருக்கு மட்டுமே, ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ராண்ட் (அந்த நாட்டு நாணயம்) அளிக்கப்பட்டது. டொலரில் பார்த்தீர்களானால் வெறும் 4000 டொலர்.</p>
<p>அதுதான் சாத்தியமானது என்றாலும் இந்த இழப்பீட்டை வெறும் நிதி உதவி என்பதாக அல்லாமல், அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தை அங்கீகரிப்பதாகவும், அவர்களுடைய கண்ணியத்தை மீட்டுத்தரும் நடவடிக்கையாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல்பாடாகவும் இதைக் கருத வேண்டும்.</p>
<p>தென் ஆப்ரிக்க கொமிசனில் மூன்று கமிற்றிகள் அமைக்கப்பட்டன. ஒன்று உண்மைகளை வெளிக் கொணர்வதற்கான கமிற்றி. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, அவர்களை அடையாளம் கண்டும், அல்லது பாதிக்கப் பட்டவர்கள் என அறிவித்துக் கொண்டவர்களை அழைத்தும் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது அதன் பணி. அதேபோல யார் பாதிப்பிற்குக் காரணமாக உள்ளவர்களோ அவர்கள் தாமே முன்வந்து தமது ‘நியாயங்களை’ச் சொல்லலாம். மன்னிப்புக் கோரலாம். அல்லது கொமிசனே அவர்களை அழைத்தும் கருத்துக் கேட்கலாம். இரண்டாவது கமிற்றி இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக் கமிற்றி. மூன்றாவது ஆம்னஸ்ரி கமிற்றி. மன்னிப்பு வழங்குவது. மன்னிப்பு வழங்க நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டது. அதாவது குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக (political motive) மேற்கொள்ளப் பட்டவை, சாதாரண கிரிமினல் குற்றங்கள் எனப் பிரிக்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக மேற் கொள்ளப்பட்டவைக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. எனவே தான் செய்தது அரசியல் காரணங்களுக் காகத்தான் என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிறுவ வேண்டும். 5392 பேர்களுக்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது. மன்னிப்பு கோரி வந்த வேண்டு கோள்களில் 849 பேர்களுக்கு மட்டுமே மன்னிப்பு வழங்கப்பட்டது.</p>
<p>இந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்துச் செல்ல வேண்டாம் எனக் கருதிய முந்தைய குடியரசுத் தலைவர் தாகோ எம்பெகி 2009ல் ஆம்னஸ்ரி கொடுக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு எவ்வளவு பேருக்கு ஆம்னஸ்ரி வழங்குவது எனத் திட்டமிட்டபோது மீண்டும் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகின. உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. மன்னிப்பு வழங்க குடியரசுத் தலைவருக்கு  அதிகாரமுண்டு. ஆனால், அரசியல் குற்றங்கள் என நிரூபிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்த்து வாதிட அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சென்ற பிப்ரவரியில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மன்னிப்பு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தென்னாப்ரிகா மட்டுமின்றி, இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்ட பிற நாடுகளிலும் வழங்கும்போது அது வழங்கப் படுவதற்கு ஏகப்பட்ட காலதாமதமாகியது. ஆனால் மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த இராணுவ அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசியல் வாதிகள் எந்தப் பிரச்சினையும் இன்றி உடனடியாக மன்னிப்பு அளிக்கப்பட்டு வெளியே செல்லும் நிலை இந்த ஆணையங்களின் நோக்கத்தைக் கேலிக்குரிய தாக்கியது.</p>
<p>பகை மறப்புச் செயல்பாடுகள் தொடர்பாக மேலும் பல கேள்விகளும் உண்டு. ஆணையத்தின் முன்பாக மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் தமது கொடுமையான அனுபவங்களை நினைவு கூர்வது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடியதாக இருக்குமா, இல்லை மீண்டும் ஒரு முறை அந்தத் துன்ப நிகழ்வை மறுமுறை வாழ்கிற கொடுமையாக அமையுமா? பகையை மறந்து மன்னிக்க அது உதவுமா, இல்லை மீண்டும் ஒருமுறை பகையை உறுதி செய்வதற்கு இட்டுச் செல்லுமா? இதற்கு ஒரு பொதுவான பதிலைச் சொல்லிவிட இயலாது. அது பாதிக்கப்பட்டவர்களின் உளநிலையைப் பொருத்தது. தென் ஆப்ரிக்க ஆணையம் முன் வந்த வழக்குகளில் ஒன்றைச் சொல்கிறேன். டீ கொக் என்றொரு வெள்ளை அதிகாரி. மூன்று கறுப்பின காவலர்களை ஒரு வானில் ஏற்றி ஏதோ ஒரு நடவடிக்கைகக்காக அனுப்புகிறான். அந்த வானில் குண்டுகள் ஏற்கனவே வைக்கப்பட்டு போகிற வழியில் வெடித்து அம் மூவரும் கொல்லப்படுகின்றனர். திட்டமிட்ட கொலை. ‘மதர்வெல் வெடிகுண்டு’ வழக்கு என்று இதற்கு பெயர். ரூத் அன்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன் முன் அந்த அதிகாரி தன் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறான். அந்த மூன்று விதவைகளுக்கும் அவனுக்கும் இடையே நீண்ட உரையாடல் நடக்கிறது. இறுதியில் அந்தப் பெண்கள் அவனை மன்னித்துச் செல்கின்றனர்.</p>
<p>ஆனால் இன்னொரு எடுத்துக்காட்டு வேறு விதமாக அமைகிறது. தாண்டிசேஷி என்கிற பெண்மணி கொடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவள். குற்றத்தைப் புரிந்தவன் அதை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. அவன் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிச் செல்கிறான். பிளா£ட்ஜீ என்ற பெண்மணியின் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதை அவள் விவரித்து வரும்போதே தேம்பி அழுகிறான். உடைந்து வீழ்கிறான். மீண்டும் ஒருமுறை அந்த அனுபவத்தை வாழ்ந்த கொடுமையை அவள் உணர்கிறாள். இவை எல்லாம் பல அறம் சார்ந்த கேள்விகளை இம் முயற்சிகளின்பால் எழுப்புகின்றன.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ரொம்பவும் சிக்கலானது. மிக நெருக்கமானவர்களை மிகக் குரூரமாக இழந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் அவர்கள். பலருக்கு வாழ்க்கை அந்த நிகழ்வோடு உறைந்துவிடுகிறது. 1984ல் டெல்லியில் நிகழ்த்தப் பட்ட சீக்கியப் படுகொலை, 2002ல் குஜராத்தில் செய்யப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு ஆகியவை குறித்த மிக அற்புதமான ஆய்வுகள் வந்துள்ளன. வீணாதாஸ், தானிகா சர்கார், டாக்டர் பாலகோபால் போன்றோர் நிறைய எழுதியுள்ளனர். செல்வி திருச்சந்திரன் போன்றோர் இங்கே நடந்த இனப் படுகொலை குறித்தும் இத்தகைய ஆய்வுகளைச் செய்துள்ளனர்.</p>
<p>அந்தச் சோக நிகழ்வுடன் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ரொம்பப் பரிதாபமானவர்கள். மீண்டும் வாழ்வியக்கத்தில் இணைந்து கொள்ள இயலாமல் அவர்கள் தற்கொலை செய்கின்றனர் அல்லது மன பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.</p>
<p>வீணாதாஸ் குறிப்பிடும் சீக்கிய மூதாட்டி ஒருவரின் கதை என்னை ரொம்பவும் பாதித்த ஒன்று.  கண்முன் கணவரையும் இரண்டு மகன்களையும் கொலைவெறிக்குப் பறிகொடுத்தவர் அவர். அவரையும் கடைசி மகளையும் மட்டும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் கொலையாளிகள். என்.ஜி.ஓ.க்கள் அல்லது பெரிய மனிதர்கள், கட்சிகள் அளிக்கும் இலவச உதவிகள் எதையும் பெறுவதில் அந்த மூதாட்டி ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதும் தன் மகளை திட்டிக்கொண்டே இருப்பார் அவர். எந்தக் காரணமும் இல்லாமல்  திட்டுவார். ஏதோ அவளது சகோதரர் இருவர் கொல்லப் பட்டதற்கும் அவளே காரணம் என்பது போலக் கரித்துக் கொட்டுவார். இறுதியாக அரசு இழப்பீடு சில லட்ச ரூபாய்கள் அளிக்கப்படுகிறது. அடுத்த நாள் வீணா தாசைச் சந்தித்த அப் பெண்மணி தனது உறவினர்கள் யாரையும் நம்பவில்லை எனவும், தனது மகளை வீணாதாஸ்தான் காப்பாற்ற வேண்டும், இந்த இழப்பீட்டுத் தொகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறார். கவலைப்படாதீர்கள் என வீணா  அவருக்கு ஆறுதல் சொல்வார். அடுத்த நாள் அந்தப் பெண்மணி தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்கிறாள்.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையும் பிரச்சினைகளும் ரொம்பச் சிக்கலானவை. நீண்ட நாள் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திரும்பிப் போகும் வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கும் பிரச்சினைகளும் சிக்கலானவை. ஒரு குடும்பம் இந்தப் பதினைந்து அல்லது இருபதாண்டுகளில் மூன்று அல்லது ஐந்து குடும்பங்கள் ஆகியிருக்கும். திரும்பிப் போனால் அவர்களுக்கு இருப்பதோ ஒரு வீடு மட்டும்.</p>
<p>இவை எல்லாம் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய விசயங்கள். பாதிக்கப்பட்டவர்களை வரையறுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது சந்ததி களையும் மட்டும் நாம் அப்படிப் பார்க்க முடியாது. ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக அந்தச் சமூகமே அஞ்சி இடம் பெயர்ந்திருக்கலாம். அந்தச் சமூகமே சந்தேகத்திற்குரியதாகக் கட்டமைக்கப்பட்டதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள், ஒதுக்கல்கள் ஆகியவற்றால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம். இப்படி  எத்தனையோ. எனவே அந்தச் சமூகமே பாதிக்கப்பட்ட சமூகமாகக் கருதப்பட வேண்டிய அவசியமுள்ளது.</p>
<p>இறுதியாக நான் சொல்ல விரும்புவது: Truth and Reconciliation  என்பது ஒவ்வொரு நாட்டின் தனித்துவங்களுக்கு ஏற்ப செய்யப்படுவது அவசியம். பிரச்சினையின் தன்மைகள், அதன் அடிப்படையில் எத்தகைய தீர்வுகள் அங்கே சாத்தியம், எவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது, வேர்களை எங்கே தேடுவது, எந்தக் காலக்கட்டத்திலிருந்து தொடங்குவது, எத்தகைய அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும் என்றெல்லாம் ஒவ்வோர் நாட்டுக்கும் உரிய வகையில் இது மேற்கொள்ளப்பட வேண்டும். வெறும் பகை மறப்பு ஆணையத்துடன் பகைகள் முற்றாகத் தீர்ந்து விடுவதில்லை. எல்லாவற்றிற்குமான தீர்வாகவும் இதை நாம் சொல்லவில்லை. சமூகங்களுக்கிடையே ஒரு பகையைத் தக்க வைப்பதன் மூலமே தன் இருப்பைச் சாத்தியப் படுத்திக் கொள்ளும் அரசு ஒன்றின் முன் எதுவும் சாத்தியமுமில்லை.</p>
<p>நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். அரசும் ஊடகங்களும் ஒரு கதையாடலை (Narrative) முன் வைக்கும்போது ஒரு எதிர்க் கதையாடலை (Counter Narrative) பொதுப்புலத்தில் மிதக்கவிடுதல் நமக்கு அவசியமாகிறது. அதன்மூலம் ஒரு சிறிய அசைவை ஏற்படுத்தவும் சமூகங்களுக்கிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தவும் சாத்தியமாகலாம். சமூகங்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ள சூழல்களில், ஒவ்வொரு மொழி ஊடகங்களும் Vernacular Media &#8211; அவர்கள் தரப்புச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு தத்தம் தரப்பில் மாற்று உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டுள்ள சூழலில் இது மேலதிக அவசியமாகிறது. அடுத்து குற்றம் செய்தவர்கள் அதை ஏற்றுச் கொள்ளும் மனநிலை கொண்டிருப்பது அவசியம். இரு தரப்பிலும் உள்ள ஜனநாயகவாதிகள், Secularists, இடதுசாரிகள் ஆகியோரின் பங்கு இத்தகைய முயற்சிகளில் முக்கியமாகிறது. இறுதியாக இப்பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வு குறித்த ஒரு விரிவான விவாதமும், பன்னாட்டு அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கண்ணியம்மிக்க அரசியல் தீர்வுக்கு இணையான முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் அவசியம்.</p>
<p>பெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குரிய குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இவை எல்லாம் இணைந்ததுதான் பகை மறப்பு. இது எந்த அளவிற்கு இங்கே சாத்தியம், எந்த அளவிற்கு இங்கே தேவை என்பதை எல்லாம் நாம் யோசிப்பதற்கான ஒரு முன் குறிப்பாகவே என் உரையை நான் இங்கே முன்வைத்துள்ளேன். நன்றி.</p>
<p><em><strong>சிராஜ்<br />
</strong></em><br />
இங்கே பகைமறப்பு குறித்துப் பேசப்பட்டபோது எனக்கு ராஜனி திரணகமவின் எழுத்துக்கள்தான் ஞாபகம் வந்தன. இனி வரப்போகிற நிலைமை யினுடைய ஒரு ஆழமான பார்வையை அவர் கொண்டிருந்தார். பின் வந்த நாட்கள் அதனைத்தான் அறுவடை செய்தன. ராஜனியின் 20ஆம் நினைவு தினம் அண்மையில் நடத்தப்பட்டது. அதன் ஒகனைசர் சுமதி கூட இங்கே வந்துள்ளார். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அனைவரும் ஒருங்கிணைந்து அங்கு வந்திருந்தனர். கருத்துக்களைப் பரிமாறவும் உரையாடவுமான ஒரு தளமாகவும் அது அமைந்தது.</p>
<p>பேராசிரியர் மார்க்ஸ் குறிப்பிட்டது போல மற்றமைகளை அவற்றின் வித்தியாசங்களுடன் புரிந்து கொள்வது முக்கியம். இந்தத் தளத்திலிருந்து நமது உரையாடலை நகர்த்தலாம்.</p>
<p><em><strong>மு. பொன்னம்பலம்<br />
</strong></em><br />
பேராசிரியர் மார்க்ஸ் கூறியதைச் செவிமடுத்தேன். அவர் மார்க்சிய வழியில் வந்துபின்னர் பின் நவீனத்துவம், தலித்தியம் என்று போனவர் எனவும் அறிந்துள்ளேன். அப்படியானவர் ஏன் இதைப் பேசுகிறார் என்கிற கேள்வி எழுகிறது.</p>
<p>நான் மார்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு உடையவன். மார்க்சியம் இன்று வரை எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்து. கருத்தியல் ரீதியான துறை போகிற போராளிகள் இருக்கிற வரைக்கும் இந்தப் பகை மறத்தல் என்பதெல்லாம் தேவையில்லை. இனங்களுக்கான உரிமையைக் கொடுக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அமெரிக்கக் காட்டிக் கொடுப்பாளர்களால் இறந்துபோன சே ஒரு சிறிய தவறிழைத்தான். இல்லாவிட்டால் இன்று லத்தீன் அமெரிக்காவே அவன் கையிலிருக்கும். இந்தப் பகை மறத்தல், தலித்தியம் என்பதெல்லாம் சிரிப்புக்குரியவை. இதற்கெல்லாம் மார்க்சே போதுமானவர். மார்க்சிய ரீதியாகவே தலித்தியம் பேசலாம். துப்பாக்கிச் சன்னத்திலிருந்து பிறப்பதுதான் அதிகாரம். மற்றபடி பகை மறத்தல் என்பதெல்லாம் ஒரு பூசிமெழுகல்.</p>
<p>என்னுடைய நாவல் பற்றி இவர் விமர்சனம் என்கிற பெயரில் ஏகப்பட்ட குழறுபடிகள் செய்தவர். நான் அது பற்றி அளித்த பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உங்கள் புத்தகத்திலும் அதை வெளியிட்டீர்கள். ஆகவே உங்களுடைய மார்க்சியத் திலும் எனக்குச் சந்தேகம். இயங்கியலிலும் எனக்குச் சந்தேகம்.<br />
சிவகுருநாதன்</p>
<p>பேராசிரியர் அவர்கள் ‘ரீகன்சிலியேஷன்’ என்ற பதத்திற்கு ‘பகை மறப்பு’ என்று பாவித்தார். நாங்கள் இங்கு ‘மீளிணக்கம்’ என்ற பதத்தைத்தான் பாவிக்கின்றோம். நீங்கள் தென்னாப்பிரிக்காவின் பல உதாரணங்களை எடுத்துக் கூறினீர்கள். தென்னாப் பிரிக்காவில் நான் அறிந்தவகையில் ஒரு பெரும் பான்மை சமூகம் ஒரு வெள்ளையச் சிறுபான்மைச் சமூகத்தால் நீண்டகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பு அந்தப் பெரும்பான்மை கறுப்பர் இனம் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்புதான் இந்த மீளிணக்க ஆணையம் உருவாக்கப்பட்டது.</p>
<p>ஆனால், இலங்கையை நாங்கள் எடுத்துப் பார்த்தால் துரதிஸ்ரவிதமான விசயம் எனனென்றால் இலங்கையின் சனத்தொகை வீதத்தில் காணப் படுகின்ற முரண்நிலை உங்கள் எல்லோருக்கும் தெரியும். பெரும்பான்மை இனம் 74 பேர் இருக்கக் கூடிய சூழலில் வடக்குக்கிழக்கு தமிழர்கள் 13 பேர் மலையகம் 5 பேர், முஸ்லிம் மக்கள் 7 பேர் ஏனைய மக்கள் ஒரு வீதம். இப்படித்தான் எங்களுடைய சனத்தொகை விகிதாசாரம் அமைகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தினுடைய உரிமைகளுக்காகப் போராடிய போராளிகள், தங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப் பவர்களை எட்டப்பர்களாக துரோகிகளாக அடையாளம் காண முற்பட்டனர்.</p>
<p>அதேநேரத்தில் ஒரு சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கிய பின்பு ஆட்சியாளர்கள் தேச கோசத்தைத்தான் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது, மனித நேயங்களைப் பற்றிப் பேசுகின்ற போது அவர்கள் தேசத் துரோகி களாகத்தான் கருதப்படுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல பெரும்பான்மை இனத் தினுடைய பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகை களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்படியான ஒரு நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்படும் போது நாங்கள் சர்வதேசத்தின் கருத்துருக்களை உதாசீனம் செய்யவே இருக்கிறோம் என்று எங்களுடைய ஆட்சித் தலைவரும் அவருடைய சகபாடிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இங்கு இந்த மீளிணக்கச் செயற்பாட்டினை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான் என்னுடைய கேள்வி. தென்னாப்பிரிக்காவில் உங்களுக்குத் தெரியும் ‘அரசியல்’ குற்றங்களைச் செய்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பேசியதை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன என்றீர்கள். அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் சாத்தியமாகுமா, முடியுமா, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆய்வாளர் ஆகிய நீங்கள் உங்களுடைய ஆற்றல் திறமைகளுக்கமைவாக எப்படியான ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குவீர்கள்?</p>
<p><em><strong>சுமதி சிவமோகன்<br />
</strong></em><br />
இன்றைக்கு எங்கட சமூகங்கள் எதிர் நோக்கி யிருக்கிற சவால்களின் பேரில் ஒரு சிறு குறிப்பைக் கூறலாம் என்று நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா வில் ரூத் அன் ரி கென்சிலியேசன் கொமிசன் வைத்த பொழுது ஏற்பட்ட நிலை பற்றி, இங்கு குறிப்பிடப் பட்டதற்கு மாறாக ஒரு கருத்தைச் சொல்கிறேன். நெல்சன் மண்டேலா வெள்ளையர்களுக்குக் கொடுத்த சலுகை அது என்றும் ஒரு கருத்துள்ளது. அதாவது வெள்ளையர்களுக்கிருந்த சொத்துக்களை தென்னாப் பிரிக்காவில் நிலைநிறுத்தி வைத்திருப்பதற்காக, தந்திரோபாயகமாக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக கொள்ளப்பட்டது. அந்த வகையில் முழுக்க நீதி கிடைத்த நாடு என்று அதைச் சொல்ல முடியாது.</p>
<p>எங்களது நாட்டை எடுத்துப் பார்த்தால் போரை விடவும், எப்படி அது முடிந்தது என்பதையும் விட, சிறுபான்மையினர் என்ற வகையில் உரிமைகள் குறைவு என்று சொல்லலாம். முழுமையாக இல்லை என்று சொல்ல இயலாது. சிறுபான்மையினருக் குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சிறுபான்மை யினர்களில் கூட சலுகைகள் கூடிய, குறைந்த அளவுகளில் பெறுகிறவர்கள் இருக்கிறார்கள்.</p>
<p>ஆனால் இன்றைக்கு அந்தக் கப்பிரல் மொடல் ஒப் ரீ கொன்சிலியேசன், தென்ஆப்பிரிக்கா, சிலி, அர்ஜென்டினா, அந்த மாதிரி இல்லாமல், ஒரு புரிந்துணர்வின் மூலமான உணர்வைக் கட்டி யெழுப்பி, இந்த மாதிரியான இடைவெளிகளைப் பாவித்து, பிறகு நாங்கள் எப்படி வித்தியாசமான அதிகாரங்களைக் கேள்வி கேட்கலாம் என்று பார்க்கலாமேயழிய அரசாங்கம் எங்களைக் கொல்லப் போகிறது என்று மேசைக்குக் கீழ் ஒழிந்து கொண்டு இருக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் சமூகங்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருக்கு என்பது முக்கியமான விசயம். இன்றைக்கு தமிழ் மக்களுக்கெதிராக பாரிய குற்றங்களை இழைத்த எல்ரிரீஈ இல்லை. ஆக கேள்விகள் கேட்பதற்கு அந்த ஓகனைசேசன் இல்லை. அந்தத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த என்று கூண்டில் போடுகிற ஓகனைசேசன் இன்று இல்லை. முஸ்லிம்களுக்கு பெரிய தீவிர குற்றங்களை இழைத்த எல்ரிரிஈ இல்லை. தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இழைக்கிற அந்தத் தீங்குகள், நாங்கள் அரசாங்கம் என்று சொல்லாமல் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என்றுதான் அதை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான அரசியல் உரையாடல் நடக்கலாம், சக்தியைக் கட்டியெழுப்பலாம் என்று பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப இதனை கதைத்துக் கொண்டிருந்தோமென்றால் சிங்கள, தமிழ், முஸ்லிம் அடையாளத்துக்குள் அம்புட்டுப் போய் விடுவோம் என்று தான் நான் நினைக்கிறேன்.</p>
<p><em><strong>அத்துல் வகாப்<br />
</strong></em><br />
இந்த உரையாடலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. பேராசிரியர் மார்க்ஸ், சிவகுருநாதன், சுமதி போன்றோர் கூறியது போன்று, இங்கு தமிழ் முஸ்லிம் உறவு எப்படி யிருந்தது. எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி ஆகப்போகிறது என்பதெல்லாவற்றையும் நாம் உரையாடியாக வேண்டும். தமிழ் முஸ்லிம் முரண்பாடு இருக்கவேயில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இது கிழக்கு வாழ்நிலையைப் பொறுத்து நான் சொல்வது, யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தப் பிளவுகள் இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்டது. அது பாரியளவில் இல்லை என்று சொல்லலாம். சிலரது நோக்கங்களுக்காக தமது பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டது என்று சொல்லலாம். அதனைத் திரும்பத்திரும்பப் பேசி அல்லது அதனை உரையாடப் போனால் பெரியளவானதாக அமையும். ஆனால் இந்த உரையாடலில் பேராசிரியர் மார்க்ஸ் சொன்னதைப் போல இங்குள்ள தனித்துவங்களின் அடிப்படையில் நாம் அணுகவேண்டும். இந்த நிலையில் இலங்கை யின் விடயம் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகள் இந்தப் போராட்டத்தை என்ன நோக்கத்தில் ஆரம்பித்தார்களோ அந்தப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியதாக முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரீ கொன்சிலியேசன், பகை மறப்பு அல்லது பகை மறுப்பு என்ற வகையில் அதனைச் சரியாக இனங்கண்டு கலந்துரையாடலைக் கொண்டு செல்வது சிறப்பானதாக அமையும் என நான் நினைக்கிறேன்.</p>
<p><em><strong>மகாதேவா<br />
</strong></em><br />
மார்க்ஸ் அவர்கள் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றியிருக்கிறார். அதில் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தேசியம் என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. சுமதி பேசும் போது குறிப்பிட்ட விடயம், ஒரு இயக்கம் மீது அது செய்த பிழைகளை மட்டும் கூறினார். ஏன் அது ஏற்படுத்தப்பட்டது. எல்லோரும் சேர்ந்து பிழை விட்டமைகள் குறித்து குறிப்பிடவில்லை. இது இயக்கத்திற்காகப் பேசவில்லை. இந்த இயக்கம் இல்லாமல் போனது ஒரு வகையில் தமிழ் மக்களுக்கு நல்லது. கடந்த 60 வருடங்களாக இருக்கிற தமிழ் தேசியத்தில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டனர். பின்னர் அவர்களுடைய தேசியத் தைப் பார்த்துச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் தமிழ் தேசியம் பேசும்போது தங்களுக்கான நலன்களைப் பேண பாராளுமன்றம் செல்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து சென்றுவிட்டார்கள். முஸ்லிம் தமிழ் உறவு களில் பிரச்சினைகள் இல்லை என்று சொல்வது உண்மையில்லை.</p>
<p>சிங்கள மக்களுடனும் அன்னியோன்னியமாக இருக்கிறோம் ஆனால் அரசியல் என்று வரும்பொழுது முரண்பாடு ஏற்படுகிறது. அந்தவகையில் தமிழர்கள் தமிழ் தேசியம் என்ற விடயத்தினை அகற்ற முடியாது. சிங்களவர்கள் விசாலமான அவர்களுடைய தேசியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் நாம் அதனை விட்டுவிட முடியாது. அது இருந்துகொண்டே இருக்கும்.</p>
<p>அந்தவகையில் மார்க்ஸ் சொன்னது போல நாம் ஒரு பொதுவான சிந்தனைக்குச் செல்ல வேண்டும். அதற்கு சிங்களவர்கள் தயாராக இல்லை. சுமதி சொன்னது போன்று தமிழர்கள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து கொண்டு செயற்படுவதில் பிரயோசனம் இல்லை. ரஜனி திராணகம பல்வேறு வகையிலும் பாடுபட்ட ஒருவர். அவர் ஒரு சிறந்த புத்திஜீவி. ஆனால் அவர் கூட ஒரு கட்சி சார்ந்து இருந்ததால் தான் கொல்லப்பட்டார். அப்படித்தான் அவருடைய புத்தகத்திலிருந்து நான் அறிந்து வைத்திருக்கிறேன்.<br />
மார்க்ஸ் சொல்வதில் தவறில்லை. இப்போது நாம் எல்லா விடயங்களில் எல்லோராலும் கைவிடப் பட்ட நிலையில் இருக்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வென்றெடுக்க வேண்டும். ஆனாலும், எங்களுடைய தமிழ் தேசியத்தை விட்டுக் கொடுக்க முடியாது.</p>
<p><em><strong>பாலச்சந்திரன்<br />
</strong></em><br />
மார்க்ஸ் சொன்னது சரி என்று சொல்லலாம். ஆனால் யாழ்ப்பாணத்தினுடைய நிலை எப்படி யிருந்ததென்றால் தமக்கெதிராகக் கருத்துச் சொல் பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது. அதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் அவர் கொல்லப் பட்டதற்கான காரணம் அவர் குறை சொன்னதுதான். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ கொமிசன்கள் எத்தனையோ விசாரணைகள் நடந்திருக்கிறது. ஆனால் புரிந்துணர்வு என்று வரும் பொழுது, எத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.</p>
<p>பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது நிலைமை வேறு மாதிரி இருக்கும். ஆனால் ஆண்ட பரம்பரையே ஆளும்பொழுது, அவர்கள் போடும் கொமிசன்களது செயற்பாடு எப்படியிருக்கும் என்பதற்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதிகார வர்க்கம் இருக்கும் வரை ஒரு நீதியான அறிக்கையை வெளியே வர விடமாட்டார்கள். தமிழ் மக்கள் தங்களை ஆள புறப்பட்டவர்கள். அதற்குப் பின்னர் ஏற்பட்ட நிலைமைதான் இது. ஒரு பொறுப்பற்ற அரசாங்கம் ஆட்சியில் இருக்கையில் பகை மறப்பு என்பதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.</p>
<p>ஆகவே பெரும்பான்மை மக்களே சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் பிழைகள் விட்டோம் என்று ஏற்றுக்கொள்ளும் மன நிலை வரும் வரை இந்தக் கமிசனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.</p>
<p><em><strong>பாபு- வன்னி<br />
</strong></em><br />
மார்க்ஸினுடைய வருகை சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்று இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். ஒரு உதாரணத்தை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். நந்திக்கடல் தாண்டி வருவதற்காக மக்கள் முயன்ற வேளை எல்லையில் நிற்பது இராணுவம் தானா என்று பார்ப்பதற்கு சிங்களம் தெரிந்த ஒருவரை அனுப்பினார்கள். அவர் பார்த்துவிட்டு வந்து இராணுவம் தான் இருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு மீண்டும் ஒருவரை அனுப்பி அவரும் அதே பதிலை வந்து சொன்னார். அப்போது முதலாவதாக சென்று பார்த்து வந்தவர் என்னை நம்பவில்லையா எனக்கேட்டபோது இது உங்களில் பிழையில்லை. நாங்கள் வளர்ந்த சூழல் அப்படி என சொல்லப்பட்டது. ஏனென்றால் சந்தேகம் என்பது எமது சூழலோடு ஒட்டிப்பிறந்தது. இது கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப் பாடு. நான் என்னுடைய சொந்த அக்காவின் பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால், நண்பர் களுடன் பேசுவேன். இதற்குக் காரணம் நம்பிக்கை யின்மைதான்.</p>
<p>அதனால்தான் மு.பொ. அப்படிப் பேசிவிட்டார். அதனை மார்க்ஸ் அவர்கள் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இப்போது பகைமை மறப்பு என்பதில் சில விடயங்கள் உள்ளன. இந்த பகைமை மறத்தல் என்பது ஒரு சமூகத் தினுடைய அடிப்படை உரிமைகளை மறத்தல் என்பதற்குச் சமமானதா என்றதொரு கேள்வி இருக்கிறது.</p>
<p>இந்த சீர்திருத்தங்கள், நிவாரண உதவிகள் அல்லது அவர்களுடைய மனோநிலையில் இருக்கிற துன்ப துயரங்களை மறத்தல் என்பது ஒரு சமூகத்தினுடைய அடிப்படையான பிரச்சினைகளை தணித்தல் என்று கருத்தாகும். ஆகவே எங்கே நமக்கு பகைமையை மறத்தல் எங்கே பகைமையை கூர்மைப்படுத்தல் என்பதில் எமக்குத் தெளிவு வேண்டும்.</p>
<p>அடுத்ததாக பன்முகச் சமூகங்களைக் கொண்ட தேசத்தில் இவ்வாறான பிரச்சினைகளை அரசியல் ரீதியான பிரச்சினைகளாகக் காண வேண்டும். வெறும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நிலை காணப்படுகிறது. அதன்மூலம் ஒரு சமூக அசைவை உண்டுபண்ணலாம் என்ற கருத்து இருக்கிறது. மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்து இங்கு மேலோங்கியிருப்பதைக் காணலாம். இவ்வாறான விசயங்கள் ஒரு தனி மனித பிரச்சினைகளைத் தீர்க்கலாமே தவிர சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது எனது கேள்வி.</p>
<p>எனவே அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆழமாகப் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
கருத்துக்கள் வழங்கியவர்களுக்கு நன்றி. இங்கு பேசும்போது நான் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்தி தெரிவித்திருந்தேன். அதை எல்லோரும் கவனித்தாக வேண்டும். தென்னாப் பிரிக்காவையோ வேறு எந்த நாட்டின் உதாரணங் களையும் அப்படியே பயன்படுத்த முடியாது என்பதுதான். ஒவ்வொரு சமூகத்துக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பிரச்சினையின் வேர்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. அரசியல் தீர்வுகள் வேறுபடுகிறது. அந்த வகையில் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான கமிசனோ ‘மன்டேட்டா’ முன்வைத்துவிட முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன வென்றால் பல்வேறு அனுபவங்களின் சாதக பாதகங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் சொல்வதுதான்.</p>
<p><em><strong>சிராஜ்<br />
</strong></em><br />
தலைப்பைக் கொடுத்தது நாங்கள்தான். இலங்கைச் சூழலில் இவ்வாறான உரையாடல் ஒன்றின் தேவை இருப்பதாக உணர்த்தவே இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டது.</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
ஆனால் இந்தத் தலைப்புக் கொடுக்கும்போது எனக்குத் தயக்கம் இருந்தது. பெரும்பான்மை மக்களிடம் போய் பேசுவது வேறு விடயம். பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்துடன் தான் இதனை எடுத்துக் கொண்டேன்.</p>
<p>அந்தக் ‘கான்சப்றில்’ பேசவேண்டிய தேவை இருப்பதாக இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல்வேறு நாட்டு அனுபவங்களை தொகுத்துச் சொல்லும் வகையில் தான் இதனை மேற்கொண்டேன்.</p>
<p>சுமதி சொன்னதுபோல், தென்னாப்பிரிக்காவில் கமிசன் அமைக்கப்பட்டபோது இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. ஒன்று வெள்ளையர்களுக்குச் சலுகைகள் வழங்குவது என்ற விமர்சனமும், ஆனால் வெள்ளையர்கள் என்ன நினைத்தார்கள் என்றால் தொடர்ச்சியாகத் தங்களை இனங்கண்டு பழிவாங்கக் கூடிய திட்டம் என்று. இத்தகைய கமிஷன்களை வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு விதமாகத்தான் அணுகியுள்ளனர்.</p>
<p>வெள்ளையர்கள் அணுகுவதுபோல் கறுப்பர்கள் அணுகுவதில்லை. அதுபோல் கறுப்பர்கள் அணுகியது போல் வெள்ளையர்கள் அணுகுவதில்லை. அந்தச் சந்தேகத்திற்கு தூபம் போடுவது போல் அரசியலும் நடந்து கொண்டிருந்தது. இன்னொன்று மிக முக்கியமான வேறுபாடு. அதை முன்பும் சொன் னேன். தென்னாப்பிரிக்காவுக்கும், இலங்கைக்கும் என்ன வித்தியாசம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகம் அனைத்தையும் இழந்திருக்கின்ற நிலையில், இது குறித்து ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் சர்வதேச அழுத்தத்திற்கு கவலைப்படாத ஒரு அரசாங்கம் இருக்கையில் எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி அடிப்படையான கேள்விதான். இந்தப் பகை மறப்பு ரூத் அன் ரிகொன்சிலியேசன் கொமிசன் என்று அரசாங்கமே அமைப்பதாக சாத்தியம் இல்லா விட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையில் ஒரு உரையாடலும் அது ஒரு பகைமறப்பை நோக்கிய ஓர் செயல்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. அந்த வகையில் சிவில் சொசைட்டியினுடைய பங்கு இங்கு மிக முக்கியமானது. மூன்று சமூகங்களில் உள்ள ஜனநாயக, அறிவுஜீவிகளின் பங்கு முக்கியம்.</p>
<p>இந்த வகையில்தான் இதைப்பற்றி பேசவேண்டிய சூழலில் இருக்கிறோம். மற்றபடி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட எல்லாவிதமான கொடுமைகளுக்கும் விடுதலைப்புலிகள்தான் முழுப் பொறுப்பென்று சுமதி கூறிய கருத்தில் எனக்கு சற்று மாறுபாடுண்டு. அரசாங்கம் கூடுதலான பங்கு இதில் வகிக்கக்கூடிய நிலை இருக்கிறது. எனவே அரசாங்கத்திற்குப் பங்கில்லை என்ற வகையில் பார்த்துவிடாமல், அரசாங்கம் மற்றும் பெருந் தேசிய இனவெறி ஆகிய வற்றை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.</p>
<p><em><strong>சுமதி<br />
</strong></em><br />
நான் என்ன சொன்னேனென்றால் அரசாங்கம் இப்போது ஒரு வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு குறுகிய தேசிய வாதத் துக்குள் அம்புடாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் புலிகளுக்குப் பயந்து தமிழ் மக்கள் எதனையும் செய்யவில்லை. எல்லாத்துக்கும் எல்ரீரீயிடம் போய் கேட்டுக் கொண்டு, இனியாவது அதனைச் செய்யாது அதிலிருந்து மீண்டு வித்தியாச மான அரசியல் பார்வையுடன் அரசாங்கத்தை நம்பிக் கொண்டிராமல், செயற்பட்டாக வேண்டும்.</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
நான் என்ன சொல்ல வந்தேனென்றால், அரசாங்கத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் இதில் பெரும்பான்மைப் பங்கிருக்கிறது என்பதைத் தான்.<br />
இரண்டாவது மனித உரிமைப் பிரச்சினைகளாக மாற்றி, அரசியல் தீர்வு என்பதற்கான முக்கியத் துவத்தினைக் குறைப்பதன் மூலம் சமூகத்தினுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று பாபு சொன்னார். அது மிகச் சரி.</p>
<p>நான் என்னுடைய பேச்சில் ஒரு அரசியல் தீர்வுடன் இணையும் போதுதான் ரூத் அன் ரிகொன்சிலியேசன் என்பது முழுமையாகச் சாத்தியமாகும் என்று தெரிவித்திருந்தேன். அது மிக அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அரசியல் தீர்வைப் பொறுத்த மட்டில் அது இன்று முடக்கப்பட்டிருப்பதானது மிக ஆபத்தான விசயமாக கருதுகிறேன். உங்கள் ஜனாதிபதி ஒரு அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்கள் எங்களுடன் வந்து பேசலாம் என்று தெரிவித்திருந்தபோதிலும், தொடர்ச்சியாக தேர்தலையும், மற்ற  விடயங் களையும் காரணங்காட்டி தள்ளிப் போட்டுக் கொண்டு அதுகுறித்து விவாதங்கள் நடத்தப் படாமலே இருக்கிறது.</p>
<p>திஸ்ஸ விதாரண குழு அறிக்கை உட்பட எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதில் சில விடயங்கள், பொசிட்டிவான விசயங்கள் இருப்பதாக தெரிகின்றது. 13ஆம் திருத்தச் சட்டம் குறித்து சென்னையில் நல்லதொரு கருத்தரங்கு நடத்தினோம். அதில் டாக்டர் பாலகோபால் சிறப்பான ஆய்வொன்றினை முன்வைத்தார். 13வது திருத்தம் அடிப்படையான எல்லாவிதமான உரிமைகளையும் மறுக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. 13வது திருத்தம் என்பது இந்தியாவின் அரசியலமைப்பைப் பார்த்து அடிக்கப்பட்ட ஒரு மோசமான கொப்பி. இது ஒரு Bad copy. குட் கோப்பியாக இருந்தாலும் கூட அதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவின் அரசியலமைப்பு எந்த நாட்டுக்கும் ஒரு மாடலாக இருக்கும் தகுதியற்றது. தவிரவும் எந்த நாடுமே இன்னொரு நாட்டுக்கு மொடலாக இருக்கவும் முடியாது. அரசியல் தீர்வு குறித்து மௌனம் இருப்பதென்பது ரொம்பவும் கவலைக்குரியதாகத்தான் தெரிகிறது.</p>
<p><em><strong>து.அ. ஜெகநாதன்- கொழும்பு<br />
</strong></em><br />
என்னுடைய ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங் கள். இந்தியா ஏன் எங்களுக்குத் துரோகம் செய்தது? ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை? பங்களா தேசத்தை விடுவித்தது போல ஏன் செய்யவில்லை?</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
இந்தியா துரோகம்தான் செய்யும். இந்தியா வந்து உங்களுக்குத் தமிழ் ஈழம் வாங்கித்தரும் என நீங்கள் நம்பியதுதான் நீங்கள் விட்ட பெரிய பிழை. இதை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருந்தோம். ஆனாலும் நீங்கள் நம்பினீர்கள். இன்றும் சிலர் நம்புகிறார்கள். எங்களில் சிலரும் கடைசி வரை இந்த நம்பிக்கையை ஊட்டினார்கள். பேரழிவு ஒன்றிற்கே அது காரணமானது.</p>
<p>வங்கதேசம் பற்றிச் சொல்கிறீர்கள். அது நடந்தது 70களில். நாம் வாழ்வது 2010. இடையில் உலகம் பெரிய அளவில் மாறிவிட்டது. எல்லாவற்றையும் ‘நாஷனல் செய்யூரிறி’ என்பதற்குக் கீழ் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பயங்கரவாத முத்திரை குத்தினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. எந்த நாடும் உதவிக்கு வராது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.</p>
<p>விடுதலைப்புலிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் 36 நாடுகள் அந்த இயக்கத்தைத் தடை செய்தது</p>
<p>செப். 11, 2001க்குப் பிறகுதானே. தேசியம், அடையாளம் என்பதெல்லாம் இரண்டு பக்கமும் கூரான கத்திகள். ஒரு பக்கம் அது நம்மை உறுதி செய்துகொள்ளும் வடிவமாக இருக்கும். இன்னொரு பக்கம் அது மற்றவர்களின் மீதான வன்முறையாக அமையும். மற்றவர்களின் அடையாளத்தை மறுப்பதாக அமையும். உங்கள் ஜனாதிபதி இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருந்தாரே &#8211; இந்த நாட்டில் சிறுபான்மையினரே இல்லை &#8211; என்று. இது ரொம்பவும் ஆபத்தானது. இது சிறுபான்மை மக்களின் அடையாளத்தையே மறுப்பது, இல்லை என்பது. இந்த நேரத்தில் நாம் இந்த அடையாளத்தை வலியுறுத்தித்தான் ஆக வேண்டும். இன்னொன்றை யும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நேபாள உதாரணம். அவர்களும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஆயுதங்களை ஐ.நா. அவையின் மேற்பார்வையில் விட்டுவிட்டு தேர்தலில் பங்கேற்றார்கள்.</p>
<p>80களுக்குப் பின் பல்வேறு உள் அடையாளங்கள் தம்மை உறுதி செய்து கொள்வதை உலகளவில் பார்க்கிறோம். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம். இது நல்லதா, கெட்டதா என்பது வேறு விடயம். நேபாளத்திலும் வேறு எப்போதும் இல்லாத வகையில் ஜனசாதி, தலித்கள், மாதேசிகள் எனப் பல உள் அடையாளங்கள் உருவாயின. இந்த அடையாள விகசிப்புகளை மாவோயிஸ்டுகள் ஏற்றுக் கொண்டார் கள். அதற்குரிய வகையில் தமது திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள். தேர்தல் நடைமுறையில் இந்தப் பல்வேறு அடையாளங்களுக்கு உரிய பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டது. ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் பிழை இந்த உள் அடையாள விகசிப்புகளை ஏற்க மறுத்தது. முஸ்லிம் மற்றும் கிழக்கு மாகாணத்தவரின் அடையாள உறுதியாக்கங்களைப் பகையாகப் பார்த்தது.</p>
<p>‘மேக்சிமலிஸ்ட்’ &#8211; உச்சபட்சக் கோரிக்கை களிலிருந்து நாம் சற்றே இறங்கி வரவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இருதரப்புகளும் இறங்கி வரவேண்டும். ஏற்கனவே தமிழர்கள் தரப்பில் அந்நிலை உள்ளது. இனி அரசாங்கம்தான் தன் நிலையை விட்டு இறங்க வேண்டும். ஆனால் அது வெற்றிக் களிப்பில் மூழ்கி இருக்கிறது. அரசியல் தீர்வு பற்றிப் பேச மறுக்கிறது. ஒரே தேசம், ஒரே இனம் என்கிறது. இது மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு எதிராகவும், கண்ணியமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாகவும் தான் வெளியிலிருக்கும் எங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். அப்போதுதான் எங்களுடைய ஆதரவுக்கும், உங்க ளுடைய தயார் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் ஒரு ஒத்திசைவு ஏற்படும். எல்லோரும் தத்தமது ‘மேக்சிமலிஸ்ட்’ நிலைபாட்டிலிருந்து இறங்கி வரவேண்டும். இறந்தகால அநீதிகளைச் சொல்லி, எதிர்காலப் ‘பொற்காலத்தை’க் காட்டி சமகால மக்களின் வாழ்வை அழித்துவிடக் கூடாது.</p>
<p><em><strong>அப்துல் வகாப்<br />
</strong></em><br />
போராட்டம் என்பது சக்தியின் மூலமாக கிளர்ந்து வரவேண்டும் என்று சுமதி குறிப்பிட்டிருந்தார். அப்படியனால் எல்.ரி.ரி.ஈ. போராட்டத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?</p>
<p><em><strong>சுமதி<br />
</strong></em><br />
நான் இங்கு பிரச்சினையான விடயங்களைச் சொல்லப் போகிறேனோ தெரியவில்லை. எனக்கு தமிழ் என்பதில் தீவிர நம்பிக்கை இல்லை. இந்த அடையாள அட்டையை செக்பொயின்றில் எடுத்து பார்த்து நீங்கள் தமிழா என்று அதிலிருக்கும் யாரோ கேட்பான். என்ற நிலைமையைப் பொறுத்து ஓம் என்று சொல்வேன் அல்லது பேசாமலிருப்பன். அதற்காக மற்றவர்கள் தங்களுடைய அடையாளங் களை மறுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.</p>
<p>நாங்கள் தமிழராக இருக்கிறம், மற்றது ஒரு யுனிவசிட்டியில் படிப்பிக்கும் பொது சிங்கள மாணவனுக்கும் படிப்பிக்கவேணும், நான் போராட்டம் என்று சொன்னது ஆயுதப் போராட்டத் தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதில் ஆயுதப் போராட்டங்கள் வரலாம். ஆயுதப் போராட்டங்களை நான் முற்றிலும் நிராகரிக்கும் ஆளும் இல்லை. நமது சமுதாயத்தில் 30 ஆண்டு கால அனுபவத்திற்குப்பிறகு நான் மார்க்ஸ் சொன்னதற்கு ஒரு மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும். தமிழ் மக்களது குறுகிய நிலைக்கு கொண்டு வந்தது விடுதலைப்புலிகளது செயற்பாடுகள்.</p>
<p>இந்தப் போராட்டத்தினூடாக பெரும்பான்மை யினர் என்ற வகையிலும் பார்த்தீர்களானால், அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இறந்த போர்வீரர்களது பிள்ளைகள், மனைவிகள் அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கொம்பன்சேசன் எடுப்பதற்கு இரண்டு மூன்று ஆமிக்காரர்களோடு படுத்துத்தான் எடுக்க வேண்டியிருக்கு. நான் இதைக் கொச்சையாக சொல்ரன். நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவர்களும் பலமிழந்துதான் இருக்கிறார்கள். எனவே நீங்கள் வித்தியாசமான முறையில் சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.</p>
<p><em><strong>சிராஜ்<br />
</strong></em><br />
போரினுடைய அனுபவங்களை நிறையவும் பார்த்திருக்கிறோம். எல்லோருக்கும் போரின் வடு இருக்கும். இதற்குமுன் பேசிய விடயங்களை விட்டுவிடுவோம். போரின் வடுக்களைப் பற்றி இப்போது பேசாமல் எதிர்காலத்தைப் பற்றியும் எதிர்வரும் பத்தாண்டுகளில் எவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது என்பது பற்றியும் பேசுவோம்.</p>
<p>நல்ல ஒரு இலங்கை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முஸ்லிம் தேசப்பிரகடனம் நாங்கள்தான் செய்தோம். ஆனால், அதில் கடந்து செல்லவேண்டிய தடங்கள் நிறைய இருக்கிறது என்று இப்போது புரிகிறது. ஏனென்றால், பெரும்பாலான முஸ்லிம்கள் பல சிங்களக் கிராமங்களிலே தீவு தீவுகளாக வாழ்கிறார்கள் சொந்த அதிகாரங்களே இல்லாமல் வாழ்கிறார்கள். உள்ளூராட்சி சபைகளில் கூட குறைந்த அதிகாரங்களையும் பெற முடியாமல் வாழ்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கிருக்கிறது. மலையக மக்களுக்கிருக்கிறது.</p>
<p>உரையாடல் திசை திருப்புவதனைத்தான் விரும்புகிறேன். தனிமனிதர்களுக்குள்ளே மட்டுமே நாம் பேசுகிறோம். ஏன் சமூகங்களில் செயற்பாடாக இதனை மாற்றக்கூடாது. இதுதான் எங்களது கேள்வி. பேராசிரியர் மார்க்ஸ் நன்றாக அறிந்தவர் இதில் கருத்துச் சொல்லலாம். உலகமயமாதல் சூழலில் எல்லாமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மன வல்லமை இருந்தால் மட்டுமே எதையுமே சாதிக்க முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. ஏன் தமிழ் நண்பர்களை முஸ்லிம்களும், முஸ்லிம் நண்பர்களை தமிழர்களும் பராமரிக்கக் கூடாது. அதுதான் இன்றைய கேள்வியே தவிர இலங்கை அரசாங்கத்தின் குரோதங்களை, புலிகளுடைய குரோதங்களைப் பேசிப் பேசி இருப்பதல்ல, உரையாடலிலே பல விடயங்கள் பேசப்பட இருக்கின்றன.</p>
<p><em><strong>து.அ. ஜெகநாதன்,- கொழும்பு<br />
</strong></em><br />
நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம். பங்களாதேஷ் எவ்வாறு உருவானது? முஜிபுர் ரஹ்மான் விமானப் படை, கடற்படை எல்லாம் வைத்திருந்தாரா, பங்களாதேஷ் இன்றைக்கு ஒரு சுதந்திர நாடாக இல்லையா, அது எப்படி இந்தியா இராணுவத்தாலே தானே உருவாக்கப்பட்டது. இங்கேயும் போராட் டத்தை நடத்தியவர்கள் அவ்வாறான சூழலை உருவாக்காமல் இந்தியாவை தங்களது எதிரியாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் பெரிய வேதனை.</p>
<p>மற்றையது. உங்களுக்குத் தெரியும். கம்போடியா வில் பொல்பொட் ஆட்சி செய்தார் அவருடன் கூட இருந்த கும் சென் கருத்து மோதல் ஏற்பட்டு அவருடைய கண்ணையும் இழந்து, மனைவியையும் இழந்து வியட்நாமுக்குப் போய் வியட்நாம் இராணுவத்தைக் கூட்டி வந்து பொல்பொட்டை காட்டுக்கு அனுப்பினார். அவர் சொந்த முயற்சியில் செய்யவில்லை.</p>
<p>இன்றைக்கு நேபாளத்தில் போராட்டத்தை நடத்திய பிரஜண்டா வெற்றி பெற்ற போதும் 3 மாதம் தான் அவரால் பிரைம் மினிஸ்டராக இருக்க முடிந்தது. அவரால் ஏன் இருக்க முடியாது என்றால் இந்தியாவை எதிர்த்து ஒரு அரசு நேபாளத்தில் இருக்க முடியாது என்பதுதான். அப்படியென்றால் சீனப்படை நேபாளத்துக்குள் வந்தால் பிரஜண்டா ஆட்சியமைக் கலாம். அல்லது காஷ்மீர் எப்போது தனி நாடு ஆகும் என்றால் பாகிஸ்தான் காஷ்மீரை விடுவித்து அந்த மக்களிடம் கொடுத்தாலேயழிய மற்றபடி முடியாது. வேண்டுமென்றால் சர்வதேசத் தலையீடு கள், அரசியல் தீர்வு கூடுதல் அதிகாரம் ஏதாவது ஏற்படுத்தப்படலாம். ஆயுதப் போராட்டத்தால் வெல்ல முடியாது. சீக்கியர்களுடைய காலிஸ் தானுக்கும் இதுதான் நடந்தது. பாக்கிஸ்தான் பஞ்சாப்புக்குள் வந்து ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுத்திருந்தால் சீக்கியர்கள் ஒரு தனிநாட்டை அடைந்திருப்பார்கள். இன்று ஒரு சீக்கிய இயக்கத் தலைவர்கள் கூட இல்லாதவாறு இந்தியா அவர்களை அழித்துவிட்டது.</p>
<p>இதேபோலத்தான் வடகிழக்கில் டால் டெங்கா, கடைசியாக போன கிழமை கூட நாகாலாந்தில் நாகா தலைவர்கள் கோலண்டிலிருந்து வந்து சிதம்பரம் போன்றவர்களைப் பார்த்துசில சலுகைகளுக்காகவும், அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் கையேந்தும் நிலை வந்துவிட்டது. லால்கரில் மாவோயிஸ்டுகள் போராடுகிறார்கள்.</p>
<p>தெற்காசிய இந்தச் சூழலில் இந்தியாவை இலங்கையில் நாங்கள் பகைத்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முடியுமா? அல்லது இது நல்லதொரு யுக்தியா ராஜதந்திரமான என்பதுதான் என்னுடைய கேள்வி. உதாரணங்கள் பல சொல்லலாம். அங்கோலாவில் இருந்த ஆட்சியைக் காப்பதற்காக எங்கோ இருந்த கியூபா ஒரு லட்சம் படைகளை அனுப்பியது. அதேபோல் கொரிய யுத்தத்தில் வடகொரியாவை மட்டுமாவது மீட்க முடிந்ததற்குக் காரணம் சீனா வினுடைய ஒரு லட்சம் படைகள் வடகொரியாவில் அமெரிக்க இராணுவத்துடன் மோதிச் செத்தார்கள். மா வோ சேது வுங் உடைய மகன் உட்படச் செத்தார்கள். இப்படி அந்நிய நாட்டினுடைய தலையீடு, அரசியல், இராஜதந்திர, உதவிகள் இல்லாமல் இனிவரும் காலத்தில் சாத்தியமா?</p>
<p><em><strong>பிர்தவுஷ், மட்டக்களப்பு<br />
</strong></em><br />
பகைமறப்பு மற்றும் மற்றமை குறித்துப் பேசும் பொழுது இனம், சாதி, தேசியம், அரசியல் உரிமைகள் போராட்டம், நிலம், ஆயுதம் என்றெல்லாம்தான் பேசுகிறார்கள். இதெல்லாம் தாண்டி இந்த கலந்துரை யாடலில் ஒரு தொடக்கப் புள்ளியை பார்க்கிறேன். கடந்த 18 மாத கால அனுபவம் ஒன்று எனக்கிருக் கிறது. நான் ஒரு மௌலவி என்ற வகையிலும், இந்தக் கலந்துரையாடலில் நான் கவலைப்படுகிறேன். சிங்களச் சகோதரர்களும் வந்திருந்தால் பிரயோசன மாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.<br />
ஒரு சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மௌலவி என்ற வகையில் மதத் தலைவர்கள் ஊடாகச் செய்து வந்த வேலைகள் அனுபவம் எனக்குள்ளது.</p>
<p>மார்க்ஸ் அவர்களுடைய பகை மறப்பு தொடர் பான விரிவுரையும், கருத்துக்களும் முக்கியமானவை. வயதில் சிறியவராக இருந்தாலும் சிராஜ் நினைக்கிற நல்ல இலங்கையை அடைவதற்கான முயற்சிக்குப் பங்காற்றப் போகிறேன் என்பதில் நான் சந்தோசப் படுகிறேன். நீங்கள் எல்லோரும் கூட சந்தோசப்பட வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்த துறவிகள் எந்தளவுக்கு பகைமையை எண்ணக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அன்று ஒரு பகிரங்க சபையில் எங்களது மூத்த தலை முறை விட்ட பிழையை நாங்கள் விடமாட்டோம் என்று சொன்னதை நாங்கள் பார்க்கிறோம். தெகியத்த கண்டய, மாத்தளை, அனுராதபுரம் ஆகிய பிரதேசத் திலும், மட்டக்களப்பில் இந்து சமயத் தலைவர்கள், பிக்குமார், மௌலவிமார் பகைமறப்பு பற்றி கருத்தாடுகிற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.<br />
எனவே இந்த சந்திப்பும் இந்தக் கருத்தாடலும் நாடு நல்லவிதமாக நகர்வதற்கு ஆரோக்கியமான செயற்பாடாகக் கருதுகிறேன். ஆகவே இப்படியான இந்த கருத்தாடல்களுக்கு பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நான் கருதுகிறேன்.  அது அவர்களுடைய கருத்துக்களை உள்ளீர்க்கவும், நமது கருத்துக்களை உட்செலுத்தவும் முடியும்.</p>
<p><em><strong>மர்சூம், சட்டத்தரணி<br />
</strong></em><br />
இலங்கையினுடைய அரசியல் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தான் அடையாளப் படுத்தப் பட்டுள்ள பிரச்சினை அரசியலாக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியா, வளப்பங்கீடு பாதுகாப்பு போன்ற நாளாந்தப்  பிரச்சினை சார்பான ஒரு மையப் புள்ளியை நோக்கி இலங்கையினுடைய இந்தத் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்கள், பின்னடைந்தே உள்ளன.</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக் கிறது. உலக மாற்றங்களைக் கணக்கிலெடுக்காத பிழையை நாம் செய்ய முடியாது. பழைய உதாரணங்கள் பயனில்லை.</p>
<p>நேபாளத்தில் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த மாவோயிஸ்டுகள் என்ன செய்ய முடிந்தது என்று நண்பர் கேட்டார். நீங்கள் சொன்னது உண்மைதான். அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்தது.</p>
<p>ஒன்றைக் கவனிக்க வேண்டும். தேர்தலில் மாவோயிஸ்டுகள் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைத் தான் பெற முடிந்தது. மற்ற இரு பங்கு வாக்கு களையும் பிற கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன.</p>
<p>இன்று மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லா விட்டாலும் பிரச்சினைகளை வீதிக்குக் கொண்டு வந்துள்ளனர். பெரிய அளவில் மக்களைத் திரட்டிப் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். அந்த வாய்ப்பையும் இன்று இங்கே தமிழர்கள் இழந்துள்ள நிலையை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும்.</p>
<p>இந்தியாவைப் பொருத்தமட்டில் எப்படியாவது நேபாள மாவோயிஸ்டுகளை மீண்டும் ஆயுதத்தை எடுப்பதைத்தான் விரும்புகிறது. அதன்மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை ஓரங் கட்டிவிடவும் முடியும். அதற்கு மாவோயிஸ்டுகள் இடம் கொடுக்காததைக் கவனிக்க வேண்டும்.</p>
<p>லால்கர் போராட்டம் பற்றிச் சொன்னார்கள். எந்தப் பெரிய ஆயுத பலமும் இன்றி அங்குள்ள பழங்குடி மக்கள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மத்திய-மாநில அரசுகளை உள்ளே அண்டவிடாமல் அங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் அங்கே ஊடுருவிய பின்னரே அவர்களை ஒடுக்க முடிந்தது.</p>
<p>தமிழ் அடையாளம் தேவையில்லை என சுமதி சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த அடையாளத்தையே மறுக்கிற இன்றைய சூழலில் அதை வலியுறுத்துவது தேவை என்றே நான் கருதுகிறேன்.</p>
<p><em><strong>யோதிலிங்கம்<br />
</strong></em><br />
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முரண்பாடு களை களைகின்றார்கள். அவர்களுக்கு வெளியே இருந்து வருகிற அடக்குமுறைகளும் உண்டு. அதேவகையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும் இருக்கின்றது. அந்த முரண்பாட்டை ஒரு ஆதிக்க முரண்பாடாகக் கொள்ளாமல் இரண்டு தேசியங்களுக் கிடையிலான முரண்பாடாக வரையறுத்து அதனடிப்படையில் நாங்கள் பேசுவது என தீர்மானித்துக் கொள்வது நல்லது என நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல. எனவே அவர்களுடைய அடையாளத்தை அங்கீகரித்து அதனை எப்படி அந்தக் கலந்துரையாடலை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது என்று நாம் சிந்திப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன்.</p>
<p>சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் இதிலொரு முக்கியமான நெருக்கடியிருக்கிறது. சிங்கள சமூக உருவாக்கம் குறித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். சிங்கள பௌத்த உருவாக்கம் சமூக அரசியலுக்குள் மாத்திரமல்ல மதம், மொழி, வரலாறு எனப் பல விடயங்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் வந்தது. அதிலிருந்துதான் சிங்கள அரசு உருவாக்கம் வந்தது. ஆகையால் அந்தச் சமூக உருவாக்கம் பலமாக இருப்பதனால் தான் அதில் கை வைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையான நிலை. இதனாலேயே எங்களுக்குள்ள சிக்கல். ஏனென்றால் எங்களோடு இருந்த வடசிங்கள நண்பர்களை நாம் இழந்து விட்டோம். வாசுதேவ நாணயக்காரவையும் இழந்துவிட்டோம். போருக்குப் பிறகு தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு இப்பொழுதைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.</p>
<p>மற்றையது சிறுபான்மை என்ற சொற்கள் அடிக்கடி பாவிக்கப்பட்டன. அதைக் கேட்கவே சகிக்கவில்லை. தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ சிறுபான்மை கள் அல்ல. அவர்கள் தேசிய இனங்கள்.</p>
<p><em><strong>அ.மார்க்ஸ்<br />
</strong></em><br />
விரிவாகப் பலரும் கருத்துக்களைப் பேசியிருக் கிறீர்கள். இது நல்லதொரு விவாதத்துக்கான உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என நம்புகிறேன். எல்லோருக்கும் என் நன்றிகள்.</p>
<p><strong>தொகுப்பு &#8211; தேவஅதிரன்</strong></p>
<p><!--Session data--></p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>நிகழ்வுப் பதிவுகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/492/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/492/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=492&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/03/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/a-marx1.jpg" medium="image">
			<media:title type="html">A.marx</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%99/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%99/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 18:29:48 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[நேர்காணல்]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=430</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக் குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்து டன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா? நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=430&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010</p>
<p><a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/shoba-01.jpg"><img class="alignnone size-full wp-image-431" title="shoba-01" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/shoba-01.jpg?w=455&#038;h=303" alt="" width="455" height="303" /></a></p>
<p><strong><em>என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக் குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்து டன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா?<br />
</em></strong></p>
<p>நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளதுதான். என்னுடைய அரசியல் இலக்கிய நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் காலத்திற் குக் காலம் மாறி வந்தவைதான். ஆனால் நான் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அந்த நிலைப் பாட்டை முழுமையாக நம்பும்போது அந்த அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டிற்காக ஓயாமல் போரிடுவதுதான் நேர்மையான செயல் என்று நான் கருதுகிறேன். இதில் அலுப்பென்றும் சலிப்பென்றும் எதுவுமில்லை.</p>
<p>சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பது போலவே இலக்கியத்தளமும் வர்க்கங்களாலும் சாதியாலும் பால்நிலையாலும் மேல் கீழாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாஸிசத்தின் அடிவருடிகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதியப் பற்றாளர்களும் குறுந் தேசியவாதிகளும் இலக்கியத் தளத்தினுள் தீவிரமாக இயங்கும்போது நாம் அவர்களைத் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தேயாக வேண்டும். இதிலென்ன சலிப்புள்ளது. உண்மையில் இதுவொரு உற்சாகமான வேலை.</p>
<p>தவிரவும் இலக்கியத்தளத்திலோ அரசியல் வெளிகளிலோ நான் வரித்துள்ள கருத்துகள் மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்துகளாகவே இருக்கும் போது எனக்கு இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகமிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களிலும் நான் ஒருவனே ட்ரொஸ்கியவாதி. நான் புலம்பெயர் சிறுபத்திரிகை களில் எழுதத் தொடங்கிய காலத்தில் ட்ரொஸ்கியம் சார்ந்தே எனது கருத்துப் போர்கள் நிகழ்ந்தன. அம்மா மற்றும் எக்ஸில் இதழ்களைத் தளமாகக்கொண்டு நாங்கள் மிகச் சிலர் தலித்தியம், பின்நவீனத்தும், விளிம்புநிலை அரசியல் குறித்த உரையாடல்களை, விவாதங்களைப் புகலிடத்தில் ஆரம்பித்தபோதும் சுற்றி நின்ற கொடும்பகையை எதிர்கொள்ள ஓயாமல் கருத்துப்போர் நடத்த வேண்டியிருந்தது.<span id="more-430"></span></p>
<p>ஈழப் போராட்டத்து அரசியல் என்று வரும்போது நான் புலிகளையும் இலங்கை அரசையும் கடுமையாக எதிர்த்து எழுதுபவன். நம்மிடையே இரண்டில் ஒரு பக்கமும் சாயாத இலக்கியவாதிகள் மிகச் சொற்ப மானவர்களே. இந்த நிலையில் புலிகள் ஆதரவு எழுத்தாளர்களையும் அரசு ஆதரவு எழுத்தாளர் களையும் கடுமையாக எதிர்த்து, புலிகளாலும் அரசாலும் கொல்லப்பட்ட மக்களின் இரத்தத்தின் பேராலும் கண்ணீரின் பேராலும் எழுதாமலிருக்கும் ஒருவன் நானுமொரு எழுத்தாளன் என என்ன மயிருக்கு சொல்லிக்கொள்ள வேண்டும். புலிகளின் ஆதரவாளர்களையும் அரசு ஆதரவாளர்களையும் எதிர்த்து எழுதுவதில் அலுப்போ சலிப்போ ஈவிரக்கமோ காட்டவே கூடாது.</p>
<p>என்மீதான அரசியல் விமர்சனங்களிற்கு அப்பால் அவை அவதூறுகள் என்ற நிலையை அடையும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லைத்தான். ஆனால் அந்த அவதூறுகளின் துணையால் எனது அரசியல் நிலைப்பாடுகள் மீது சேறடிக்கும்போது அந்த அவதூறுகளிற்கும் உடனுக்குடன் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. வேறு என்னத்தைச் செய்ய!<br />
<strong><em>விவாதங்களிலும் தடாலடிப் பதில் போரிலும் இறங்கி உங்கள் படைப்புத்திறனை, அதன் விளைச்சலை சுருக்கிக் கொள்கிறீர்களே?<br />
</em></strong></p>
<p>படைப்புத்திறன் என்ன ஒரு கோப்பை நீரா தீர்ந்துபோய்விட? இறைக்கிற கிணறுதான் சுரக்கும். நேரம் ஒரு பிரச்சினைதான், எனினும் நேரத்தைச் சாட்டுச்சொல்லி பிற்போக்குவாதிகளின் கருத்துகளை மௌனமாகச் சகித்துக்கொண்டிருப்பதைவிட மேலும் ஒரு மணிநேரம் கண்விழித்திருந்து அவர்களிற்கு எதிர்வினையாற்றவே நான் விரும்புகிறேன்.</p>
<p><strong><em>ஆயுதப் போராட்ட அரசியலின் கசப்புகள் அதன் விளைவுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமும் அரசியலும் என்று சொல்லலாமா?<br />
</em></strong></p>
<p>யுத்தம் மட்டும்தானே வாழ்க்கையாயிருந்தது. வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும், யுத்தம் என்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன. எனக்கு ஏழு வயதாயிருந்தபோது பிரபாகரனால் துரையப்பா பொன்னாலையில் கொல்லப்பட்டார். எனக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தபோது பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். இடைப்பட்ட காலமென்பது யுத்தமும் யுத்தம் சார்ந்த வாழ்வும் தானே. பிரான்ஸ§க்கு ஓடிவந்துவிட்டாலும் மனமும் செயலும் தாய்நிலத்தை மையப்படுத்தித்தானே யிருந்தன. பிரான்சுக்கு வந்த இந்தப் பதினேழு வருடங்களில் தேடியது அந்நியன் என்ற புறக்கணிப் பையும் கடனையும் நோயையும் தவிர வேறெதுவு மில்லை. ஒரு தீவிர, சுறுசுறுப்பான அரசியல் பிராணியான எனக்கு பிரஞ்சு அரசியலிலோ பிரஞ்சு இலக்கியத்திலோ பிரஞ்சுக் கலாசாரத்திலோ ஒட்டவே முடியாமல் போய்விட்டது. இன்றுவரை தடக்குப் படாமல் எனக்குப் பிரஞ்சுமொழி பேசவராது. நான் யுத்தத்தின் குழந்தை. என்னைப் போன்றவர்களிற்கு எங்களின் மரணம்வரை யுத்தத்தின் வடுக்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.</p>
<p>ஆயுதப் போராட்டம் வெறுமனே கசப்புகளை மட்டும்தான் எனக்குக் கொடுத்தது என்றும் சொல்லமாட்டேன். நூற்றாண்டுகளாய் அரசியல் உணர்வின்மையாலும் அடிமைக் கருத்தியலிலும் உழன்றுகொண்டிருந்த ஈழத் தமிழ்ச் சமூகத்தை ஆயுதப் போராட்டம் விழித்தெழச் செய்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சமூகத்தையும் அது சிங்களப் பேரினவாத அரசுகளிற்கு எதிரான அரசியல் கூட்டு மனநிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மனிதர்களும் பெண்களும் அரசியல் வெளிக்கு வந்தார்கள். ஆயுதப் போராட்டம் ஈழ மக்களின் பிரச்சினையை சர்வதேச அளவில் பரப்புரை செய்வதற்கு காரணியாயிருந்தது. ஈழப் போராட்டம் கசப்பான பக்கங்களை மட்டுமல்ல இத்தகைய அருமையான பக்கங்களையும் கொண்டதுதான்.</p>
<p>என்னுடைய அரசியலும் இலக்கியமும் ஈழப் போராட்டத்தை மையப்படுத்தித் தொடங்கியது எனினும் கடந்த இருபது வருடப் புலம்பெயர்ந்த வாழ்வு பல்வேறு வகையான அரசியல் போக்கு களையும் இலக்கியப் போக்குகளையும் பயிலும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. யாரும் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ நான் என்னை ஒரு மார்க்ஸியவாதியாகவே அடையாளப் படுத்துவேன். என் இன்றைய அரசியலும் இலக்கியமும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது.</p>
<p><strong><em>மார்க்ஸியம் என்றால் எவ்வகைப்பட்ட மார்க்ஸியம்? மார்க்ஸியத்துக்குள்ளும் பல்வேறு போக்குகள் உள்ளனவே?<br />
</em></strong></p>
<p>மார்க்ஸியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான அறம், ஒரு குறியீடு. மரபு மார்க்ஸியத்தின் போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸியம் எதிர்கொள்ளும் கேள்விகள், மார்க்ஸிய அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் மார்க்ஸியர் களே நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. மார்க்ஸியத்தின் அடிப்படையில் புதிய பார்வைகளும் விமர்சனங்களும் கோட்பாடு களும் உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு அரசியற் செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான மார்க்ஸியம்.</p>
<p><strong><em>உங்களுடைய கதைப் பிரதிகள் பல்வேறு காலகட்டங்களையும் முக்கியமான சம்பவங் களையும் ஆவணப்படுத்தும் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் இதில் உண்மைச் சம்பவங்கள் எவை, புனைவு எவை என்கிற குழப்பமும் வரலாற்றுத் தடுமாற்றமும் வாசகனுக்கு ஏற்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>உங்கள் கேள்வியில் ஒரு குற்றம் சாட்டும் தொனியை நான் அடையாளம் காண்கிறேன். எது வரலாறு, எது புனைவு என வாசிப்பவருக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்துமளவிற்குப் புனைவை நம்பகமான மொழியில் நான் எழுதுகிறேன் என்பதற்காக முறைப்படி நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். கிடக்கட்டும் விடுங்கள்.<br />
வரலாற்று நிகழ்வுகளின், பாத்திரங்களின் பின்னணியில் ஒரு புனைவை உருவாக்குவது மிக வழமையான ஒன்றுதான். எடுத்துக்காட்டுகளிற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை, ஈழப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘லங்காராணி’, ‘புதியதோர் உலகம்’ நாவல்கள் அவ்வகைப்பட்டவையே.<br />
வரலாற்றுத் தடுமாற்றம் ஒரு தேர்ந்த வாசகருக்கு ஏற்பட வாய்ப்பேயில்லை. மார்க்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை அவர் பாவெலின் கதையாகவே படிக்கிறார். சோவியத் புரட்சி குறித்த துல்லியமான வரலாறு அவருக்குத் தேவைப்பட்டால் அவர் ‘ஜோன் ரீடு-ன் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ நூலைப் படிக்க வேண்டியதுதான்.</p>
<p>வரலாற்று இலக்கியப் பிரதியை முழுமையான வரலாற்று ஆவணமாக வரையறுக்கத் தேவையில்லை. அப்படி வரையறுத்தால் ராமர் பாலம் போலவும் ராம ஜென்மபூமி போலவும் வேண்டாத இழவுகள்தான் பிரச்சினைகளாகக் கிளம்பும். வரலாற்றை அடிப்படை யாகக் கொண்ட இலக்கியப் புனைவுப் பிரதிகள் வரலாற்று ஆவணங்கள், வாய்மொழிக் கதைகள், தகவல்கள் போன்றவற்றொடு புனைவையும் கலந்தே எழுதப்படுகின்றன. இதற்குத் தமிழின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’யையும் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலையும் நான் சொல்வேன்.</p>
<p>வரலாற்றுச் சம்பவங்களை நான் திரித்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அதைக் குறித்து விவாதிக்கலாம். அதைவிடுத்து வரலாற்றையும் புனைவையும் கலந்து எழுதுகிறீர்களே எனக் கேட்டால் அதை இலக்கியம் அனுமதிக்கும் என்று மட்டுமே சொல்லலாம்.</p>
<p><strong><em>தமிழ்ச்சூழலின் எதிர்ப்பிலக்கிய எழுத்தில் முக்கியமானவர் நீங்கள், இந்த எதிர்ப்பிலக்கியம் அல்லது மாற்று இலக்கியத்தின் அடைவுகளாக இன்று நீங்கள் காண்பது எதனை?<br />
</em></strong></p>
<p>நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் சிறுபத்திரிகைகள் சார்ந்த இலக்கியப் பரப்பு மிகச் சிறிது. தமிழ்த் தேசியம், சாதியப் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் மற்றும் பால்நிலையால் கீழாக்கி வைக்கப்பட்டவர் களின் பிரச்சினைகள், கலாசார அடிப்படைவாதம் போன்றவை குறித்துச் சிறுபத்திரிகைத் தளத்திலும் அறிவுத்தளத்திலும் ஒரு மாற்றுப் பார்வையை உருவாக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம்.</p>
<p>அடைவுகள் என்று குறிப்பிட்டுச் சொல்ல இதுவரை ஏதுமில்லை. அவ்வளவு சுலபமாக எல்லா ஆதிக்க சக்திகளும் நமக்கு வழிவிட்டுவிட மாட்டார்கள்.</p>
<p><strong><em>எதிர்ப்பிலக்கியம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் உணரமுடியும். அதுவும் இலங்கைத் தமிழ்ச் சூழல் சார்ந்த எதிர்பிலக்கியவாதிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் இதனை நீங்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>எழுத்தின் வழிதான் எதிர்கொள்கிறேன். ஓயாமல் செயற்படுவதால் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். பாஸிசத்தை எதிர்கொள்வதற் கான ஒரேவழி அதன் கண்களை விடாமல் உற்றுப் பார்ப்பதுதான் என்பார் தருண் தேஜ்பால்.</p>
<p><strong><em>விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும், தொடராக விமர்சித்தே வந்திருக்கிறீர்கள், விடுதலைப்புலிகளின் இராணுவ அரசியல் தோல்வியையும், அரசாங்கத்தின் இராணுவ, அரசியல் வெற்றியையும், கடந்த ஒரு வருடத்துக் குள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>விடுதலைப் புலிகளின் தோல்வி எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான். அவர்கள் எப்போது மக்கள்மீது அதிகாரப்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் களோ அப்போதிலிருந்தே அவர்களின் அரசியல் தோல்வி தொடங்கிவிட்டது. இலங்கை அரசின் புலிகளின் மீதான இராணுவ வெற்றி என்பது சர்வதேச வல்லாதிக்கவாதிகளின் இராணுவ, நிதி மற்றும் திட்டமிடல் உதவியுடன் சாத்தியமாகிய ஒன்று.<br />
அநேகமாக இனிப் புலிகள் குறித்துப் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றுதான் கருதுகிறேன். புலித்தலைமை இயக்கத்தின் அனைத்து அதிகாரங் களையும் செயற்பாடுகளையும் மையத்திலேயே குவித்து வைத்திருந்ததால் தலைமையின் அழிவோடு அந்த இயக்கமும் முற்றாகச் செயலிழந்துபோனது. புலிகள் இயக்கம் இனிக் கட்டியெழுப்பப்பட முடியாத ஒன்று. ஆயுதப் போராட்டம் இனி ஈழத்தில் சாத்தியமே கிடையாது என்பதை அரசின் இராணுவப் பலத்திலிருந்து அல்லாமல் ஈழத் தமிழ் மக்களின் பட்டுக் களைத்துப்போன மனநிலையிலிருந்து சொல்கிறேன்.</p>
<p>இப்போதைய பிரச்சினை மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசுதான். மகிந்த ஒட்டுமொத்த இலங்கைத் தீவு முழுவதும் தனது எல்லையற்ற அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். சட்டம், நீதி எல்லாமே அவரினதும் அவரின் குடும்பத் தினரினதும் சட்டைப் பைக்குள்தான் கிடக்கின்றன. சிங்கள இராணுவ உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையே இந்த அரசு நீதிக்குப் புறம்பாகச் சிறையிலடைத்தும் கொலை செய்தும் வரும்போது சிறுபான்மை இனங்களின் நிலையை என்னவென்று சொல்வது.</p>
<p><strong><em>அண்மைய பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் பலகூறாக தேர்தலை எதிர்கொண்டன, இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து&#8230;?<br />
</em></strong></p>
<p>உண்மையில் அவை ஆயுதக் கலாசாரத்திற்கு எதிரான வாக்குகளே என்று கருதுகிறேன். பொதுப் புத்தியை நாடிபிடித்து அறிவதில் பழம்தின்று கொட்டைபோட்ட தமிழரசுக் கட்சியின் மூத்த தலைகள் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட பத்மினி, கஜேந்திரன் போன்றவர்களைப் புத்திசாலித்தனமாகக் கழற்றி விட்டு  சமூக மதிப்புப் பெற்ற வெள்ளை வேட்டிக் கனவான்களான சரவணபவன் போன்றவர்களை உள்வாங்கிக்கொண்டார்கள். கடும் தேசியவாதம் பேசிய சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடுமையாகத் தோல்வியைத் தழுவ மிதவாதம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொண்டுள்ளது.</p>
<p>இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னால் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட அதே திருட்டுக் கும்பல் மறுபடியும் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருப்பதே தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம். ஆனால் தேர்தலில் போட்டியிட்ட மற்றவர்கள் எல்லோரும் இவர்களை விட மோசமானவர்கள் என்பதுதான் தீவின் ஒட்டுமொத்த அறம் சார்ந்த அரசியல் வீழ்ச்சிக்கான அடையாளம்.</p>
<p><strong><em>இலங்கையின் ஆளும்வர்க்கம், பிராந்திய, உலகளவிலான அதிகாரவர்க்கத்திற்கு முழு நாட்டினையும், நாட்டு மக்களின் இறைமை யையும் தாரைவார்த்து வருவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>பொதுச் சொத்துக்கள் பன்னாட்டு நிறுவனங் களிற்கு விற்றுத்தள்ளப்படுவதாலும் உலக வங்கி யிடமும் சர்வதேச நாணய நிறுவனத்திடமும் மேற்கு நாடுகளிடமும் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கை அரசு வகை தொகையில்லாமல் கடன்களை வாங்குவதாலும் இலங்கையின் மீது வல்லாதிக்கவாதிகளின் பிடி இறுகிக்கொண்டே வருகிறது. இவற்றைச் செய்து கொடுப்பதால் இலங்கை அரசின் அதிகார வர்க்கமும் நாட்டின் மிகச்சில செல்வந்தக் குடும்பங்களும் ஊழல் பணத்தாலும் ஒப்பந்தக் கூலிகளாலும் கொழுத்துப் போய்க் கிடக்கிறார்கள்.</p>
<p><strong><em>இது தவிர்க்க முடியாது என்று வாதிடுபவர்களும் உள்ளனர், இன்றைய சர்வதேச அரசியல் சூழல், மறு காலனியாக்கம், உலகமயமாக்கம் போன்ற விடயங்கள், இலங்கையில் எந்தளவிலான தாக்கத்தையும் அனுகூலத்தையும் பிரதிகூலத் தையும் விளைவிக்கும்?<br />
</em></strong></p>
<p>தவிர்க்க முடியாது என்றால் அதை எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு நாம் அழிந்துபோவதா? உலகமயமாக்கலால் எந்த மூன்றாம் உலக நாட்டு மக்களிற்கும் நன்மை கிடையாது. அது அபிவிருத்தி என மத்தியதர வர்க்கம் மயங்கலாம். தரகு முதலாளிய வர்க்கம் எரிகிற வீட்டில் பிடுங்கலாம். ஆனால் நாட்டின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிற்கு உலகமயமாக்கம் என்பது பேரழிவே.<br />
இலங்கையின் பொதுத் துறைகளை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவு கூலியில் தொழிலாளர்களை வதைத்தெடுக்கின்றனர். நாட்டின் சுதந்திர வர்த்த வலயங்களில் தொழிலாளர்களிற்கு எதுவித தொழிற்சங்க உரிமைகளும் கிடையாது. இலங்கைக்குக் கடனை வழங்கும் உலக வங்கி போன்ற நிறுவனங்களும் வல்லாதிக்க நாடுகளும் இலங்கையில் பொதுமக்களிற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த அரசுக்கு உத்தரவிடுகிறார்கள். மானிய வெட்டினால் உணவுப்பொருட்களின் விலைகள் எகிறிப்போகின்றன.</p>
<p>மருத்துவம், கல்வி, வீடு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏழைகளிற்குத் தூரமாக்கப்படுகின்றன.<br />
இலங்கையின் அரசியல் ஒரு தடத்திலும் இந்தத் தாராளமயமாக்கல் இன்னொரு தடத்திலும் செல்வதில்லை. அவை ஒன்றையன்று ஆழமாகப் பாதிக்கின்றன. இன்றைய இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் என்பது தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்தான். இன்றைய தாராளமய மாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்தான்.<br />
<em> </em></p>
<p><strong><em>இந்தப் பின்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம்? சிறுபான்மை இன அரசியல்?<br />
</em></strong></p>
<p>யுத்தத்தால் வாழ்வை இழந்து நிற்கும் மக்களிற்கு மீளவும் வாழ்வை அமைத்துக் கொடுப்பதே இன்றைக்குத் தேவையான அரசியல் என்று சொல்லப்படுகிறது. அந்த மக்களிற்கு மீள் வாழ்வை அளிப்பது மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால் அத்துடன் தமிழர்களுடைய அரசியல் நின்றுவிட வேண்டும் என்று இலங்கை அரசு மட்டுமல்ல மற்றைய அரசியல் கட்சிகளும் விரும்புவதுதான் கொடுமை. நாட்டுடைய அபிவிருத்தியை முன்னிறுத்தி எப்போது பார்த்தாலும் சனாதிபதி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அபிவிருத்தி என்று சொல்வதெல்லாம் பொதுத் துறைகளை பன்னாட்டு நிறுவனங்களிற்கு விற்பதும் தாளமுடியாத கடன் சுமைக்குள் இலங்கையை அமிழ்த்தி விடுவதும்தான் என முந்தைய பதிலில் உங்களிற்குச் சொல்லி யிருக்கிறேன்.</p>
<p>இந்த மீள்வாழ்வு, அபிவிருத்தி போன்ற போர்வைக்குள் சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினையை மூடி மறைத்துவிட அரசு முயற்சிக் கிறது. அரசு ஆதரவுச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். உண்மையில் இன்று மிகுந்த பலத்தோடு இருக்கும் மகிந்தவின் அரசை எதிர் கொள்வதற்குச் சிறுபான்மையினரிடம் ஒரு அரசியல் சக்தியோ தலைமையோ கிடையாது.</p>
<p><strong><em>இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதைத்தான் கருதுகிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>தீர்வென்றெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதும் கிடையாது. இங்கே பிரச்சினைதான் இருக்கிறது. நாட்டின் இறைமை குறித்தோ, சிறுபான்மை இனங்களிற்கு நீதியான தீர்வு கிடைக்க ஒரு நேர்மையான அரசியல் வேலைத் திட்டத்தை உருவாக்குவது குறித்தோ எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறை கிடையாது. அதிகாரத்துக்கும் பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்குமான நெடிய அரசியல் சூதாட்டத்தையே அரசியல் கட்சிகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் கட்சிகள், ஜே.வி.பி, பொதுவுடமைக் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எவையும் யோக்கியம் கிடையாது. கடந்த வருடம் வன்னியில் இலங்கை அரசு மாபெரும் இனப் படுகொலையை பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விட்டபோது எந்த அரசியல் கட்சி மக்களுக்காகப் பேசியது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே யுத்த நிறுத்தத்தைக் கேட்டது.</p>
<p>கூட்டமைப்புக்கு மக்கள்மீது அக்கறையிருப்பின் மக்களை விடுவிக்குமாறு புலிகளிடமும் கேட்டிருக் கும். இன்றைக்கு நியாயம் பேசும் சம்பந்தனோ மாவை சேனாதிராசாவோ அன்று புலிகளிடம் மக்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்க வில்லையே. அன்றும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே, அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலோ வெளியில் மக்களைத் திரட்டியோ எதுவித போராட்டத்தையும் நடத்த வில்லையே. ஆகக் குறைந்தது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கூடத் துறக்கவில்லையே. இவர்கள் இம்முறையும் நாடாளுமன்றத்திற்குச் சென்று எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப் பதற்கு இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் கிடையாது.</p>
<p>முன்பு ஆயுத இயக்கங்களாயிருந்து இன்றைக்கு அரசியல் கட்சிகளாக மாறியிருக்கும் அமைப்பு களிடமும் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எந்த அரசியல் வேலைத் திட்டமும் கிடையாது. அகதிகளுக்கு நிவாரணம், மீள்குடியேற்றம் என்பதற்கு அப்பால் அவை அரசியல்ரீதியாக முன்னே செல்லத்தயாரில்லை. மறுபடியும் சொல்கிறேன் நிவாரணமும் மீள் குடியேற்றமும் அவசியமானவைதான். ஆனால் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளும் மிக முக்கியமானவையே. நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுதான் அரசியல் கட்சிகளுடைய வேலையென்றால் தமிழர்களுக்கு கட்சிகளே வேண்டியதில்லை. செஞ்சிலுவைச் சங்கமே தமிழர்களிற்குப் போதுமானது. இதில் இன்னொரு நன்மையுமுண்டு. செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளை வானில் ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கடத்தி வைத்துக்கொண்டு பணயத்தொகை கேட்பதுமில்லை, பணயத்தொகை கிடைக்கா விட்டால் கொல்வதுமில்லை.</p>
<p><strong><em>இன்றைய நிலையில் எந்தவகையான அரசியல் வேலைத் திட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்?<br />
</em></strong></p>
<p>ஓர் இடதுவகைப்பட்ட எதிர்ப்பு அரசியல் இயக்கம் நமக்கு இன்று மிக அவசியமானது. அதை எங்கிருந்து தொடங்குவது என்பதெல்லாம் கடும் சிக்கலான பிரச்சினையே. மாற்று அரசியல் செயற்பாடுகளை கொடும்கரம் கொண்டு அடக்கத் தயங்காத சர்வ அதிகாரமும் பெற்ற மகிந்த ராஜபக்சவின் அரசை எதிர்ப்பதும் அதற்கு எதிராக மக்கள்திரளை அணிதிரட்டுவதும் மிகக் கடினமான பணிகளே. இலங்கை அரசை விமர்சிப்பவர்களும் பத்திரிகையாளர்களும் இன்றும் நாட்டைவிட்டு தப்பியோடிக்கொண்டிருக்கையில் மாற்று அரசியல் முன்னெடுப்பு என்பது இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாதது போன்று தோற்றமளிக்கலாம். அப்படியானால் எதுதான் சாத்தியம் என்ற கேள்வியிருக்கிறதல்லவா! மகிந்த ராஜபக்சவின் அரசோடு அணைந்துபோய் அரசியல் செய்வதுதான் புத்தியான காரியம் என்று சில தமிழ் அறிவாளர்கள் சொல்கிறார்கள். அரசோடு அணைந்துபோய் எதைச் சாதித்துவிட முடியும். வீதிகளைத் திருத்துவதும் கூடாரங்கள் அமைக்க தகரங்கள் பெற்றுக் கொடுப்பதுமா அரசியல் செயற்பாடுகள். இவையா ராஜபக்ச அரசின் தமிழ் மக்களுக்கான தீர்வுகள். தாங்கள் யுத்தத்தில் அழித்தவற்றை மக்களின் வரிப்பணத்தில் தங்கிநிற்கும் அரசாங்கம் மறுபடியும் செப்பனிடுவது மிகச் சாதாரணமான செயல். இதை அரசின் சாதனையாகவும் கருணையாகவும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது!</p>
<p>சோசலிஸப் புரட்சி போன்ற கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. சனநாயகமே அற்ற பயங்கரவாத அரசை எதிர்த்து இடது அரசியலைக் கட்டியமைப்பது குறித்தே நான் பேசுகிறேன். இது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இனவாத அரசின் கால்களை நக்குவதும், அபிவிருத்தி, புனரமைப்பு என்ற பெயர்களில் சிறுபான்மை இனங்களின் உரிமை கோரிய அரசியலை கருணை கோரிய அரசியலாய் சிதைப்பதும்தான் இலங்கையில் சாத்தியமென்றால் நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்பு கிறேன். சாத்தியமாகும் தீமையைவிட சாத்தியமாகாத நன்மை எப்போதுமே சிறந்தது.</p>
<p><strong><em>சாதிய அரசியலை முன்னிறுத்துவதும், சாதி யழிப்பு அரசியலுக்கு குரல் கொடுப்பதும் வெவ்வேறானவை, இந்த வேறுபட்ட அரசியல் போக்கை, சாதியம் தொடர்பான நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?<br />
</em> </strong></p>
<p>ஈழத்தைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினர் எப்போதுமே எல்லாவற்றிலும் சாதியை முன்னிறுத்தி யே செயற்படுகிறார்கள். வெளிப்படையான சாதிச் சங்கங்கள் அவர்களிடம் இல்லாவிட்டாலும் அரசியல், பொருளியல், கல்வி, மதம் என அனைத்து சமூக நிறுவனங்களும் அவர்கள் வசமே உள்ளது. அங்கே ஒவ்வொரு நிறுவனங்களும் மறைமுகமான ஆதிக்க சாதியச் சங்கங்களே. புகலிடத்தில் கூட இந்துக்கோயில்களும் பெரும்பாலான ஊர்ச் சங்கங்களும் பழையமாணவர் சங்கங்களும் மறை முகமான ஆதிக்கசாதிச் சங்கங்களே.</p>
<p>ஆனால் அதே ஆதிக்க சாதியினர்; சாதி யழிப்பை முன்னிறுத்தும் தலித்துகள் அமைப் பானால் தலித்துகளின் அமைப்புகள் மீது சாதிச் சங்கங்கள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். ஆதிக்கசாதியினர் சாதியத்தைப் பாதுகாக்க அமைப்பாகிறார்கள். தலித்துகள் சாதியத்தை ஒழிக்க அமைப்பாகிறார்கள். இன்றைய சிறுபான்மைத் தமிழர் மகாசபையோ, தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ சாதிச் சங்கங்கள் இல்லை. அவை ஒரு தனித்த சாதிக்கான அமைப்புகள் இல்லை. அவை தீண்டாமைக்கு உட்பட்ட அனைத்து சாதிகளையும் இணைத்துச் செல்வதற்கான அமைப்புகளே.</p>
<p>வெள்ளாளர்கள், பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சாதி அறிவுஜீவிகள் இப்போது தங்களைத் தலித் அமைப்புகள் புறக்கணிப்பதாக மூக்குச் சிந்த ஆரம்பித்திருக்கிறார்கள். சாதியழிப்பில் தங்களுக் கும் அக்கறையிருக்கிறதென்றும் அதைத் தலித்துகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். அவ்வாறான அக்கறையுள்ளவர் களிற்கு தலித்துகளிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தலித்துகள் சாதி இழிவு நீங்கவேண்டும் என்ற உணர்மையுடனே இருக்கிறார்கள். இந்த ஆதிக்கசாதியினர் தங்கள் சொந்தச் சாதியினரிடத்தில் சாதியத்திற்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்யட்டும். அதைச் செய்து முடிக்கவே அவர்களிற்கு ஆயுள் போதாது. தங்கள் சொந்தச் சாதியினரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் சாதியச் சங்கங்களை அவர்கள் ஒழிக்க முயற்சி செய்யட்டும். அதன்பின்பு தலித்துகள் வைத்திருப்பது சாதியச் சங்கமா அல்லது சாதியழிப்புச் சங்கமா போன்ற விவாதங்களில் அவர்கள் ஈடுபடலாம்.</p>
<p><strong><em>எழுத்திற்கான அங்கீகாரம், அங்கீகார மறுப்பு பற்றிய மனச்சிக்கல்கள் தமிழ் எழுத்துலகில் தொடர்ந்தும் நிலவி வருகிறது, ஒரு படைப்பாளன் என்ற வகையில் இந்த விடயத்தில் உங்கள் அனுபவம்தான் என்ன?<br />
</em> </strong></p>
<p>எழுத்தை அங்கீரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதால்தானே வருகிறது. என்னைப்பொறுத்தவரை அங்கீகாரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பயிரும் பண்ண முடியாது என்றுதான் கருதுகிறேன். என்னுடைய எழுத்துகள் நிராகரிப்புகளையே அதிகம் பெற்றிருக் கின்றன. துரோகி, அரசாங்கக் கைக்கூலி என்று எத்தனை பட்டங்கள் என்மீது சுமத்தப்பட்டன. மறுபுறத்தில் ‘கொரில்லா’ வெளியானபோது அது புலிகள் ஆதரவு நாவல் என்று கற்சுறா, எம்.ஆர். ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தார்கள். அய்ந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத பிரதியது என்று எழுதினார் கற்சுறா. ஊடகப் பலத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் என்னுடைய எழுத்துகளை துரோகி என்ற ஒரு சொல்லினால் நிராகரித்துச் சென்றனர். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இலக்கியத்தின் நோக்கம் அங்கீகாரத்தைக் கோருவதாக இருக்கக்கூடாது.</p>
<p>அங்கீகாரத்தை நோக்கி எழுத ஆரம்பித்தால் அங்கேயே சமரசம் தொடங்கி விடும். அதன்பின்பு அங்கே இருப்பது இலக்கிய மல்ல. அங்கேயிருப்பது அங்கீகாரம் கோரிய வெறும் விண்ணப்பம் மட்டுமே. நான் எனது நூல்களுக்கு முன்னுரை கூடப் பெறுவதில்லை. எனக்கு அந்த அங்கீகாரம்கூட வேண்டியதில்லை. இதையெல்லாம் நான் எதோ படைப்புத் திமிரினால் பேசுவதாக நீங்கள் தயவு செய்து கருதக் கூடாது.<br />
நான் இலக்கியத்தை உச்சமான அழகியலோடு எழுகிறனோ இல்லையோ நான் உண்மையை எழுதுகிறேன். அதை மட்டுமே எழுதுகிறேன். என்னுடைய அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்யும் ஆனால் அளவில் சற்றுப் பெரிதான துண்டுப் பிரசுரங்களாகவே நான் எனது கதைகளைக் கருதுகிறேன். அந்த அரசியற் கருத்துகள் பெருமளவில் நிராகரிப்பை பெறக்கூடியவை என்று தெரிந்தே நான் எழுதுகிறேன். அதனால் அங்கீகாரம் ஒரு பிரச்சினையே கிடையாது. கிடைத்தால் மகிழ்ச்சி, அவ்வளவுதான். அதற்காக இந்தியாவில் அங்கீகரிக் கிறார்களில்லை, இங்கிலாந்தில் அங்கீகரிக்கிறார் களில்லை என்று ஒரு படைப்பாளி புலம்பிக் கொண்டா இருப்பது. என்னயிது அழுகுணித்தனம்! படைப்பாளி என்றால் ஒரு கட்ஸ் வேண்டாமா!</p>
<p><strong><em>புலம்பெயர் இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது?<br />
</em> </strong></p>
<p>புலம்பெயர் இலக்கியத்தின் மையம் என முன்னர் பிரான்ஸைச் சொன்னார்கள். அப்படியரு மையம் இருந்திருந்தால் அது இப்போது கனடாவுக்கு நகர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன். டி.சே.தமிழன், பிரதீபா, அருண்மொழிவர்மன், மெலிஞ்சிமுத்தன்  என்று வாசிப்பிலும் எழுத்திலும் தீவிர ஈடுபாடுடைய இளைய தலைமுறையன்று அங்கிருக்கிறது. அ.முத்துலிங்கம், செழியன், செல்வம் அருளானந்தம், சேரன், சுமதி ரூபன், சக்கரவர்த்தி, ஜெயகரன், தேவகாந்தன், திருமாவளவன் போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>புகலிட இலக்கியம் தேக்க நிலையை அடைந் திருக்கிறது என்று சொல்பவர்களுமுண்டு. எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு கிடையாது. முற்போக்கு இலக்கியம், தூய இலக்கியம் என்ற இரு வகைகளைத்தான் நீண்டநாட்களாகப் புகலிடத்தில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பெருங்கதை யாடல்களின் வன்முறையைப் புரிந்துகொண்டு விளிம்புநிலைகளை முன்னிறுத்திய பிரதிகள் உருவாகி வருகின்றன என்றே கருதுகிறேன். தமிழ்த் தேசியக் கருத்தியலும் புலிகள் மீதான அச்சமும் புகலிட இலக்கியத்தை ஆட்டிப்படைத்த காலத்தில் அரசியல் சரியும் துணிவுமே எழுதுவதற்கான முன்நிபந்தனை யாகப் புகலிட இலக்கியத்திற்கு இருந்தது. இலக்கிய அழகியலின் மதிப்பீடுகளின்படி நமது பிரதிகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஓர் கொடூரமான அடக்குமுறை நிலவிய காலத்தில் அதை சமரசமின்றி எதிர்த்து நின்றது என்ற பெருமை புகலிட இலக்கியத்திற்கு உண்டு. இப்போது அந்த அடக்கு முறையும் அற்றுப்போன சூழலில் புகலிட இலக்கியம் மேலும் தழைத்துவரும் என்றே எதிர்பார்க்கிறேன்.</p>
<p><strong><em>நீங்கள் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக் கிறீர்கள். தீவிரமான எம்.ஜி.ஆர் இரசிகராகவுமிருக்கிறீர்கள். அண்மையில் தமிழ் சினிமாவில் பணியாற்ற தமிழகத்திற்கும் சென்றிருந்தீர்கள், தமிழ்ச் சினிமா குறித்த உங்களின் பார்வை குறித்துச் சொல்லுங்கள்?<br />
</em> </strong></p>
<p>எனக்குத் திரைப்படக்கலை குறித்த கோட்பாடு களோ காட்சி ஊடக நுட்பங்களோ தெரியாது. சர்வதேசச் சினிமாக்கள் குறித்துப் போதிய பரிச்சயமும் எனக்குக் கிடையாது. நான் எழுதிய திரைப்பட விமர்சனங்கள் திரைப்படக்கலையை மையப்படுத்தியவையல்ல. அந்தத் திரைப்படங்கள் திரைப்படத்திற்குப் புறம்பாக உருவாக்கிய அரசியல் உரையாடல்களை மையப்படுத்தியே நான் அந்த விமர்சனங்களை எழுதினேன். எனினும் இப்போது சரமாரியாக இலக்கிய இதழ்களிலும் இணையங் களிலும் எழுதப்படும் சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் மேத்தாவின் வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “நாடு இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் நாங்களே மறுபடியும் நாடாளலாம் என்று நினைக்கிறோம்” எனச் ‘செருப்பு’ச் சொன்னதாக அந்தக் கவிதை இருக்கும். நான் கூட ‘அங்காடித் தெரு’ சி.டி.க்குச் சொல்லிவிட்டிருக்கிறேன். கிடைத்ததும் விமர்சனம் எழுதிவிட வேண்டியதுதான்.</p>
<p>பொதுவாக இலக்கியத்தில் ஒருவரை இன்னொரு வர் எழுத்தால் காலிபண்ணிவிடுவது என்பது நடவாத ஒன்று. ஆனால் அதை நடத்திக்காட்டியவர் சாரு நிவேதிதா. முன்பு தமிழ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து மோசமான திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்த பேராசிரியர் அ.ராமசாமியை அதைவிட மோசமான திரைப்பட விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் காலிபண்ணியவர் சாரு நிவேதிதாவே. குரு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களுக்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கும் ஒருவர் தமிழ்த் திரைப்படங்களை விட அவைகுறித்த விமர்சனக் கட்டுரைகள் படுகேவல மாயிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.</p>
<p>எனக்கும் சினிமாவிற்குமான தொடர்பு நிரம்பவும் உணர்வுபூர்வமானது. மிகவும் பின்தங்கிய ஒரு தீவில் வளர்ந்தவன் நான். எங்கள் கிராமத்தில் எழுபதுகளில் நாங்கள் எல்லோரும் கொஞ்சம் ‘அடிமைப்பெண்’ எம்.ஜி.ஆர். போலத்தான் அங்கே வளர்ந்து கொண்டிருந்தோம். கடவுள், சாதியம், வறுமை, பெண்கள் கணவன்மார்களால் வதைக்கப்படுவது எல்லாமே இயற்கையானவை, மாற்றமுடியாதவை என்ற மனநிலைதான் எங்களுக்கிருந்தது. இதை மறுத்துப் பேச அங்கே யாருமில்லை. பத்திரிகைகள் படிக்கும் வழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கால்கள் இந்த 2010வரை எனது கிராமத்தை மிதித்ததேயில்லை.</p>
<p>சாதி ஒழிக்கப்பட வேண்டியது, பணக்காரன் ஏழையைச் சுரண்டக்கூடாது, தாயை மதிப்புச் செய்ய வேண்டும் என்று எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களே முதன் முதல் சொல்ல நான் கேட்டேன். கடவுள் இறந்துவிட்டார் என நீட்ஷே சொன்னாராம். ஆனால் எனக்கு அதை முதலில் கலைஞர் கருணாநிதிதான் சொன்னார். கிராமத்தின் திருமண வீடுகளில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிக் குழாய்களின் வழியே வந்த கலைஞரின் திரைப்பட வசனங்களே கடவுள் இல்லையென்று எனக்கு முதலில் அறிவித்தன. ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற படங்களின் வசனங்களைச் சுருக்கி ஒருமணிநேர ஒலிநாடாவில் பதிவுசெய்து ஒலிபரப்புவார்கள். அதை ஒலிச் சித்திரம் என்போம். மேலே சொன்ன ஒலிச் சித்திரங்களுடன் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘திருவிளையாடல்’, ‘வசந்தமாளிகை’ போன்ற படங்களின் வசனங்கள் எனக்கு அப்போது தலைகீழ் பாடம். எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள் எல்லாமே கரைந்தபாடம். எந்தப் படமென்றாலும் ரசித்துப் பார்த்தேன். எந்தப் பாடலென்றாலும் மனமுருகிக் கேட்டேன். இன்றுவரை அந்தப் பழக்கம் என்னில் தொடர்கிறது. இப்போது ரசித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் சகித்துக்கொண்டு பார்க்கிறேன். ஏதாவது ஒரு படத்தை பார்க்கத் தவறிவிட்டால் மனது பதற்றமாகிவிடுகிறது. அந்தப் படத்தில் ஏதாவது ஒரு நல்ல அம்சமிருந்து நான் தவறவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமது.</p>
<p>வெறுமனே படங்கள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதுமில்லை. திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த விபரங்களையும் எனது மூளை எப்படியோ துல்லியமாகத் திரட்டி வைத்துக்கொள்கிறது. படிக்கும் ஒரு கவிதையோ அரசியல் கட்டுரையோ அடுத்துச் சில நாட்களிலேயே மறந்துபோகையில் இந்த விபரங்கள் மட்டும் என் மண்டையிலேயே அழியாமல் தங்கிவிடுகின்றன. இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.</p>
<p>தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திராவிட இயக்கத்தினர் திரைப்படத்துறையில் இயங்கிய காலத்தையே நான் உச்சமான காலம் எனச் சொல்வேன். திராவிட இயக்கத்தினரின் சினிமாவும் இலக்கியமும் ஒரு வரலாற்றுக் கறை என்று சொல்பவர்களோடு எனக்கு உடன்பாடு கிடையாது. அவை வரலாற்றின் கொடை என்றே நான் சொல்வேன். தந்தை பெரியார் போல “சினிமாவை ஒழித்தால்தான் நாடு உருப்படும்” என்பவர்கள் சினிமாவைத் திட்டும்போது சேர்த்து திராவிட இயக்கத்தினரின் சினிமாவையும் திட்டினால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்றைய வணிகச் சினிமாக்களைப் பாராட்டி விமர்சனங்கள் எழுதுபவர் களிற்கும் அந்தச் சினிமாக்களில் பங்கெடுப்பவர் களுக்கும் திராவிட இயக்கத்தினரின் சினிமாவைக் குற்றஞ் சொல்ல எந்த அருகதையும் கிடையாது.</p>
<p>திராவிட இயக்கத்தினருக்குப் பிறகு இயக்குனர் பாரதிராஜாவின் பங்களிப்பே முதன்மையானது. ‘பதினாறு வயதினிலே’ படத்தில் தமிழ் வாழ்வையும் பண்பாட்டுக் கூறுகளையும் நெருங்கிவந்தவர் ‘கிழக்கே போகும் ரயில்’-ல் கதைநாயகனாக ஒரு முடிதிருத்தும் தொழிலாளியை சித்திரித்து சாதிய ஒடுக்குமுறையை மையப்படுத்தி அன்றைக்கான திரை அழகியலோடு படத்தை உருவாக்கியிருந்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கருத்தம்மா’ என்று சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி அவர் படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரை இன்னும் தாண்ட முடியாமல் தமிழ்ச் சினிமா சடமாகக் கிடக்கிறது என்பதுதான் என் மதிப்பீடு.</p>
<p><strong><em>நீங்கள் விடாக் குடிகாரன் என்றும், உங்கள் எழுத்து ஆளுமையை பெண்களின் உடல் மீதான கவர்ச்சி வலையாக கொண்டிருக்கிறீர்கள் என்றும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் உலாவு கின்றனவே?<br />
</em> </strong></p>
<p>இதெல்லாம் ஒரு கருத்தா பௌஸர்? குடிப்பது என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? எனக்கும்தான் குடிக்காதாவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் அதை நான் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியுமா? இதெல்லாம் அவரவர் தனிப் பட்ட விருப்பங்கள். நான் குடித்துவிட்டு மற்றவர் களைத் தொந்தரவு செய்யாதவரை மற்றவர்களிற்கு என் குடிப்பழக்கத்தை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது. போதையில் உணர்வுகள் மிகையாகத் தூண்டப்படுவது உண்மையே. போதையால் கோபம், வெறுப்புப் போன்ற உணர்வுகள் மட்டுமல்ல அன்பு, நட்பு, காதல் போன்ற நல்லுணர்வுகளும் மிகையாகத் தூண்டப்படுகின்றன. நாம் எந்தப் பக்கத்தில் என்பதுதான் கேள்வி. நான் எல்லோருடைய மகிழ்ச்சியையும் கருதிக் குடிப்பவன்.</p>
<p>“ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவர்களிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கமாகும்” என்பார் தந்தை பெரியார். இதை தவிர்த்து காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடு களும் கலாசாரத் தளைகளும் கிடையாது. எனது எழுத்து ஆளுமையைப் பெண்கள் மீதான கவர்ச்சி வலையாகக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் கருத்தோ விமர்சனமோ கிடையாது. அவை அருவருக்கத்தக்க இன்னும் சொன்னால் பெண்களை வெறும் பண்டங்களாய் மதிப்பிடும் கொழுப்பெடுத்த பேச்சுக்கள்.</p>
<p>இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது. இலக்கிய விமரிசனம் இருவரது உறவைக் கண்காணிக்கும் நாட்டாமைத்தனத்திற்குச் சரிந்திருப் பது கேவலம்.</p>
<p><strong><em>இனி வேறு தளத்திற்கு செல்வோம். நீங்கள் இந்துத் துவத்தை எதிர்த்து எழுதுவதைப் போன்று இஸ்லாமிய அடைப்படைவாதத்தை எதிர்த்து எழுதுவதில்லை என்றொரு விமர்சனம் கிளம்பி யிருக்கிறதே?<br />
</em> </strong><br />
ஈழத்தைப் பொறுத்தளவிலோ அல்லது நான் வாழும் பிரான்ஸிலோ இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற பிரச்சினை தூலமாகக் கிடையாது. இந்த இரு இடங்களிலும் இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. அடிப்படைவாதம் என்பது எந்த மதத்திட மிருந்து வந்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும் எதிர்க்க வேண்டியதுமாகும். நமது சூழலைப்பொறுத்தவரை சாதியத்தின் அடிவேராக இருக்கும் இந்துமதத்தை எதிர்ப்பதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அதேபோல நான் பிறந்த கத்தோலிக்க மதமும் சாதியால் முழுவதுமாக உள்வாங்கப்பட்ட மதமாகவே உள்ளது. ஈழத்தைப் பொறுத்தளவில் இந்து மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. இரண்டுமே சாதியத்தைக் காப்பாற்றும் அதிகார நிறுவனங்களே.</p>
<p><em><strong>ஒரு மார்க்ஸியவாதியாக நான் கடவுள் நம்பிக்கை யற்றவன் என்ற போதிலும் சாதியத்தை ஏற்றுக் கொள்ளாத மார்க்கங்கள் என்றவகையில் எனக்கு பவுத்தத்தின்மீதும் இஸ்லாம்மீதும் ஈடுபாடிருக்கிறது.<br />
அண்மையில் பிரான்ஸில் பர்தா அணிவதைத் தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டதே?<br />
</strong></em></p>
<p>இஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இன்றைய மனித விழுமியங்களிற்கு ஒவ்வாதவை. முகத்திரை இடுவதையெல்லாம் கலாசாரம் அல்லது தனித்த இனக்குழு வழக்கங்கள் என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆபிரிக்க இனக்குழுக்களிடம் பெண்களை பாலியல்ரீதியாக அடக்கிவைக்க பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியைத் துண்டித்துவிடும் வழக்கமிருக்கிறது. பிரான்ஸில் குடியேறி வாழும் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூட அதைச் செய்துகொள்கிறார்கள். பிரஞ்சு அரசாங்கம் அந்த வழக்கத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. பிரஞ்சு அரசாங்கம் வரலாற்றுரீதியாகவே ஆபிரிக்க &#8211; இஸ்லாமிய விரோத அரசுதான். இதற்காக அவர்கள் இயற்றிய கிளிட்டோரிஸ் துண்டிப்புத் தடைச் சட்டம் தவறென்று சொல்ல முடியுமா? அவ்வகையான துண்டிப்பு ஆபிரிக்க இனக்குழுக்களின் கலாசாரம் என்று சொல்லி நாம் நியாயப்படுத்த முடியுமா? அவ்வாறு பார்த்தால் சாதிப்பாகுபாடு, குழந்தை மணம், தேவதாசி முறை என்பவையைல்லாம் கலாசாரமும் மரபும்தானே. ஒரு இனக்குழுவின் அல்லது மதக்குழுவின் கலாசாரத்திலோ மரபிலோ அந்நியர்கள் தலையீடு செய்யக் கூடாது எனச்சொல்லி அவற்றைக் கேட்டுக்கேள்வியில்லாமல் விட்டு வைக்கலாமா?</p>
<p>பிரான்ஸில் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்ககளில் முக்காடு அணிபவர்கள் ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவ்வாறானால் முகத்திரை அணியாத பெரும்பான்மையினர் மார்க்க விரோதி களா? மரபு, கலாசாரம் எல்லாமே ஆண்களால் கற்பிக்கப்பட்டவை. ஆண்களால் சட்டமாக்கப் பட்டவை. மரபும் கலாசாரமும் ஆண்களால் பெண்கள்மீது சுமத்தப்பட்டவையே தவிர பெண்களின் கருத்தொருமிப்புடன் ஏற்படுத்தப் பட்டவையல்ல. ஒரு சமூகத்தில் உள்ள உள் ஒடுக்குமுறைகள் மீது உள்ளிருந்தே போராட்டம் நடத்தப்படுவதுதான் மிகச் சரியாக இருக்கும். அதற்காக வெளியிலிருந்து வைக்கப்படும் விமர்சனங் கள் எப்போதுமே சரியற்றவை என ஆகிவிடாது.</p>
<p><strong><em>பாரிஸ் வாழ்க்கை உங்கள் எழுத்தின் இன்னொரு தளமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. கலைத் துறையை சேர்ந்த உங்களுக்கு இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது? நெருக்கடியாக இந்த வாழ்க்கையை உணர்கிறீர்களா? இதற்கிடையில் எழுத வாசிக்க எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?<br />
</em> </strong></p>
<p>நான் பிள்ளை குட்டி, வீடு வாசல் எனப் பொறுப்புகளற்ற மனிதன். எனது தேவைகளும் மிகக் குறைவானவை. அவ்வப்போது வேலைக்குச் செல்வது, வேலைக்குச் செல்லாதபோது வேலை யிழப்புக் காப்பீட்டுப் பணத்தில் வாழ்வது என்று குத்துமதிப்பாக வாழ்கிறேன். அதனால் வாசிக்கவும் எழுதவும் பயணங்கள் செய்யவும் எனக்கு நேரங்கள் கிடைக்கின்றன.</p>
<p><strong><em>யுத்தத்தின் முடிவுக்குப்பின் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் சென்று வருகிறார்கள். நீங்கள் இலங்கைக்கு செல்லாததற்கு விசேட காரணங்கள் உண்டா?<br />
</em> </strong></p>
<p>நான் அரசியல் அகதிக்கான கடவுச் சீட்டையே வைத்திருக்கிறேன். அந்தக் கடவுச் சீட்டுடன் நான் சட்டப்படி இலங்கைக்குள் நுழைய முடியாது. வேறுவழிகளில் இலங்கைக்கு போக முயற்சிக்கலாம் தான். ஆனால் எனது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எனக்கு இருக்கின்றன. யுத்தம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் கடத்தல்களும் கொலைகளும் இன்னமும் நடந்தபடியேதான் உள்ளன. ராஜபக்ச அரசாங்கம் புலிகளின் பயங்கரவாதத்தைத்தான் முடித்து வைத்திருக்கிறது. ஆனால் அரசின் பயங்கரவாதமும் அரசோடு இணைந்து செயற்படும் தமிழ் ஆயுத இயக்கங்களின் பயங்கரவாதமும் இன்னமும் அங்கே இருக்கின்றன. வயதாகிறதல்லவா! இளமையிலிருந்த துணிவும் சாகசங்களின் மீதான விருப்பும் வரவர எனக்குக் குறைந்துகொண்டே வருகின்றன.</p>
<p><strong>-பௌசர்.</strong></p>
<p><!--Session data--></p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d/'>நேர்காணல்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/430/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/430/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/430/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=430&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%99/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/shoba-01.jpg" medium="image">
			<media:title type="html">shoba-01</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 17:24:28 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[கருத்துரை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=488</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 1 சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப் பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல மேலும் போர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=488&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/eelam.jpg"><img class="alignnone size-full wp-image-489" title="Eelam" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/eelam.jpg?w=455&#038;h=260" alt="" width="455" height="260" /></a><br />
1<br />
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப் பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒரு வகையில் அபத்தமானதுதான்.</p>
<p>சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்ட காலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டு கொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மை யும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு தளத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ். போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத் திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம் பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுத முடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்து கொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம்.<br />
<span id="more-488"></span><br />
ஈழத்திலக்கியம் என்பதே அவற்றின் நிலப்பரப்பு களுக்கும், கலாசார தளங்களுக்கும் ஏற்ப உட்பிரதேசங் களிலேயே வித்தியாசப்படுபவை. உதாரணமாக யாழில் வெளிவரும் படைப்புக்களுக்கு, பிரயோகிக் கும் விமர்சன அலகுகளை மலையகத்தில் முன் வைக்க முடியாது. முற்றிலும் வித்தியாசமான சூழல் மலையகத்தினுடையது. கவிதை எழுதும் மலையகப் பெண்ணொருவர் ஒரு நேர்காணலின் போது, தான் ஒரு படைப்பு எழுதி அனுப்புவது என்றால் கூட 4 மைல் நடந்துவந்தே தபால் பெட்டிக்குள் போட வேண்டியிருக்கின்றது என்பதன், பின்னாலுள்ள புறச்சூழல்களை முன்வைத்தே நாம் மலையகப் படைப்புக்களை அணுக வேண்டியிருக்கின்றது. அதே போன்று வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் களினதும், கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களினதும் வாழ்வுநிலை என்பதுகூட முற்றுமுழுதிலும் வேறுபடக் கூடியது. இந்த வித்தியாசங்கள் அவர்களின் படைப்புக்களில் ஊடாடுவதை விளங்கிக் கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாகச் செய்துவிட முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக வாழ்வு குலைக்கப்பட்டு புதிய நாட்டுச் சூழலில் வாழத் தொடங்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.</p>
<p>2<br />
2001ம் ஆண்டு ஷோபாசக்தியின் ‘கொரில்லா&#8217; ஒரு புதிய பாய்ச்சலை தமிழ்ச் சூழலில் ஏற்படுத்துகின்றது. கதைக் களத்தில் மட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. அழுது வடிந்து கொண்டிருந்த மொழியில், கதை சொல்லிக் கொண்டிருந்த ஈழத்தமிழர் படைப்புக் களத்தில், இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>மிக உக்கிரமான அரசியலை, அங்கதத்தோடு இணைத்துக் கொண்டதால் &#8211; எப்போதுமே அரசியல் பேசப்பிடிக்கின்ற தமிழர்களை &#8211; அது வெகு விரைவாக தனக்குள் இழுத்துக் கொண்டது. அதே ஆண்டு அ. முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் புகைவண்டி’ காலச்சுவடு பதிப்பாக வருகின்றது. அதற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்கத்தின் கதைகளை வாசித்தவர்களுக்கு -முக்கியமாய்த் தமிழக வாசகர்களுக்கு &#8211; இப்படி தங்களை எளிதாகப் புன்னகைக்க வைக்கின்ற ஒரு கதை சொல்லி இருக்கின்றார் என்பதை அறிகின்றார்கள்&#8230; ஷோபா சக்தியும், முத்துலிங்கமும் புதினங்களில் வாசகர்களின் கவனத்தைக் கோருகின்ற அதேவேளையில், கவிதைகளில் 2000ல் ஆழியாளின் ‘உரத்துப் பேச’வும், பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்களும்’ கவனத்தைப் பெறுகின்றன. காதல் முறிவின்போது என்னிடம் இருந்து எல்லாவற்றையும் திருப்பிப் பெறுகின்ற நீ, எப்படி எனக்குத் தந்த முத்தங்களையும், விந்துக்களையும் திருப்பிப் பெறுவாய் என்று அறைந்து கேட்கின்ற கேள்விகள் ஆழியாளிடமிருந்து வெளிவருகின்றது, பா. அகிலனோ இழந்து போன காதலை, மஞ்சள் சணல் வயலில் விழுகின்ற சூரியனாய் ஆக்குகின்ற படிமங்களில் எழுதினார்.</p>
<p>ஷோபாசக்தியைப் போல, மிகப் பெரும் பாய்ச்சலை புனைவுத்தளத்தில் நிகழ்த்தக் கூடியவர் என்று, மிகவும் நம்பப்பட்ட சக்கரவர்த்தி ‘யுத்தத்தின் இரண்டாம் பாகத்தோடு’ அவர் ஒருவித உறக்க நிலைக்குப் போனது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஏமாற்றமே. யுத்தத்தின் இரண்டாம் பாகத்தின் சில கதைகள் உணர்ச்சித் தளத்தில் மட்டும் இருக்கின்றன என்றாலும், அதில் உண்மைகள் நேர்மையாகவும் துணிச்சலாகவும் கூறப்பட்டிருக்கின்றது என்பதால் முக்கியம் வாய்ந்ததாகி விடுகின்றது. மேலும் மட்டக்களப்பு மொழியின் வாசனை கதையெங்கும் மலர்ந்தபடியே இருப்பதுவும் கவனிக்கத்தது.</p>
<p>இதே காலகட்டத்தில் இலக்கிய உலகில் காலம் சற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த சொற் சிக்கனத்தோடும் அழகியலோடும் திருமாவளவன் நுழைகின்றார். பனி வயல் உழவில் முன்னவர் சிலரின் பாதிப்பு இருந்தாலும் சிறந்த கவிதைகள் சிலவற்றையாவது அதில் அடையாளங் காண முடியும். பனிவயல் உழவிற்குப் பிறகு அஃதே இரவு அஃதே பகலில் வேறொரு தளத்தில் கவிதைகளை திருமாவளவன் நகர்த்த முயன்றிருக்கின்றார். ஆனால் அவரது 3வது தொகுப்பான இருள் யாழி இவ்விரு தொகுப்புக்களை விடுத்து முன்னகர வேண்டியதற்குப் பதிலாக சற்றுத் தேங்கிப் போனது ஒருவகையில் ஏமாற்றமே. இதே காலப்பகுதியில் கனடாவிலிருந்து தேவகாந்தனின் ‘கதா காலம்’ காலம் பதிப்பாக வருகின்றது. மகாபாரதம் நமது ஈழத்துச் சூழலிற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படுகின்றது. நாம் அறிந்த மகாபாரத பாத்திரங்கள் கதா காலத்தில் வேறு வேறு வடிவங்கள் எடுக்கின்றன. வாசிப்புக் கவனத்தைக் கோரும் இப் புதினம், ஏற்கனவே வெளிவந்த எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தின், பெரும் வெளிச்சத்தில் பின் தங்கிவிட்டதோ, என்கின்ற ஆதங்கம் இப்போதும் எனக்கு உண்டு.</p>
<p>2001ல் ஈழத்தில் ஏற்பட்ட சமாதானக் காலம், வன்னியிலிருந்து நாம் இதுவரை அறியாத கதைகளை எம்முன்னே கொண்டுவரத் தொடங்குகின்றது. ஏற்கனவே அறியப்பட்ட தாமரைச் செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ சிறுகதைத் தொகுப்பு வெளிவருகின்றது. அதேபோன்று தனது பிள்ளைகளை ஈழப்போருக்குப் பலிகொடுத்து, தானும் ஒரு போராளியாக இருந்த தமிழ் மகள் என்ற கதை சொல்லியின் ‘இனி வானம் வெளிச்சிரும்’ வருகின்றது. வறுமைக்குள் வாழ்ந்து, திருமணமாகி சில வருடங்களில் கணவனால் கைவிடப்பட்ட உறுதிமிகு ஒரு வன்னிப் பெண்ணின் கதை, மிக அற்புதமாக அதில் பதியப்பட்டிருக்கின்றது. இதுவரை ஆண்களின் குரல்களின் வழியே விழுந்த போராட்டம் குறித்த கதையாடல்களை தமிழ்மகள் வேறொரு விதத்தில் அணுகுகின்றார். இந்நாவலின் ஆண்கள் வியந்தோத்தும் வீரத்தை அதிகம் கொண்டாடாது, இப்போராட்டம் தமக்கு வேறு வழியில்லாது திணிக்கப்பட்டது, தமது இருத்தல் என்பதே இப்போராட்டத்தோடு இணைந்துள்ளதென நினைக்கும், ஒரு பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டிருக்கின்றது.</p>
<p>போர் குறித்தும் போர் நடத்தப்பட்டது குறித்தும் நமக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றபோதும் தாம் உறுதியாய் நம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் புதினம் என்ற வகையில் இந்நாவல் முக்கியமானதே. மக்சிம் கார்க்கியின் தாயிற்கு நிகரான எத்தனை ஆயிரமாயிரம் தாய்களை நாம் நமது நிலப்பரப்புக்களில் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு தாயின் கதையே இது. மேலும் புலிகளின் அரசியல் துறையில் இருந்த மலைமகள் எழுதிய ‘புதிய கதைகளிலும்’, வெளிச்சம் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட ‘வாசல் ஒவ்வொன்றும்’ சிறுகதைத் தொகுப்பிலும் போர்க்கால வன்னிச் சூழல் அங்கே வாழ்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட ‘இசை பிழியப்பட்ட வீணை’யையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>இந்த இடத்தில் பெயர்களைப் பட்டியலிடுவதை சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ச்சியாக எழுதுவது/எழுதாமல் இருப்பதன் புள்ளி குறித்து சற்றுப் பார்ப்போம். பல்வேறு புறக்காரணங்கள் இருந்தாலும், ஈழத்திலக்கியத்தில் நல்ல சில படைப்புக்களை எழுதிய எத்தனையோ பேர் கொண்ட பட்டியல் நம்மிடம் நீண்டதாய் இருக்கிறது. ரஞ்சகுமார் ஒரு அருமையான தொகுப்போடு நிறுத்தி விடவில்லையா ‘மக்கத்துச் சால்வை’ எம். ஹனீபா 40 ஆண்டுகளாக எழுதினாலும் ‘அவளும் ஒரு பாற்கடல்’ என்ற தொகுப்பில் 25 கதைகளை மட்டுந்தானே தொகுக்க முடிந்திருக்கின்றது. ஆனால் வாசிக்கும் நாம் ரஞ்சகுமாரையோ, ஹனீபாவையோ, ஏன் அரசியல் தளத்தில் கோவிந்தனையோ தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழத்தின் தனித்துவ மான ஒரு பண்பு என எடுத்துக் கொள்கின்றேன். எங்களுக்கு &#8211; அதாவது வாசகருக்கு &#8211; ஒரு படைப்பாளி ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால்கூட அவர் கவனிக்கக்கூடியவர் என்றுதான் எமது ஈழத்து மரபும் வாழ்வும் கற்றுத் தந்திருக்கின்றது. இந்த மரபு இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது என்பதல்ல, சங்க காலக் கவிஞர்களை இப்போதும் நினைவுகூர எங்களுக்கு அவர்களின் ஒன்றிரண்டு பாடல்களே போதுமாயிருக்கிறது அல்லவா<br />
இந்தக் காலகட்டத்தில் இணையம் பல புதிய படைப்பாளிகளை அடையாளங்காட்டுகின்றது. முக்கியமாய் யாழ்ப்பாணத்திலிருந்து முரண்வெளி தளத்தில் ஹரி எழுதத் தொடங்குகின்றார். முரண்வெளி தளத்தில் வெளிவந்த ஆமிரபாலியின் கவிதைகளும், அமௌனனின் ‘வெளிச்சக் கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்’ என்பதும் 2005ற்குப் பிற்பான படைப்புக்களில் கவனத்தைக் கோருபவை. ‘வெளிச்சக் கூடுகள் தேவைப்படுவோர்&#8230;’ கதை இராணுவத்தால் மூடப்பட்ட யாழ் நகரின் வாழ்வைப் பதிவு செய்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ சூழலின் நிர்பந்தத்துற்குள் உந்தப்பட்டு இராணுவத்தோடு தற்பால் உறவு கொள்கின்ற சிறுவர்களின் பாத்திரங்கள் இதில் வருகின்றது. இக்கதையில் அநேகமான ஈழத்துச் சிறுகதைகளில் விபரிக்கப் படுகின்ற ‘கொடுமைக்கார’ இராணுவம் என்ற பாத்திரம் இராணுவத்திற்கு கொடுக்கப்படாதது கவனத்தில் கொள்ள வேண்டியது. மிக உக்கிரமான போர்ச்சூழல் நமக்கான இரண்டு தெரிவுகளைக் கொடுக்கின்றது; அதிலொன்று நாம் ‘வீரனாகி’ப் போர்க்களத்திற்குப் போவது. அல்லது இன்னுமொரு வாய்ப்பாக இருக்ககூடிய காமத்தின் உச்சத்திற்குள் சிக்கிக் கொள்வது. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.</p>
<p>2005ற்குப் பின் முத்துலிங்கமும், சோபாசக்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவர்களின் பிற படைப்புக்களைச் சற்று மறந்து பிறரைப் பார்ப்போம். சுமதி ரூபனின் ‘யாதுமாகி’ தொகுப்பு மித்ர பதிப்பகத்தால் வெளிவருகின்றது. அவற்றில் அனேகமானவை வானொலிக்கு எழுதியவை என்றாலும் ஒரு பெண்ணின் அகவுலகம் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ‘வேட்கை’ என்று சுமதி திண்ணையில் எழுதிய கதை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திருமணம் என்கின்ற மிகக் கட்டுபாடான அரங்கை விட்டு நகர விரும்பு பவர்களால் கூட சிலவேளைகளில் பண்பாட்டை கழற்றியெறிய முடியாது இருக்கின்றது என்பதைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் கவனப் படுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் கனடாவிலிருக்கும் போது அவ்வளவு கவனம் பெறாத தமிழ்நதி தமிழகத்திலிருந்து தனது தடங்களைப் பதிக்கத் தொடங்குகின்றார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்கின்ற கவிதைத் தொகுப்பும், ‘நந்தகுமாரனுக்கு எழுதியது’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. தமிழ்நதியின் கவிதை மொழியில் ஒரு வசீகரத்தன்மை இருந்தாலும் அவர் முன்வைக்கும் அரசியல் சிலவேளைகளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.</p>
<p>இவர்களைவிட மிகவும் கவனிக்கத்தக்க தொகுப்பை நிருபா ‘சுணைக்கிது’வாய் தந்திருக் கின்றார். சிறுமியிலிருந்து வளர்ந்த பெண் வரை பல பாத்திரங்கள் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுணைக்கிது கதையில் சிறுமி யருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குபவர் யாரென்பதை நேரடியாகச் சொல்லாமல் ஒரு வினாவாகத் தொக்கு நிறக் வைத்து அருமையான தொரு கதையாக முடித்திருப்பார். கிட்டத்தட்ட எஸ். ராமகிருஸ்ணன் தனது கதையன்றில் (விசித்திரி என நினைக்கிறேன்) மனநிலை பிறழ்ந்த பெண்ணொருத்தி யோடு உறவு கொண்டது யாரென்பதை கூறாமல் ஒரு கதை எழுதியிருப்பார். அதை ஒரு சிறந்த கதையாக சொல்லித் திரிந்த எவரும் நிருபாவின் சுணைக்கிது கதையைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டது வியப்பாக இருக்கிறது.</p>
<p>இதேவேளை பிரான்சிலிருந்து நீண்ட காலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் ‘தொலைவில்’ வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு. புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்களும்’, த. பாலகணேசனின் வர்ணங்கள் அழிந்த வெளியும் இதே காலப் பகுதியில் வெளிவருகின்றன.</p>
<p>3<br />
ஈழத்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார் கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த. அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு. வில்வரத்தினத்தின் தீவுகள் ஆக்கிரமிக்கப் படுவதைப் பாடிய ‘காற்று வெளிக்கிராமம்’, யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம் பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’ போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவு என்பதை விட அதற்கப்பால் எவ்விதமான தாக்கத்தையும் தரவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக் கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்பதால் இதை இப்போது சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது என்றே நம்புகிறேன். த. அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்ல முடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய ‘மரணத்தின் வாசனை’ முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்ய முடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத் தமிழிழம் குறித்த சோகமும் மரணத்தின் வாசனை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவர் தனது சகோதரரும் போரின் நிமித்தம் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.<br />
ஏன் இவர்களின் படைப்புக்களோடு இவர்களின் புறச்சூழல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவர்களைப் போன்ற பல படைப்பாளிகள் பலர் இவ்வாறான இழப்புக்களோடும் துயரங்களோடும் நேரடியாகப் பாதிக்கப்படடவர்கள். தாங்கள் நினைத்த நேரத்திற்கு கும்பமேளாவிற்கும், குமரிமுனைக்கும் போய் வருகின்ற ஜெயமோகன் போன்றவர்களுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழப்படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.</p>
<p>இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் ‘வேருலகம்’ பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டு போகக்கூடிய இடைவெளிகளை வாசகருக்குத் தரக்கூடிய ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காத போதும், மெலிஞ்சியின் ‘வேருலகு’ அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளி லிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.</p>
<p>ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சி யாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேச முடியாது. மேலும் தொகுப்பாய் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காத போதும் சிறுகதைகளில் தனித்து மிளிரும் திசேராவும், இராகவனும், கவிதைத் தளத்தில் பஹிமா ஜகானையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பி லிருந்து எழுதும் மலர்ச்செல்வனின் ‘பெரிய எழுத்திலும்’ ஒன்றிரண்டு நல்ல கதைகள் இருக்கின்றன. மஜீத்தின் ‘புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’, கருணாகரனின் ‘பலியாடு’ என்பவற்றையும் வாசிக்காத போதும் வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில் அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. இன்னும் யாழிலிருந்து வெளிவந்த பா. சத்தியமூர்த்தியின் ‘இப்படியாயிற்று நூற்றியராவது முறையும்’, புலத்திலிருந்து வெளிவந்த கலா மோகனின் ‘ஜெயந்தீசன் கதைகள்’ மற்றும் இரவி அருணாசலத்தின் ‘காலமாகி வந்த கதை’யும், வ.ந. கிரிதரனின் ‘அமெரிக்கா’ குறுநாவலும் சமகால வாசிப்பில் உள்ளடக்க வேண்டியவை. பொ. கருணாகரமூர்த்தியின் ‘கூடு கலைதல்’, ‘பெர்லின் இரவுகளும்’ கவனிக்கத்தக்கவை, அவரின் படைப்புக்கள் குறித்து அவரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசியிருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே பேசுவதைத் தவிர்க்கிறேன். மேலும் தொகுப்புக்களாய் வெளிவராத போதும் மிகவும் வசீகரித்த கதைகளை எழுதிய மைக்கல், பார்த்தீபன், சித்தார்த்த சே குவேரா போன்றவர்களை நாம் இந்த இடத்தில் தவறவிட முடியாது; இவ்வாறான பெயர்களைக் கொண்ட குறிப்பிடத்தக்க நீண்ட பட்டியல் நம்மிடையே இருக்கிறது. அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களையும், ஏற்கனவே நன்கு அறியப்பட்ட சேரன், சோலைக்கிளி, செழியன் போன்றோரின் இக்காலத்தில் வந்த தொகுப்புக்களையும் இங்கே பேசுவதைத் தவிர்க்கின்றேன்.</p>
<p>4<br />
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம் பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொரு வகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல் இலக்கியம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒரு காலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் எங்களைவிட கணிசமானோர் இலக்கியச் சூழலில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவர்களுக்கு ஏற்பட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வந்து நிரப்பி விடுகின்றார்கள்.<br />
மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப் படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா உட்பட பலநாடுகள் &#8211; ஜீஷீst ஷ்ணீக்ஷீ வரை &#8211; அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம் வரை காத்திருக்க வேண்டியிருக் கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிட்லர் பற்றியும் வெளிவந்த அதிகமான பதிவுகள் 21ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத் தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்பதுகூட வரலாற்றை முன்வைத்துப் பார்க்கும் போது மிகக் குறுகிய காலமே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்க முன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப் பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.</p>
<p>கடந்த 10 வருட காலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றில் கவனிக்கத்தக்க படைப்புக்களை பதிவு செய்த ஈழத்து இலக்கிய உலகம் நாவல் களிலோ விமர்சனம் உள்ளிட்ட அபுனைவுத் தளத்தில் அதிகளவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாவல்கள் என்று பார்க்கும் போது ஷோபா சக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘நிலாச் சமுத்திரம்’, நடேசனின் ‘வண்ணாத்திக் குளம்’, ‘உனையே மயல் கொண்டு’, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’, அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’. ரகுநாதனின் ‘ஒரு பனங்காட்டுக் கிராமத்தின் கதை’, எஸ்.பொ. வின் ‘மாயினி’ போன்றவையே ஒரளவாவது கவனிக்கத்தக்க படைப்புக்களாய் இருக்கின்றன. இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்றவையே முக்கிய முடையதாகின்றது. வண்ணாத்திக் குளம் சிங்கள/தமிழ் உறவுகளை அதிக ரொமாண்டிசை செய்தது போல இருக்க, ‘உனையே மயல் கொண்டு’ ஒரு ஆணாதிக்கப் பிரதியாகவும் யாழ்ப்பாணியக் கூறுகள் அதிகம் கொண்டதாகவும் தெரிகின்றது. ‘பனங்காட்டுக் கிராமத்தின் கதை’ ஈழத்துப் பஞ்சமர் வாழ்வைச் சொல்ல முற்படும் ஒரு படைப்பு என்றாலும் அதில் சில விடயங்கள் திருப்பச் திருப்பச் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகின்றது. சிறந்த கதை சொல்லியாக தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ.  மிக மோசமான தமிழ்த் தேசிய பிரச்சாரக் கதையாக ‘மாயினி’யைத் தந்திருக்கின்றார். அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புக்கள்’ அவை தனித்தளவில் சிறுகதைகளாய் இருக்கின்றதே தவிர ஒரு நாவலுக்கான வெற்றியை அது அடையவே இல்லை. விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ விளிம்பு நிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்க வேண்டிய நுண்ணிய பார்வையைத் தவறவிட்டுவிடுகின்றது.</p>
<p>ஆனால் இவ்வாறான சரிவுகளுக்காய் நாம் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச் சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டித் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும் போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. மேலும் நமது சக படைப்பாளிகளின் படைப்புக்களை தட்டிக் கொடுக்க வேண்டியதற்கு தட்டிக் கொடுத்தும், தடம்புரள்வதை சரியாக சுட்டிக்காட்டாமையுமே இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் சிலருக்கு &#8211; இதைச் சொல்வதால் கோபம் வரக்கூடும் &#8211; என்றாலும், நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கும் இலக்கியம் வரை இந்தியா மீதான அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.</p>
<p>‘காலம்’ சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கருத்துரை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/488/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/488/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/488/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=488&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/eelam.jpg" medium="image">
			<media:title type="html">Eelam</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அவலத்தின் வணிகம் &#8211; காலச்சுவடு கண்ணன்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 17:16:21 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=484</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 ‘எதுவரை’ (பிப்ரவரி-மார்ச் 2010) இதழில் பூதந்தேவனாரின் குறிப்பு கண்டேன். தமிழ் வெகுஜன ஊடகங்களிலும் வணிகப் பதிப்பகங் களிலும் அவை கையாளும் பிற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஈழத்தின் பேரவலமும் விற்பனைச் சரக்காக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எங்களுக்கும் தயக்கம் இல்லை. இதுபற்றி காலச்சுவடில் வெளிவந்த பதிவு இது: பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவு நிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் சிங்கள [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=484&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/kalachuvadu-kanna.jpg"><img class="alignnone size-large wp-image-485" title="Kalachuvadu kanna" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/kalachuvadu-kanna.jpg?w=594&#038;h=92" alt="" width="594" height="92" /></a><br />
‘எதுவரை’ (பிப்ரவரி-மார்ச் 2010) இதழில் பூதந்தேவனாரின் குறிப்பு கண்டேன்.</p>
<p>தமிழ் வெகுஜன ஊடகங்களிலும் வணிகப் பதிப்பகங் களிலும் அவை கையாளும் பிற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஈழத்தின் பேரவலமும் விற்பனைச் சரக்காக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எங்களுக்கும் தயக்கம் இல்லை. இதுபற்றி காலச்சுவடில் வெளிவந்த பதிவு இது:</p>
<p>பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவு நிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் சிங்கள அரசாங்கம் அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை ‘பிளாக்’கில் விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகை யாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50,000 பிரதிகள் கூடுதலாக விற்பனையாவதாக அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும்.</p>
<p>(ஊடகங்களின் இருண்ட காலம்,  கவிதா, இதழ் 117, செப்டம்பர், 09)<br />
<span id="more-484"></span><br />
அதே நேரத்தில் தமிழகத்தில் பல தளங்களில் ஈழப்பிரச்சனை ஆத்மார்த்தமாக அணுகப்படுகிறது என்பதும் உண்மை. பூதந்தேவனாரின் தார்பூசும் வேகத்தில் இந்த வேறுபாடுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.</p>
<p>சென்னைப் புத்தகச் சந்தையில் ஈழப் பிரச்சனை விற்பனைச் சரக்கானது, இன்றைய உலகளாவிய வணிகச் சூழலில் தவிர்க்க முடியாதது &#8211; விமர்சனத்திற்கு உரியது என்றாலும்கூட. மேலும் தமிழக ஊடகங்களில் வணிக மாக்குதல் என்பது ஈழம் சார்ந்து மட்டுமே ஏற்படுவது அல்ல. பாரதத் திருநாடு, தமிழணங்கு, கண்ணகியின் கற்பு, ஐயன் திருவள்ளுவர், தெல்காப்பிய உரை, நித்தியானந்தா லீலைகள், வீரப்பனார் வதை படலம், நாவரசு கொலை, உ.ரா. வரதராஜன் தற்கொலை, காஞ்சிபுரம் சுப்ரமணி (ஜெயேந்திர சரஸ்வதி) கைதும் வழக்கும், கற்பும் குஷ்புவும் என இங்கு வியாபாரச் சரக்கானவற்றில் சார்புகள் இல்லை. இன்று ஈழத்தில் ஒரு வலுவான பதிப்புச் சூழல் இருந்திருந்தால் அங்கும் அவலம் வியாபாரச் சரக்காக மாறியிருக்கும். இலங்கைத் தமிழ்/சிங்கள/ஆங்கில ஊடகங்களின் போர்க்கால விற்பனை கொடிகட்டிப் பரந்தமையும் அமைதிக் காலத்தில் சோர்வு கண்டமையும் உலக ரகசியமல்ல.</p>
<p>ஈழப் பிரச்சனை சார்ந்து தமிழகத்தில் நடக்கும் வணிகம் சென்னை மொழியில் சொன்னால் வெறும் ‘ஜுஜுபி’. வசூல் வேட்டை, ஆயுதக் கொள்முதல், ஆயுதக் கடத்தல், ஆள் கடத்தல், போதைப்பொருட் கடத்தல், அத்தியாவசியப் பண்டங்களின் கடத்தல், கொலை தொழில், கொள்ளை, புலி ஆதரவு நல்கைகள், புலி எதிர்ப்பு நல்கைகள், ஆள் காட்டும் பணி என ஈழத் தமிழர்களின் அவலத்தை இலங்கையிலும் அயலிலும் வணிகமாக்கிய ஈழத்தமிழர்கள் இல்லையா? இதனால் இவர்களையும் இப்பிரச்சனையில் ஆத்மார்த்த மாகச் செயல்பட்டு வரும் ஈழத் தமிழர்களையும் ஒரே வீச்சில் தார்பூசினால் அது தகுமா?</p>
<p>பிரபாகரனும் போராட்டமும் இங்கு விற்பனைச் சரக்கே அன்றி ஈழத்து இலக்கியம் சந்தைப் பொருளல்ல. ஈழத்து நூல்களின் தமிழக வாசிப்புத் தளம் பற்றியும் பிற தமிழ் நூல்களின் விற்பனையில் ஈழத்து/புலம் பெயர் வாசகர்களின் விகிதாசாரம் பற்றியும் அடிப்படையற்ற மிகையான கற்பனைகள் ஈழத் தமிழ்ச் சூழலில் நிலவுகின்றன. ஈழத்துப் படைப்புகள் இங்கு எத்தனை பிரதிகள் அச்சடிக்கப் படுகின்றன, எத்தனை ஆண்டுகளில் விற்பனை ஆகின்றன, எத்தனைப் பதிப்புகள் வெளிவருகின்றன என்ற எளிய கணக்கு இந்தக் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.</p>
<p>2003இல் அமைதிக் காலத்தில் யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒரு சந்திப்பில் இந்தக் கற்பனையை முதலில் எதிர்கொண்டேன். ஒரு பெரியவர் தமிழக பதிப்புச் சூழலே ஏதோ இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த வாசகர்களை ‘சுரண்டி’ நடப்பது போல இறுமாப்புடன் பேசினார். கூட்டத்தில் இப்பார்வைக்கு குறிப்பிட்ட ஆதரவு இருப்பதும் தெரிந்தது. தமிழகச் சூழல் அறிந்த அ. யேசுராசா இடையிட்டு தெளிவு படுத்தியும் இந்தக் கற்பனையைத் தகர்க்க முடியவில்லை. தமிழ் வெளியீடுகளின் விற்பனையில் ஈழத்து/புலம் பெயர்ந்தோர் வாசகப் பங்களிப்பு 10 சதவீதம்கூட இருக்காது என்ற சாதாரண உண்மையை நான் குறிப்பிட்டது கற்பனைவாதிகளுக்கு ரசிக்கவில்லை. சந்திப்பின்போது யேசுராசா ‘அதிசயமாக இங்கு ஏ.ஜே. வந்திருக்கிறார்’ என்றார். சந்திப்பு முடிந்ததும் அவரைத் தேடினேன். காணவில்லை. பின்னர் அவர் வீட்டிற்கே சென்றேன். நல்ல வெயில். எனக்கு அவர் பியர் சாந்தியளித்தபோது விசாரித்தேன். மேற்படி அபத்தத்தைத் தாங்க மாட்டாமல் கூட்டத்திலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என்றார்.</p>
<p>காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமியின் தமிழகம் &#8211; அயல் தமிழ் உறவுக்கான பங்களிப்பு முக்கியமானது. ஈழத்து எழுத்தாளர்களுடன் உறவு, ஈழத்து இலக்கியம் பற்றிய மதிப்பீடு, மலேசிய-சிங்கப்பூர்-புலம் பெயர் தமிழர் நோக்கிய பயணங்கள், உரையாடல்கள், கறாரான விமர்சனம் என இயங்கியவர் அவர்.</p>
<p>துவக்கம் முதலே ஈழத்து எழுத்தாளர்களுடன் விரிவான உறவைப் பேணிய இதழ் காலச்சுவடு. ‘தமிழ் இனி 2000’ வழி உலகத் தமிழ் அடையாளம் உறுதிப்பட காலச்சுவடு பங்களித்தது. 2006இல் நடத்திய ‘பாரதி 125, பு.பி. 100, சு.ரா. 75’ அமர்வுகளிலும் இலங்கை, தெற்காசிய தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு உண்டு. இன்றும் ஈழத்து எழுத்துடனும் அரசியலுடனும் வலுவான உறவைப் பேணி வரும் இதழ் காலச்சுவடு. (இதன் முக்கியமான ‘வணிக’ பின்விளைவு காலச்சுவடு இதழ்களை இலங்கைக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலைதான்.) சிங்கப்பூர் இலக்கியத்திற்காகத் தனிச் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. (அத்தகைய ஒரு மலேசிய இலக்கியத்திற்கான இதழை வெளியிடும் அறிவிப்புகளைச் செய்தும் போதிய ஒத்துழைப்பு இல்லாமையால் அதை முன்னெடுக்க முடியவில்லை.) சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இதழிலும் நூல்களாகவும் வெளியிட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்காக ஏங்கியபடி மலேசியத் தமிழர் பிரச்சனையைப் புறக்கணிக்கும் தமிழ் தேசியவாதிகளின் நிலைபாடு பலமுறை காலச்சுவடில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>தமிழக &#8211; அயல் தமிழ் இலக்கிய உறவை வலுப்படுத்தும் நோக்கோடு பல முறை நான் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா என பயணித்துள்ளேன். (தமிழ் இனி 2000 தொகுதி சிங்கப்பூரிலும் மலேசியாவிலுமே வெளியிடப்பட்டது). இந்தப் பயணங்கள் எதுவுமே தமிழ் நண்பர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அங்கு வசூல் வேட்டை, சந்தா சேகரிப்பு, பிரதிகள் சேகரிப்பு என எதிலும் ஆர்வம் காட்டியது இல்லை. நட்பும் தொடர்பும் புரிதலும் உரையாடலுமே நோக்கமாக இருந்தன.</p>
<p>தமிழகத்தில் இலக்கிய ஆய்வுகளில் தமிழ் இலக்கியம் என்பது தமிழக இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் பிழை நடப்பதுண்டு. ஆனால் காலச்சுவடு இவ்விஷயத்தில் கவனமாகவே இருந்து வருகிறது. தமிழ் இனி 2000 தொகுதி இதற்கு தக்க சான்று.</p>
<p>காலச்சுவடு இதழ் 119இல் வெளிவந்த ‘புதிய கவிதை 50’ இதழின் சட்டகம் எழுத்து இதழின் 50ஆவது ஆண்டும், தமிழ் புதுக்கவிதைக்கு வித்திட்ட க.நா.சு.வின் ‘கலையின் பிறப்பு’ கட்டுரையின் 50ஆவது ஆண்டும் ஆகும். இவற்றின் தாக்கம் ஈழத்திலும் உண்டு என்ற போதிலும் புதிய கவிதைக்கான இந்தச் சட்டகம் இலங்கை நவீன கவிதைக்கு இறுக்கமாகப் பொருந்தக் கூடியது அல்ல என்பதே எங்கள் புரிதல். இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் இவ்விதழில் ஈழத்துக் கவிதை போக்குகளை உள்ளடக்கவில்லை. (ஈழத்திலோ புலம்பெயர் சூழலிலோ எந்த ஊடகமும் ‘எழுத்து’ இதழின் 50ஆம் ஆண்டைக் கவனப்படுத்தியதாகத் தெரிய வில்லை.) எத்தனை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் காலச்சுவடு வெளி யிட்டுள்ளது! இதுபற்றிய விழிப்புணர்வு இன்றி காலச்சுவடை குற்றஞ்சாட்டுவது விமர்சனத்தின் வெளிப்பாடு அல்ல. பூதந்தேவனார் பார்வையில் 20 ஆண்டுப் பங்களிப்பு புலப்பட வில்லை போலும். கற்பனையான இன்மை மட்டுமே தெரிந்திருக்கிறது. காலச்சுவடு 121ஆம் இதழில் (ஜனவரி 2010) ‘புத்தாயிரத்தின் இலக்கியம்’ என்ற சிறப்பிதழில் சுகுமாரன் தமது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:</p>
<p>“ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதை களையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்துவந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற்றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து. ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லா மலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலைத் தீண்டத்தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியேவைத்திருந்தன.</p>
<p>அவசரநிலைக் காலம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும். போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்தின. பெண் நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். சொல்லாத சேதிகள் என்னும் தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.</p>
<p>இந்த பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களைத் தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம். ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றித் தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறுபக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப் பதையும் உணரலாம்.”</p>
<p>“தமிழ் இலக்கியப் பெருவெளியில் எப்போதுமே விமர்சன மேலாண்மையும் புலமைக்கான கிரீடங்களும் தமிழக ஜாம்பவான்களிடமே இருக்கிறது” என்கிறார் பூதந்தேவனார். மார்க்சிய இலக்கியப் பார்வை தமிழ் இலக்கியத்தில் கோலோச்சியபோது கைலாசபதி, சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் என ‘விமர்சன மேலாண்மையும் புலமைக்கான கிரீடங்களும்’ ஈழத்திலும் இருந்தமையை அவர் மறந்தது ஏன்? உலகத் தமிழ் அடையாளத்தை உருவாக்கும் பெரும் பணியில் பரஸ்பர விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்கப்பட வேண்டியவை. ஆசூயைகள் தவிர்க்கப்படவேண்டியவை.</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/'>எதிர்வினை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/484/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=484&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/kalachuvadu-kanna.jpg?w=1024" medium="image">
			<media:title type="html">Kalachuvadu kanna</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒகோனி  மக்களின் போராட்டம் &#8211; சொகரி எகின்னே</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%92%e0%ae%95%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%92%e0%ae%95%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 16:39:57 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=478</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 நைகர் ஆற்றின் மற்றைய கழிமுகப் பிரதேசங் களைப் போல, 1958ல் ஒகோனிகளின் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அந்த நிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அந்த மக்களின் துயரத்தில் கென்சரோ விவாவின் குறுக்கீடு முக்கியமானதாகும். அது அவர்களின் போராட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது. இப்போராட்டத்தில் ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப் பட்டனர். நதிப் பிரதே அரசின் தலைநகர் போட் வராகெட்டிலிருந்து வடக்குப் பக்கமாக உள்ள 400 சதுர மைலில் பரந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=478&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-1.jpg"><img class="alignnone size-full wp-image-479" title="ogoni- 1" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-1.jpg?w=455&#038;h=119" alt="" width="455" height="119" /></a><br />
நைகர் ஆற்றின் மற்றைய கழிமுகப் பிரதேசங் களைப் போல, 1958ல் ஒகோனிகளின் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அந்த நிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அந்த மக்களின் துயரத்தில் கென்சரோ விவாவின் குறுக்கீடு முக்கியமானதாகும். அது அவர்களின் போராட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது. இப்போராட்டத்தில் ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப் பட்டனர்.</p>
<p>நதிப் பிரதே அரசின் தலைநகர் போட் வராகெட்டிலிருந்து வடக்குப் பக்கமாக உள்ள 400 சதுர மைலில் பரந்து கிடக்கும் 200 கிராமங்களில் கிட்டத்தட்ட 5,00,000 ஒகோனி மக்கள் வாழ்கிறார்கள். கழிமுகத்தின் மற்றைய பிரதேசங்களைப் போல ஒகோனிகளின் நிலத்திலும் நூற்றுக்கணக்கான குழாய்கள் குடிமனைகளுக்கூடாகவும் விவசாய நிலங்களுக்கூடாகவும் மசகு எண்ணெய்யை கொண்டு செல்கின்றன. அவைகளிலிருந்து வெடித்தெழும் தீச்சுவாலைகளால் கரும் தூசும் கக்கும் சூழலை மாசுபடுத்துகின்றன. கடந்த 40 வருடங்களாக நாள் தவறாமல் இந்நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை எண்ணெய் கம்பெனிகளின் கவனக்குறைவாலும் பராமரிப்பு குறைவாலும் நிகழ்கின்றன. சூழல் துஷ்பிரயோகம் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பாராமுகம், சரியான வளப்பங்கீடு இன்மை, விவசாய நிலங்களின் சேதத்துக்கு இழப்பீடு இன்மை போன்றவையே நைகர் கழிமுகப் பிரதேசங்களில் நடைபெறும் போராட்டத்துக்கு காரணங்களாகும்.<span id="more-478"></span></p>
<p>நைஜீரியாவின் வரலாற்றில் ஒன்பது ஒகோனி செயற்பாட்டாளர்களை தூக்கிலிட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வன்முறை, மோசடி இயல்பு கொண்டது நைஜீரிய சர்வாதிகார ஆட்சி என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது. 1992ல் செல்பெற்றோலியம் அபிவிருத்தி கம்பெனி (ELF  உடனும் Agip உடனும் இணைந்து செயல்படுவது) நைஜீரியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் அரைப்பங்கை உற்பத்தி செய்தது. அவைகளின் 94 எண்ணெய் வயல்களில் ஐந்து ஒகோனி நிலத்தில் உள்ளன.</p>
<p>நைஜீரிய அரசாங்கம், செல் கம்பெனி ஆகிய இரு கொடுங்கோலர்களுக்கும் எதிரான ஒகோனி மக்களின் போராட்டத்தின் நோக்கம் தங்களது இருப்புக்கு மாற்று ஏற்பாட்டை அடைதலாகும். சமஷ்டி ஆட்சிமுறையும் உச்ச அளவில் இராணுவமயப்பட்டது மான நைஜீரிய அரசாங்கம் மோசடிகளும் சுயநலமும் மலிந்ததாகும். அது நரமாமிசம் உண்ணும் பிசாசு நிலைக்கு இழிந்துள்ளது. அதன் பிரதான விசுவாசி பல்தேசியக் கம்பெனிகளாகும். அவைகள் எண்ணெய் வர்த்தகத்துக்குக்காக மக்களையும் வளங்களையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளன.</p>
<p>நைஜீரிய சமஷ்டி அரசாங்கம் இனிமேலும் ஒகோனி மக்களது பொதுச் சொத்துக்களை நிர்வகிப்பவராக இருக்கக் கூடாது என்றும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்ற பயமில்லாமல் எண்ணெய் கம்பெனிகள் செயல்பட்டு சூழலை நாசமாக்கக் கூடாதென்றும் ஒகோனி மக்கள் உறுதியாக கூறுகின்றனர். இதன் பொருட்டாக ஒத்துழையாமை யையும் நேரடி நடவடிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வன்முறையற்ற இயக்கமொன்ற கென்சரோ விவா தலைமையில் இயங்குகிறது. அது பல வகைகளில் மார்ட்டின் லூதர் சிங்கின் சிவில் உரிமைகள் இயக்கத்தை ஒத்தது. கென்சரோவிவா தனித்தனியாக ஆனால் தங்களுக்குள் தொடர்புடைய மூன்று எதிரிகளுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளார். முதலாவது நைஜீரிய அரசு இரண்டாவது செல் கம்பெனி. மூன்றாவது தரப்பினர் குறைந்தளவு எதிர்ப்புடையவர்களெனினும் மிகவும் சிக்கலான வர்கள். அவர்கள் மேலோங்கிய (elite)  ஒகொனிகளும் பாரம்பரிய ஆட்சியாளர் அடங்கிய குழுவினராவர்.<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-12.jpg"><img class="alignright size-large wp-image-480" title="ogoni- 12" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-12.jpg?w=468&#038;h=246" alt="" width="468" height="246" /></a><br />
சரோவிவா ஒகோனி மக்களை தன்னாட்சிக் காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடத் தூண்டினர். பாப்பே, எலெமெ, கோகனா, கென்கனா, நையோகனா, ரை என்ற ஆறு பிராந்தியங்களாக பிரிபட்டிருக்கும் ஒகோனிகளுக்கு பொதுவான அடையாளம் ஒன்றை &#8211; உலகளாவிய அடையாளம் ஒன்றை உருவாக்குவது இதற்கு முதல்படியாகும். உரிமை மசோதாவும் ஒகோனிகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொடுத்தது. அது சுயநிர்ணயம், வளக்கட்டுப்பாடு, தன்னாட்சி போன்ற உரிமைகளையும் கோர வழி செய்தது.<br />
ஒகோனி மக்களை இயக்குவதற்கான கருவிகளாக தனித்துவ அடையாளமும் உரிமைகள் மசோதாவும் இருந்தன. இந்த உரிமைகள் மசோதாவை கென்சரோ விவாவே எழுதினார். 26 ஆகஸ்டு 1990 ஆறு கோத்திரங்களின் தலைவர்கள் உட்பட 30 முக்கிய ஒகோனிகள் இதை ஏற்று கைச்சாத்திட்டனர். எலெமே கோத்திரம் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டது. பின் நோக்கி பார்க்கும் போது எலெமே கோத்திரத்தின் பின்வாங்கல் சுயநலமானதென்பதும் அதனால் போராட்டம் பின்னடைந்தது என்பதும் தெளிவா கிறது. கடைசியில் சரோ விவாவை அது தனிமைப் படுத்தியது.</p>
<p>உரிமைகள் மசோதா ஒகோனி மக்களின் காலனித்துவ காலத்துக்கு முன்னுள்ள வரலாற்றையும் அவர்களின் பிரதேசத்தில் இருந்து எடுக்கும் எண்ணெய் வருமானத்தால்தான் நைஜீரியா செழிக்கிற தென்பதையும் இதற்கு பதிலாக அவர்கள் எதையும் பெறவில்லை என்பதையும் விளக்குகிறது. அது அரசாங்கத்தின் இனக்கொலை மற்றும் ஒகொனி மொழியை இல்லாமல் செய்யும் போக்கையும் ஒகோனி இருப்புக்கு இருக்கும் ஆபத்தையும் எடுத்துக் காட்டுகிறது. கடைசியாக அது ஏழு கோரிக்கைகளை நைஜீரிய அரசுக்கு முன்வைக்கிறது. அவைகள் வளக்கட்டுப்பாடு, இனக்குழு தன்னாட்சி மற்றும் சுற்றுச்சூழல் இனியும் சேதமுறாமல் இருக்க 27 பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவைகளை அக்கோக்கைகள் கொண்டுள்ளன. ஒகோனி மேலோங்கிகளை உரிமைகள் மசோதாவை ஒப்புக்கொள்ள வைப்பது இலகுவானதெனினும் போராட்டத்தில் இணைப்பது இலகுவானதல்ல.</p>
<p>ஒகோனி கோத்திர உட்பூசல் அரசியலின் சிக்கல் களையும் அவைகளிடையே உடன்பாடுகனெ சரோவிவா அரும்பாடு பட்டதையும் தனது புத்தகத்தில் விளக்கும் இக்மே ஒகொண்டா தொடக்கத்திலிருந்தே ஒம்ஓஎஸ்ஒபி (MOSOP-Movement for the Survival of Ogeni People) ஒரு பலவீனமான கூட்டு என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஒகோனி உரிமைகள் மசோதாவும் எம்ஓஎஸ்ஓபியும் ஒகோனிக்கு ஓர் அடையாளத்தை வழங்கி அவர்கள் ஓர் இனக்குழுவாக (ethnic) செயல்பட வைத்தது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார். விழிம்பு நிலைக்குழுவினரான இளைஞர்களையும் பெண்களையும் எம்ஓஎஸ்ஓபிக்குள் அடக்கிக் கொள்வது சரோ விவாவின் நோக்கம். இதனால் ஒகோனி மக்களின் தேசிய இளைஞர் சபையும் (NYCOP)  ஒகோனி பெண்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் (FOWA) சரோவின் இலக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன.</p>
<p>இருந்தபோதிலும் யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. 1990ல் இருந்து எம்ஓஎஸ்ஓபி ஒகோனி மேலோங்கிகளின் இயக்கமாக மாறத் தொடங்கியது. இந்த மேலோங்கிகள் ஆங்கிலம் பேசபவர்களாகவும் ஒகோனி வெகுசனங்களை குறிப்பாக பெண்களை ஓரம் கட்டுபவர்களாகவும் இருந்தனர். ஒரு வருடத்தில் ஒகோனி ஐக்கியத்திலும் எம்ஓஎஸ்ஓபி யிலும் பாதக விளைவுகள் ஏற்படத் தொடங்கின. சுதாகரித்துக் கொண்ட சரோவிவா ஒகோனி சார்பான நிலைப்பாடுகளை எடுத்து மக்களின் மனிதனாக மாறினார். அதனால் மேலோங்கிகள் அவரை தங்கள்  நலத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவராக பார்க்க தொடங்கினர். பல்வேறு நலன்களை கொண்ட குழுவினர் மீது சரோவின் இயக்கத்தின் தாக்கம் பற்றி அடோகியுவெய்சன் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அரசுக்கும் பல்தேசிய கம்பெனிகளுக்கும் எதிராக ஒரு அசைவியக்கத்தை மேற்கொள்ளும் சரோவிவா பல்வேறு வரலாற்று செயல்பாடுகளையும் உட் செரித்து கொண்டவராக இருந்தார். அவரின் எண்ணெய் மற்றும் சூழல் உரிமைகளுக்கெதிரான போராட்டம் மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்தது”.<br />
உள்ளூர் மட்டத்தில் புரட்சிகர செயல்பாடுகளை பூரணமமாக உணராத பாரம்பரிய நோக்குடையவர் களுடனும் மாறுதலை ஏற்றுக்கொள்ள மனோபாவ முடையவர்களுடனும் அவர் மோதினார்.</p>
<p>ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்களின் தூக்கு தண்டனைக்கு பிறகு எம்ஓஎஸ்ஓபி தன்னையும் போராட்டத்தையும் கொண்டு நடத்த முடியவில்லை. குற்றச்சாட்டுக்கள் பெருகின; பிரிவினைகள் மேலெழுந்தன; காட்டிக் கொடுப்புகள் மலிந்தன. எல்லாவற்றையும் விட இயக்கத்தின் மையமாக இருந்த மக்களின் பக்திக்கும் நம்பிக்கையும் உரிய தலைவர் மௌனியாக்கப்பட்டார்.</p>
<p>15 வருடங்களுக்கு பின்னர் நைகர் ஆற்றின் கழிமுகப் பிரதேசத்திலிருந்து நாலு விவசாயிகளும் பூமியின் நண்பர்கள் இயக்கமும் (நெதர்லாந்து) செல் கம்பெனிக்கெதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஹக்கில் (Hague)  நடந்தது. இந்த வழக்கு எண்ணெய் கம்பெனியால் ஏற்படும் சூழல் பாதிப்பையும் கவனக்குறைவையும் வெளிச் சத்துக்கு கொண்டுவந்தது. நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது.</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கட்டுரை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/478/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=478&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%92%e0%ae%95%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-1.jpg" medium="image">
			<media:title type="html">ogoni- 1</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ogoni-12.jpg?w=1024" medium="image">
			<media:title type="html">ogoni- 12</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆளுமை &#8211; த.இராமலிங்கம் &#8211; கருணாகரன்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 15:59:40 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[ஆளுமை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=471</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 அ.செ.முவையும் தா. இராமலிங்கத்தையும் நினைக்கும் போது ஏனோ தெரியாது, எனக்கு நகுலனும் பிரமிளும் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்பாளுமை, படைப்புலகம் என்பன வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் இந்த நான்குபேரும் ஏதோ ஒருவகையில் உள்ளார்ந்த விதமாக ஒன்றுபட்டிருப்பதைப் போலவே உணர்கிறேன். அந்த ஒன்று படுதல் என்ன என்று இதுவரையில் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மெல்லிய இழையாக இவர்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோ ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=471&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/thramalingam-01.jpg"><img class="alignnone size-full wp-image-472" title="thramalingam-01" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/thramalingam-01.jpg?w=455&#038;h=78" alt="" width="455" height="78" /></a><br />
அ.செ.முவையும் தா. இராமலிங்கத்தையும் நினைக்கும் போது ஏனோ தெரியாது, எனக்கு நகுலனும் பிரமிளும் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்பாளுமை, படைப்புலகம் என்பன வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் இந்த நான்குபேரும் ஏதோ ஒருவகையில் உள்ளார்ந்த விதமாக ஒன்றுபட்டிருப்பதைப் போலவே உணர்கிறேன். அந்த ஒன்று படுதல் என்ன என்று இதுவரையில் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மெல்லிய இழையாக இவர்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோ ஒரு விசயம் அல்லது ஏதோவொரு அம்சம் என்னவென்று என்றேனும் நிச்சயம் கண்டுணரலாம். உணர்தளத்திலிருந்து அது துலக்கமாக மேற்கிளம்பி வரக்கூடும்.</p>
<p>இதுவரையில் எனக்குப்பட்டது இவர்களிடம் குவிந்திருக்கும்  தனிமைதான் இந்த நான்குபேரையும் அப்படி ஒன்றாக நினைக்கத் தோன்றுகிறது எனலாம். ஆனாலும் இதை நான் மங்கலாகவே கண்டுள்ளேன். இந்தத் தனிமையை இவர்களின் படைப்புகளின் வழியே துலக்கமாகக் காணமுடியவில்லை. பதிலாக இவர்களின் வாழ்க்கையில்தான் அதைப் பார்க்க முடியும்.</p>
<p>வாழ்க்கையில் இருந்த இந்தத் தனிமை இவர்களிடம் அந்தப் பிரக்ஞையுடன் உணரப் பட்டிருந்தால் அது எப்படியும் இவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டிருக்குமே என்று ஒரு நண்பர் கேட்டார். இதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களின் எழுத்துகளில் உள்ளோட்டமாகப் படிந்திருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையும் ஆன்மீக தரிசனங்களும் சொல்வதென்ன? தனிமையின் புள்ளியிலிருந்து வேர்விடும் தரிசனம்தானே இது.<br />
<span id="more-471"></span><br />
பிரமிள் வேகமும் தீவிரமும் உடையவர். அந்த வேகத்தையும் தீவிரத்தையும் இன்னொரு நிலையில் கொண்டவர் நகுலன். ஆனால் அந்த அளவுக்கு அ.செ.முவும் தா.இராமலிங்கமும் வேகமும் தீவிரமும் கொண்டவர்களல்ல. அ.செ.மு முழுக்க முழுக்க வெளிப்டையாகவே சமூகத்தை விமர்சிக்கும் எழுத்தின் நாயகர். பிரகடனங்களில்லாத எழுத்துலம் அவருடைய பலம். கிண்டலும் அங்கதமும் அவருடைய சிறப்பு. பிரமிளும் நகுலனும் பரிசோதனைகள், படைப்புலகத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளை, வடிவங்களை எல்லாம் தங்கள் படைப்பு வாழ்க்கையில் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்புலகில் இந்த இரண்டு பேரும் சாதனைகள் என்ற அளவில் தங்களை நிலை நிறுத்தியவர்கள். அ.செ.மு அந்த அளவுக்குச் செல்லவில்லை. ஆனாலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தன்னை நிறுவியவர்.</p>
<p>தா. இராமலிங்கம் கவிஞர். இராமலிங்கத்தின் சிறப்பு பேச்சோசையை, நடைமுறை வாழ்க்கையை, புழங்கு மொழியை தன்னுடைய கவிதை இயக்கத்தில் கொண்டு வந்தவர். ஈழத்துக் கவிதைகளில் இந்தப் பண்புகளை மஹாகவியும் தா. இராமலிங்கமும் மிகச் செழிப்பாக, பிரக்ஞை நிலைப்பட்டுக் கொண்டு வந்தவர்கள். இதை 1950 களில் இவர்கள் இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள். மஹாகவி மரபான வெளிப்பாட்டு வடிவத்தில் புதுமைகளை நிகழ்த்த முனைந்தவர். அதில் குறிப்பிடக் கூடிய எல்லைவரை சென்றவர். ஆனால், தா.இராமலிங்கம் புதிய வெளிப்பாட்டு முறைமையில் மிகச் சாதரணமாகவே தன் கவிதைகளை, தன்னுடைய படைப்புலகத்தை உருவாக்க முனைந்தவர். தா. இராமலிங்கம் அதிகம் எழுதவில்லை. படைப்புலகத்தில் தொடர்ந்து இயங்கவும் இல்லை. தீவிரமாகப் படைப்புலகத்தை அவர் அணுகவும் இல்லை. ஆனால் அவர் ஈழத்துக் கவிதையுலகத்தில் நிராகரிக்க முடியாத படைப்பாளி. புதிய கவிதைகளின் முன்னோடி. ஈழத்தில் முதன்முதலில் புதுக்கவிதை நூலினை 1960 களில் வெளியிட்டு ஊக்கநிலையை ஏற்படுத்தினார் அவர். அப்போது ஈழத்தில் நிலவிய இலக்கியப் போக்கையும் விமர்சன இயக்கங்களையும் மேவி எழுந்தார் தா. இராமலிங்கம்.<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ramalingam-karunakaran.jpg"><img class="alignright size-full wp-image-473" title="Ramalingam karunakaran" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ramalingam-karunakaran.jpg?w=455&#038;h=344" alt="" width="455" height="344" /></a><br />
தா. இராமலிங்கத்தை முதன்முதலில் சரியாக இனங்கண்டவர் மு. தளையசிங்கம். இராமலிங்கத் தின் முதலாவது கவிதை நூலான ‘புதுமெய்க் கவிதைகளு’க்கு கவிஞர் இ. முருகையன் முன்னுரை எழுதியிருந்தபோதும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளை ஏற்பதற்கோ, புதிய கவிதை இயக்கத்தை அங்கீகரிப்பதற்கோ முருகையனிடம் தயக்கங்களிருந்தன. ஆனால், மு. தளையசிங்கம் தா. இராமலிங்கத்தையும் அவருடைய புதிய கவிதை இயக்கத்தையும்  சரியாக இனங்கண்டு கொண்டார். அதை அவர் பேருவகையுடன்  முன்னிலைப் படுத்தினார். இதை நாம் தா. இராமலிங்கத்தின் இரண்டாவது கவிதை நூலான காணிக்கையில் (1965) காணலாம். இந்த நுலீலில் எஸ். பொவும் முன்னீடும் உண்டு. ஆனால், காணிக்கை கவிதைத் தொகுதிக்கு மு. தளையசிங்கம் எழுதியிருக்கும் முன்னுரை முக்கியமானது. அது புதிய கவிதை இயக்கத்தைக் குறித்த விரிவான ஒரு ஆய்வுரையே.</p>
<p>அப்போது பேராசியர் க. கைலாசபதியும் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஈழத்து விமர்சன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந் தனர். ஆனால், தா. இராமலிங்கம் இவர்கள் இருவரிடமும் தன்னுடைய நூல்களுக்கான முன்னுரையினை வாங்கவில்லை. பதிலாக இவர்களிடமிருந்து விலகியிருந்த மு. தளைய சிங்கத்திடமும் எஸ்.பொ. விடமும்தான் முன்னுரை களை வாங்கியிருக்கிறார். அவர் தன்னுடைய இலக்கிய வழியை, அதன் செல்நெறியை மு. தளைய சிங்கத்திடம்தான் கண்டிருக்கிறார். பின்னாளில் மு. தளையசிங்கத்தின் மெய்யுள் வழியில்தான் அதிக நம்பிக்கையோடு தா. இராமலிங்கம் நெருக்கமாக நின்றார். இதற்கு அவரிடம் உள்ளோட்டமாக இருந்த ஆன்மீக ஈடுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.<br />
தா. இராமலிங்கத்தின் கவிதைகள் சமூக அக்கறையுடையவை. போலி ஆசாரங்களின் மீதும் பொய்யான நம்பிக்கைகளின் மீதும் ஆழமான விமர்சனங்களை முன்வைப்பவை.</p>
<p>யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் பேரினவாதச் சிந்தனையில் மையங் கொண்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் மீதும் தா. இராமலிங்கம் கடுமையான எதிர் வினைகளை ஆற்றியிருக்கிறார். அவர் இயங்கிய கால எல்லையில் நிலவிய அனைத்துவகையான சமூக நீதியின்மைகளுக் கெதிராகவும் அவர் குரல் எழுப்பியிருக்கிறார். இதை மு.தளையசிங்கமே மிகவும் தெளிவாகத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் &#8211; ‘தா. இராம லிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தி யின்மையும் அந்தத் திருப்தியின்மெ கோரும் மாற்றமும்தான் முத்திரை பதித்து நிற்கின்றன’ என்று.</p>
<p>யாழ்ப்பாணத்தில் நிலவும் போலியான ஆசாரங்கள் பலவும்தான் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கிறது. அதேவேளை எந்தச் சமூகங்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பும் யாழ்ப்பாணத்துக்கும் உண்டு. உதாரணமாக வரண்ட பூமியான யாழ்ப் பாணத்தை தங்களுடைய உழைப்பால் வளப்படுத்தி, அந்த வளத்தை வைத்து வாழ்கின்ற இயல்பையும் சிறப்பையும் மஹாகவி எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். இதைப் போல பலரும் யாழ்ப்பாணத்தின் சிறப்புகளை தங்கள் படைப்புகளில் பதிவுகளாக்கியிருக்கிறார்கள். அதைப்போல எல்லோரும் இந்தச் சமூகத்தின் குறைபாடுகளை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றனர். இது ஒரு சுவாரஷ்யமான விசயம். கடந்த அறுபது எழுபது ஆண்டுகால எழுத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் யாழ்ப்பாணச் சமூகத்தின் அத்தனை போக்குகளையும் இனங்காண முடியும். இந்தக் காலப்பகுதியில் நிலவிய சாதியப் பிரச்சினைகள், அதற்கெதிரான போராட்டங்கள், தமிழ் மக்களின் இனவுணர்வு, அதன் விளைவான அரசியல், அதன் தொடர்ச்சியான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தின் அத்தனை குறைபாடுகளுடனும் சிறப்புகளுடனும் முன்னெடுக் கப்பட்ட ஆயுதப் போராட்டம், அந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிறப்பும் ஜனநாயக மறுப்பும் எனச் சகலதையும் நாம் இந்தக் கால எழுத்துகளில் பார்க்க முடியும்.</p>
<p>ஆனால், இராமலிங்கம் இந்தக் காலப்பகுதியில் தான் இயங்கிய காலப்பகுதியின் நிழ்வுகளையும் போக்களையும் அதற்காதரவான/எதிரான நிலைப் பாடுகளையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதியத்துக்கெதிரான அவருடைய பதிவுகள் முக்கியமானவை.<br />
‘&#8230;வேளாளர் குடிப்பிறந்து<br />
பிறர்<br />
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் &#8230;..’<br />
‘இன்பம் நுகர்ந்தேன்<br />
என்<br />
ஆசார முட்டையிலும்&#8230; ஆசார முட்டையிலும்<br />
கறுப்பு மயிர் கண்டேன்&#8230;’<br />
(ஆசைக்குச் சாதியில்லை)<br />
‘ஐயோ வாடி வீடே<br />
நீ வதை கூடமானாயே&#8230;’<br />
என்றும்<br />
சாவிளைச்சல் சாவிளைச்சல்<br />
சரித்திரம் காணாத சாவிளைச்சல்&#8230;’<br />
எனவும்<br />
‘கோழி குழறகுதே<br />
மரநாய்தான் மரநாய்தான் &#8230;’<br />
(நெஞ்சு பதறுகுது)</p>
<p>என்றும் அரச பயங்கரவாதத்தின் விளைவான எண்பதுகளின் நிலைமைகளை இராமலிங்கம் எழுதினார். இராமலிங்கம் இப்படி எழுதியவை பின்னாளில் தமிழ் அரசியலில் நிகழ்ந்தேறிய துரதிர்ஸ்டம் வேறு. அப்போதும் அவருடைய கவிதைகள் நினைவில் வந்தன.</p>
<p>யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதியில் கல்வயல் என்ற இடத்தில் பிறந்தவர் தா. இராமலிங்கம். இந்தக்கிராமத்தில்தான் ஈழத்தின் இன்னொரு முக்கிய கவிஞரான இ. முருகையன், அவருடைய தம்பியாரான இ. சிவானந்தன், கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஆகியோரும் பிறந்தனர். இவர்கள் எல்லோரும் பேச்சோசையைத் தங்கள் கவிதைகளில் மையமாகக் கொண்டிருந்தவர்கள். பின்னர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் ஒரு மையமாக இந்தப் பண்பைக் கொண்டியங்கியவர்கள். அதேவேளை இவர்கள் அனைவரும் அமைதி, தீவிரம் என்ற நிலைகளில் அதிக ஒற்றுமையையும் கொண்டிருந்தனர். கல்வயல் வே. குமாரசாமி கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் ஆள் என்றாலும் மற்றவர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பேணும் இயல்பைக் கொண்டிருந்தனர் எல்லோரும்.</p>
<p>பிரமிள் எழுதத் தொடங்கிய காலப்பகதியில்தான் தா. இராமலிங்கமும் எழுதத் தொடங்கினார். அதுவும் புதுக்கவிதை இயக்கத்தில். ஆனால் இவர் தமிழகத்தில் அதிக கவனத்தை பெறவில்லை. தமிழகத்தில் படிப்பை முடித்துக் கொண்டு தா. இராமலிங்கம் ஈழத்துக்குப் பதுக்கவிதை இயக்கத்தைப் பற்றிய கனவுகளோடு திரும்புகிறார். அந்தக் கனவுகளோடு பிரமிள் ஈழத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்கிறார். இந்த இருவருக்கும் உள்ள சில நெருக்கமான ஒற்றுமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. பிரமிள் தமிழகத்தில் கவிதை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவரால் அதில் உச்சங்களைத் தொடமுடிந்தது. ஆனால் தா. இராமலிங்கம் இடையில் நின்று கொண்டார்.</p>
<p>தா. இராமலிங்கம் 1950களில் எழுதத் தொடங்கினாலும் தொடர்ந்து படைப்பியக்கத்தில் அவர் ஈடுபட்டதில்லை. இடையிடையே அவருக்கு உறங்கு காலங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக அவருடைய மகன்களில் ஒருவர் அகாலமரணமானதை அடுத்து அவர் குறிப்பிட்ட காலம் எழுதவேயில்லை. அப்போது மிகுந்த அழுத்தத்துக்கும் உள்ளாகி யிருந்தார். தா.இராமலிங்கத்தை நான் சந்தித்ததும் இந்தக் காலப்பகுதியில்தான். அது எண்பதுகளின் இறுதிப்பகுதி. அலையிலும் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதியிலும் தா.இராமலிங்கத்தை அடையாளம் கண்டிருந்தேன். அதன் பின்னரே அவருடைய புதுமெய்க் கவிதைகளையும் காணிக்கை யையும் நண்பர் யேசுராசா தந்திருந்தார். யேசுராசாதான் தா.இராமலிங்கத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், இந்த விவரங்களும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளும் அவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின. அந்தக் காலப்பகுதியில் நான் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருந்தது. எண்பதுகளின் தொடக்ககால அரசியல் போக்கில் ஈடுபட்டதன் விளைவாக எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் அப்படியரு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். தா. இராம லிங்கத்தை நான் சந்தித்தபோது அவர் பெரும்பாலும் மௌனநிலையிலேயே இருந்தார்.</p>
<p>மௌனத்தையே தன் பொழுதில் பெரும்பாலும் அவர் கடைப் பிடித்தார். தியானமும்  மௌனமும் தான் அவருடைய பொழுதுகள் என்றிருந்தன அப்போது. அபூர்வமாக எப்போதாவது பேசுவார். ஆனாலும் நான் அவரிடம் இடையிடையே போய்வந்து கொண்டிருந்தேன். அவர் சிலபோத ஆர்வத்தோடு கதைப்பார். பல சமயங்களிலும் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார். சாந்தமான அந்த முகத்தில் ஒரு போதும் நான் எந்த வன்மத்தையும் சினத்தையும் கண்டதில்லை. மெல்லிய புன்னகை மலர்ந்திருக்கும். கேலி, கிண்டல், அதிர்ந்த பேச்சு, பிறரைப்பற்றிய விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் என்று எதையும் அவருடைய எந்த உரையாடலிலும் நான் கண்டதில்லை.</p>
<p>ஏன், தன்னுடைய எழுத்துகளைப் பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை. ஆனால் தியானத்தை, மௌனத்தில் இருக்கும் ஆனந்தத்தை, தன் மனதில் இருக்கின்ற விடுதலைத் தாகத்தை, பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய வியப்பை, அதை நோக்கிய தனது பயணத்தை, அந்தப் பயணத்தின் தரிசனங்களை எல்லாம் அவர் ஆர்வத்தோடு சொல்வார். அப்போது அவருடைய கண்களில் மகிழ்ச்சி பொங்கும். முகம் பரவசமாகி மலரும். எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு மலர்ந்திருந்த காலப்பகுதியில் அவர் பெரும்பாலும் இலக்கியத்தை விட்டு, எழுத்துகளை விட்டு தியானத்திலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பேச்சுகள் தியானத்தைப் பற்றியும் மௌனத்தைப் பற்றியுமே அதிகமும் இருந்தன. எப்போதாவது இருந்தாற்போல இலக்கியத்தைப் பற்றிப் பேசுவார். ஆனால் தான்  எழுதிவைத்திருந்த கவிதைகளைக் காட்டுவார். இது அபூர்வ நிகழ்ச்சி. என்றாலும் அந்தக் கவிதைகளை அவர் முறைப்படி சேகரித்து வைத்திருந்தமை சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது.</p>
<p>ஒருவர் எதில் அதிக கவத்தைக் குவித்திருக் கிறாரோ அதைப்பற்றியே அவருடைய கவனமும் ஈடுபாடும் இருக்கும். தா. இராமலிங்கத்துக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் விட தியானத்தில் இருந்த ஈடுபாடும் சுகமும் அலாதி யானது. அவருடைய அந்த ஈடுபாட்டைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது அவருடைய குடும்பத்தினரும் அவருக்கேற்றமாதிரி நடந்து கொண்டனர். ஒரு பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் சாதாரணமாக இப்படியான வாழ்வில் ஈடுபடுவதென்பது சாத்தியக் குறைவானது. அதுவும் யாழ்ப்பாணவாழ்க்கையில் இந்த மாதிரி  ஆட்கள் இருப்பது மிகக் கடினமும் குறைவும். இந்த நிலையில் தா. இராமலிங்கம் எனக்கு மிகப் பிடித்தவரானார். இன்னும் தன்மீது ஆர்வத்தைக் குவித்தார். அவரை நான் அடிக்கடி சந்தித்தேன். நட்பு மலர்ந்தது. நெருக்கம் கூடியது. இப்போது நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரும் மெல்ல மெல்ல பல விசயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினார். இலக்கியத்தை, தன்னுடைய இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டவிதத்தை, பின்னர் தான் புதிய கவிதைகள் எழுதத் தலைப்பட்டதை, முதல் தொகுதிகள் வெளியிடும் போத எதிர் கொண்ட சூழலை என்று பலதையும் சொன்னார். மௌனம் பேச்சாக மாறியது. ஆனால் இது முழு இயல்போடு வளர்ச்சியடைந்தது என்று சொல்ல மாட்டேன். முன்னர் இருந்ததையும் விட சற்று மாறுதலான ஒரு நிலையில் அவர் இயங்கினார். இந்தக் காலப்பகுதியில் அவர் தன்னுடைய தியானத்தின் வழியான தரிசகங்களை எழுதினார். வெளிப்பார்வைக்கு மேலொட்டம் போலத் தெரியும் ஆழமான பல விசயங்களை எல்லாம் அவர் எழுதினார். அப்படி எழுதிய கவிதைகளை, உரை நடைக்குறிப்புகளை அவர் சிலவேளை எனக்குக் காட்டுவார். ஆனால் அவை பற்றி எந்த விளக்கத்தையும் அவர் சொல்வதில்லை. என்னுடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்ததும் இல்லை. ‘ஏதோ எழுதியிருக்கிறேன். வேண்டு மானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் உங்களைப் பொறுத்தது. என்னுடைய மனநிலையும் அதன் பயணமும் செல்லம் திசையைப் பாருங்கள்’ என்ற மாதிரி அவருடைய எழுத்துகள் இருந்தன. அவர் அப்படித்தான் நினைக்க வைத்தார்.</p>
<p>மு. தளையசிங்கத்தின் மீது அதிக ஆர்வமும் மதிப்பும் கொண்டிருந்தார் தா. இராமலிங்கம். கவலைக்குரிய சங்கதி என்னவென்றால், தளைய சிங்கம் ஏற்கனவே, இளவயதில் இறந்தமையே. ஒரு வகையில் தா. இராமலிங்கத்தை இந்த மரணமும் பாதித்திருக்கிறது என்பது என் கணிப்பு. அவருடைய மகனுடைய இழப்புக்காக மட்டும் அவருடைய மனம் இப்படிப் பாதிப்படையவில்லை. அது ஏற்கனவே மு. தளையசிங்கத்தின் இழப்பினால் அதிர்வுக்குள்ளாக்கி யிருக்கிறது. பின்னர் மகனின் இழப்பு அதை மேலும் தாக்கிய போது அவர் இறப்புக்குறித்து, வாழ்க்கை குறித்து விசாரணைகள் செய்யத் தொடங்கினார். அந்த விசாரணைகளின் வழியே அவர் சில கவிதைகளை எழுதியும் வைத்திருந்தார். அந்தக் கவிதைகளை வெளியிடவேண்டுமென அவர் மெல்லிய விருப்பத் தையும் கொண்டிருந்தார்.</p>
<p>இராமலிங்கத்தின் இந்தத் தியானம் சாதாரண வாழ்க்கை குறித்த மீள் மதிப்பீட்டுக்குள்ளாக்கியது. அவர் பின்னர் ஏற்பட்ட சரிவுகளை / சமூக நிகழ்வுகளை அதிக அக்கறையோடு பார்க்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. எதுவும் அவற்றின் சுற்றுப் பயணத்தில்தான் பயணிக்கும். அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பார் அவர். பிரபஞ்ச இயக்கத்தைப் பாருங்கள். அது சுற்றொழுங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பது அவருடைய நிலைப்பாடு. ‘கை மீறிச் செல்லும் விசயங்களுக்காக நம்மால் துக்கப்படத்தான் முடியும். அதற்குமேல் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்’ என்றார் எங்களுடைய போராட்டத்தின் போக்கு களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள். அவர் அந்த உரையாடலில் ஆர்வமே காட்டவில்லை. அது ஒரு பயனற்ற விசயம் என்பது அவருடைய எண்ணம். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் எங்கே செல்லும், அதன் விளைவுகள் எப்படி அமையும் என அவருக்கு ஏற்கனவே தெரியும். அவர் ஒரு மெல்லிய புன்னகையும் எந்தப் பதற்றமும் இல்லாமல் அதை எதிர் கொண்டார்.</p>
<p>வாழ்க்கை பற்றிய புரிதல்கள் வேறுவிதமாக ஏற்படத்தொடங்கியதை அடுத்து அவருடைய மன இயக்கத்தின் திசையும் நிலையும் மாறிவிட்டன. அதனால் அவர் பொதுவான இலக்கியப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார். அல்லது அவரைப் பொதுவான இலக்கிய உலகம் விட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதில் அவர் இருந்தபோதும் அவரை அதிகமான எழுத்தாளர்கள் சந்திப்பதில்லை. அவருடன் யாரும் தொடர்பு கொள்வதுமில்லை. அவரும் கலந்துரை யாடல்கள், வெளியீட்டு விழாக்கள், இலக்கிய அரங்குகள், இலக்கியச் சந்திப்புகள் என்று எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த, இருக்கின்ற பலருக்கு தா. இராமலிங்கத்தை நேரில் தெரியாது. ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் நிறைய அறிந்திருக்கிறார்கள்.</p>
<p>ஏற்கனவே கூட தா. இராமலிங்கத்துடன் மு. தளையசிங்கம், எஸ்.பொ, அ. யேசுராசா, மு.பொ, சு. வில்வரெத்தினம் போன்ற மிகச் சிலருக்குத்தான் அறிமுகமும் பரிச்சயமும் இருந்தது. ஏறக்குறைய தா. இராமலிங்கம் மெய்யுள் பண்ணையைச் சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு இயல்பாக இந்தத் தரப்பைத் தவிர பிறருடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் ஆதவையே ஆர்வமோ இல்லாமல் இருந்திருக்கக் கூடும். மு. தளையசிங்கத்தின் மறைவு இந்த ஆர்வத்தை மேலும் குறைத்திருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.<br />
தா. இராமலிங்கத்துடன் என்னுடைய உறவு நீடித்ததன் பயனாக சில காரியங்களை என்னால் செய்ய முடிந்தது. வெளிச்சம் சஞ்சிகையில் நான் பணி யாற்றிய போது தா.இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றை அதில் பிரசுரிக்கக் கூடியதாக இருந்தது. அவர் ஏற்கனவே எழுதி பிரசுரமாகாதிருந்த கவிதைகளை இதில் பயன்படுத்தினேன். அந்தக் கவிதைகளில் இருந்த விசயங்கள் காலப் பொருத்தம், சூழல் பொருத்தம் என்பவற்றுக்கு ஏற்ற மாதிரி யிருந்தது இந்த வாய்ப்பைத்தந்தன. அதே வேளை இராமலிங்கத்தை ஓரு நேர்காணலும் செய்திருந்தேன். அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அது சிறிய நேர்காணல்தான் என்றாலும் பலருடைய கவனத்தையும் பெற்றது.</p>
<p>இதற்குப் பின்னர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய ஆர்வம் மீண்டும் ஈழத்து இலக்கிய உலகத்தில் இளைய தலைமுறையிடத்தில் அதிகமாகியது. அவருடைய கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டன. அவருடைய கவிதைகள் மீள் பிரசுரத்துக்குள்ளாகின. ஆனால் எப்போதும் அவருடைய கவிதைகளை முன்னிலைப்படுத்தி வந்தவர் அ. யேசுராசா. அவருடைய ‘கவிதை’ இதழில் ‘காணிக்கை’ நூலுக்கு மு. தளையசிங்கம் எழுதியிருந்த முன்னுரை மீளப் பிரசுரித்தார் யேசுராசா. தா. இராமலிங்கத்தின் கவிதைகளின் சிறப்பையும் அவை முன்மொழிந்த வெளிப்பாட்டு முறைமை களையும் பேச்சோசையையும் புழங்கு மொழியையும் இராமலிங்கம் பயன்படுத்திய விதத்தையும் அவர் பலருக்கும் விளக்கினார். இது இராமலிங்கத்தின் மீதான ஆர்வத்தைப் பலரிடமும் குவித்தன. ஆனாலும் எவரும் நேரில் தா. இராமலிங்கத்தைச் சந்திக்கவில்லை. இது ஒரு பெருங்குறைபாடே. ஒரு விதிவிலக்காக அவரை நண்பர் தா. விஷ்ணு தன்னுடைய நினைவுள் மீள்தல் என்ற கவிதை நூலின் வெளியீட்டுக்கு தா. இராமலிங்கத்தை அழைத் திருந்தார். அவர் அதில் உரையாற்றினார். அதுதான் அவர் இறுதியாக நிகழ்த்திய இலக்கிய உரை என்று நினைக்கிறேன்.</p>
<p>இந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கவிதைகளை ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ ஆகிய தொகுதிகளுக்குப் பின்னர் எழுதி நூலுருப் பெறாத கவிதைகளை ஒரு நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அதற்காக அவரிடமிருந்த அந்தச் சேகரிப்பிலிருந்து ஒரு பிரதியை எடுத்தும் கொண்டேன். அதில் மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலிருந்த கவிதைகள் உட்படப் பல நல்ல கவிதைகள் இருந்தன. அவற்றை இரண்டு தொகுதிகளாக்கலாம் என்று திட்டமிட்டோம். ஒரு தொகுதி அரசியல் சமூகம் சார்ந்த கவிதைகள். அடுத்த தொகுதி தா. இராமலிங்கத்தின் மெஞ்ஞானக் கவிதைகள். முதல் தொகுதிக் கவிதைகளை தொகுப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இடப் பெயர்வு வந்தது. அந்த இடப்பெயர்வோடு நிலைமைகள் மாறின. ஆனால் அவருடைய கவிதைப் பிரதியை வன்னிக்குக் கவனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தேன் என்ற போதும் தா.இராமலிங்கத்தைப் பற்றிய தொடர்புகள் இல்லாமற் போய்விட்டது. எனினும் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அவருடைய இரண்டு புதல்வர்கள் வன்னியில் இருந்தார்கள். இரண்டு பேரும் மருத்துவர்கள். அதில் ஒருவர் பின்னாளில் வன்னியை விட்டுப் போய்விட்டார். அடுத்தவர் வன்னியின் இறுதிப் போர் வரையில் வன்னியிலேயே இருந்தார்.</p>
<p>2002இல் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது மீண்டும் நான் தா. இராமலிங்கத்தைச் சந்தித்தேன். முன்னரை விடவும் மெலிந்து போயிருந்தார. முதுமை தெரிந்தது. அதே அமைதி. அதே தியானம். இன்னும் கொஞ்சக் கவிதைகளை- தன்னுடைய தியான தரிசனங்களை எழுதியிருந்தார். படிக்கத் தந்தார். அப்போதுதான் அவருடைய கவிதைகளை நூலாக்கும் முயற்சியில் கல்வயல்  வே. குமாரசாமி ஈடுபட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமானால் என்னிட மிருக்கும் கவிதைகளையும் நூலாக்கலாம் என்று அவருக்குச் சொன்னேன். தேவையில்லை. அதே கவிதைகள்தான் இப்பொது நூலாக்கப்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையே அதைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றார் கல்வயல் வே. குமாரசாமி.</p>
<p>நாட்கள் கடந்தன. தொகுதியை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தொகுதி வரவில்லை. பின்னர் சண்டை தொடங்கிவிட்டது. தகவல் எதுவும் இல்லை. அவருடைய மகன் கதிர் ஒருநாள் சொன்னார் சொன்னார் ‘அப்பா மல்லாவியில் இருக்கிறார்’ என்று. போர் மீளவும் ஆரம்பிப்பதற்கு முன்னர் கதிருடன் வந்து அவர் தங்கியிருக்கிறார். கதிர் மல்லாவி மருத்துவமனையில் மருத்துவராக  வேலை செய்தார். அதனால் அங்கே தா. இராமலிங்கமும் இருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபின்னர் நானும் நிலாந்தனும் தா. இராமலிங்கத்திடம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். நாட்கள் கழிந்தன. ஆனால் அது கைகூடவில்லை. அதற்கிடையில் சண்டை வலுத்து இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்தன.</p>
<p>போர்க்கள நிலைமை எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கேள்விப்பட்டேன் தா. இராமலிங்கம் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்று. அவர் கிளிநொச்சிக்கு  இடம்பெயர்ந்து வந்திருந்தார். ஆனால் நினைவு மறதி அவரைப் பீடித்திருந்தது. நன்றாகத் தளர்ந்து போயிருந்தார். அங்கே வந்து சில நாட்களிலேயே எதிர்பாராத விதமாக அவர் அங்கே மரணமடைந்தார். போர்க்களப் பதற்றம், இடப்பெயர்வு நிலைமைகளில் அவருடைய இறுதி நிகழ்வு நடந்தது.</p>
<p>தா. இராமலிங்கத்தின் மறைவை அடுத்து அவருடைய 31 ஆவது நாள் நினைவையட்டி அவருடைய கவிதைகளை ஒரு நூலாக்கலாம் என்று அந்த நெருக்கடி நிலையிலும் மகன் கதிரும் அவருடைய நண்பர்கள் சிலரும் திட்டமிட்டு அந்த வேலைகளை என்னிடம் ஒப்படைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் பணிகளை இன்னொரு நண்பர் செய்திருந்தார். இறுதிவடிவத்தை நான் பார்வை யிடுவதாக இருந்தது. அந்தத் தொகுதிக்கான முன்னுரையை என்னை எழுதும்படி கேட்டிருந் தார்கள். மிகவும் நெருக்கடியான நிலையில் இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஆயினும் நான் அதற்கான முன்னுரையை எழுதிமுடித்தேன். புத்தக வேலைகளை முடிக்க வேண்டியது இனி அச்சகத்தின் பொறுப்பு. ஆனால் நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது.<br />
அந்த நிலையில் புத்;தகத்தை அச்சிட்டு முடிக்கலாம் என்று தோன்றவில்லை. அதனால் அதை அந்த நிலையில் ஒத்தி வைத்துக் கொள்வதாகவும் பின்னர் நிலைமையின் போக்கைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீரமானித்தோம். நிலைமை மாறவேயில்லை. அது தீவிரமாகிக் கொண்டேயிருந்தது இறுதிவரை. தருமபுரம், விசுவமடு, வள்ளிபுனம், தேவிபுரம் வரையில் அவருடைய அந்தக் கவிதைத் தொகுதிக் கான முன்னுரையைக் காவிக் கொண்டேயிருந்தேன். ஆனால் இறுதியில் தொலைந்து போன என்னுடைய ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், நான் எழுதிய குறிப்புகள் எல்லாவற்றோடும் அந்த முன்னுரையும் தொலைந்து போயிற்று. மிஞ்சி யிருப்பது இந்த இழப்புகளைப் பற்றிய கவலைகள் தான்.</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88/'>ஆளுமை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/471/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/471/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/471/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=471&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/thramalingam-01.jpg" medium="image">
			<media:title type="html">thramalingam-01</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/ramalingam-karunakaran.jpg" medium="image">
			<media:title type="html">Ramalingam karunakaran</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி&#8217;: ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. &#8211; செ.யோகராசா</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b8%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e2%80%98%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b8%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e2%80%98%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 15:54:21 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[நூல் மதிப்புரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=468</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் தொடக்கம் ஈழத்து தமிழ் நாவல் செல்நெறி கிழக்கில் அம்பாறை மாவட்ட முஸ்லீம் எழுத்தாளர்களிடமிருந்து அதிக ஊட்டச்சத்தினைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்று கூறத்தோன்றுகிறது. பின் நவீனத்துவ பாணியிலான இரண்டொரு நாவலின் முகிழ்ப்பு ஒரு புறத்திலும் யதார்த்தப் பாங்கிலான நாவலின் முகிழ்ப்பு இன்னொரு புறத்திலுமாக இது வெளிப்பட்டு வருகின்றது. பிற்கூறப்பட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவ்வேளை நச்சு வளையம் (எஸ்.நஸீறுதீன், 2004) வாக்குமூலம் (அப்துல் ரஸாக், 2002) [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=468&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/vayalan.jpg"><img class="alignleft size-full wp-image-469" title="vayalan" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/vayalan.jpg?w=455&#038;h=375" alt="" width="455" height="375" /></a></p>
<p>ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் தொடக்கம் ஈழத்து தமிழ் நாவல் செல்நெறி கிழக்கில் அம்பாறை மாவட்ட முஸ்லீம் எழுத்தாளர்களிடமிருந்து அதிக ஊட்டச்சத்தினைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்று கூறத்தோன்றுகிறது. பின் நவீனத்துவ பாணியிலான இரண்டொரு நாவலின் முகிழ்ப்பு ஒரு புறத்திலும் யதார்த்தப் பாங்கிலான நாவலின் முகிழ்ப்பு இன்னொரு புறத்திலுமாக இது வெளிப்பட்டு வருகின்றது. பிற்கூறப்பட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவ்வேளை நச்சு வளையம் (எஸ்.நஸீறுதீன், 2004) வாக்குமூலம் (அப்துல் ரஸாக், 2002) நட்டுமை (கீரன், ஆர்.எம். நௌசாத் 2007) என்பனவே நினைவிற்கு வருகின்றன. இவ்வரிசையில் அஸீஸ் எம். பாய்ஸ் அண்மையில் எழுதிய வயலான் குருவியும் இப்போது இணைந்து கொள்கிறது.’</p>
<p>வயலான் குருவி வரவின் சிறப்பம்சங்களு ளன்று அரசியல் நாவல் என்று நோக்குகின்ற போது அது பெறுகின்ற முக்கியத்துவம், ஏலவே நச்சு வளையம் விரிந்த தளத்தில் ஈழத்தின் தேசிய இனங்களின் பிரச்சினைகள் பற்றி முதன் முதலாகப் பேசியிருப்பினும் சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவது பற்றிப் பேசுவதற்கு அந்நாவலில் கொடுக்கப்பட்ட அழுத்தம் போதாது. மாறாக இந்நாவல் அதனை உரத்துப் பேச முற்படுகிறது. இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொனன்குடிப் (தீகவாபிப்) பிரச்சினைபற்றி அதன் ஆரம்பம் தொடக்கம் அண்மைக்காலம் வரை கவனஞ்செலுத்துகிறது!. இவ்விதத்தில் அதாவது சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லிம் மக்கள் நசுக்கப் படுவது <span id="more-468"></span><br />
பற்றி ஆழமாகப் பேசும்முதன் நாவல் என்ற பெருமை வயலான் குருவிக்குள்ளது!.</p>
<p>எழுபதுகளிலிருந்து ஈழத்தில் பிரதேச நாவல்கள் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன. எழுபதுகளில் கனவு ஈழத்தின் பல பிரதேசங்களும் எண்பதுகளின் தொடக்கம் தென்னிலங்கையும் தொண்ணூறுகள் தொடக்கம் வன்னியும் அண்மையிலிருந்து மன்னாரம் பிரதேசமும் இவ்விதத்தில் எமது கவனிப்பைபக் கோரியுள்ளன. இவ்வாறே அம்பாறைப் பிரதேசமும் &#8211; அது எழுபதுகளில் ஆரம்பித்தாலும் இப்போது ஈழத்து நாவல்களில் முனைப்படைய தொடங்கி யுள்ளது. (உ-ம் முற்குறிப்பிட்ட நாவல்களோடு வெள்ளாவியும்) இவ்விதத்தில், இந்நாவல் பொன்னன் குடிப் பிரதேச மக்களது ஏறத்தாழ ஐம்பதாண்டு கால வாழ்க்கையை பொதுவாகக் கோடுகளாகவும் தேவையான இடங்களில் கோலங்களாகவும் வரைந்து செல்கிறது. அவ்வப்போது அளவோடும் அழகோடும்  இந்நாவலில் வெளிப்படும் மண்வாசனை ஈழத்து வாசகர்களுக்கு புதியது.</p>
<p>நீண்ட கால வரலாற்றினை கூற முற்படும் எழுத்தாளர்களுள் சிலரே அவற்றை தலைமுறை வேறுபாடுகளுடன் கூற முற்படுவர். அவ்வாறு கூற முற்படுவது கடினமான காரியமாகும். இவ்விதத்தில் கில்லையாற்றங்கரை (இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம்), ஒரு கிராமத்துக் கனவு (ஷம்ஸ்) இவ்வேளை நினைவுக்கு வருகின்றன. இப்போது வயலான் குருவியும் இரு தலைமுறைகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது; தலைமுறை வேறுபாடுகள் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுகின்றன.</p>
<p>அரசியல் சார்பு பிரதேச மணம், தலைமுறை வேறுபாடு ஆகியவற்றினூடே அழகான &#8211; றேமான்ரிசப் பாங்கு அற்ற யதார்த்தம் பரவியுள்ள காதலின் கதையன்றும் நாவலின் இன்னொரு அடிச்சுவடாக அமைத்து இந்நாவலை வாசகர் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகின்றது. இந்நாவல் வாசகர்கள் மறக்க முடியாத விதத்தில் தக்குவா &#8211; இளையதம்பிக்காக்கா காதல் சித்திரமாகி நிரந்தரமான பதிவாகிவிட்டது என்று கூறுவதிலும் தவறில்லை!.</p>
<p>தக்குவா &#8211; இளையதம்பிக்காக்கா ஆகிய பாத்திரங்கள் மட்டுமன்றிபொதுவாக அனைத்துப் பாத்திரங்களிலுமே உயிர்த்துடிப்புடன் &#8211; இரத்தமும் தசையும் பெற்று நடமாடுவது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரது எழுத்தாற்றல் சிறப்பே அதற்கான காரணமாகிறது எனலாம்.</p>
<p>யதார்த்த நாவலொன்றில் யாதார்த்த உருவாக்க மென்பது மேற்குறித்தவாறு பாத்திர உருவாக்கத்தில் மட்டுமன்றி குறிப்பிட்ட மக்களது நம்பிக்கைகள் பேச்சு மொழிப் பிரயோகங்களைக் கையாளுகின்ற முறைமையிலும் தங்கியுள்ளது என்பது நாமறிந்ததே இவ்விதத்தில் “புதுசா வயசுக்கு வந்தபுள்ள மஹரிபட்ட நேரம் வெளியில் அதுவும் கொளத்தடி யில் நிண்டா பேய் பார்வையாகும்”; என்று சொல்லப்படுவதும் ஆக்காட்டி கத்தினால் தீங்கு விளையும்; காகம் கத்தினால் வீட்டுக்கு யாரும் வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கைகளும் இந்நாவலில் இடம்பெறுவதும் வீச்சான அன்றாடப் பேச்சு மொழியோடு ஈட்டியளவு சூரியன் முதலான மொழிப்பிரயோகங்கள் ஆங்காங்கு இடம்பெறுவதும் மனங்கொள்ளத்தக்கனவாகும்.</p>
<p>அப்துல் ரஸாக் முதலான அண்மைக்கால இளந் தலைமுறை எழுத்தாளர் சிலரிடமே கவித்துவப் பாங்கான மொழிநடையோடு எழுதும் ஆற்றல் கைகூடியுள்ளது. இந்நாவலாசிரியரிடமும் அவ் வாற்றல் நிரம்பவும் உண்டு அத்தகைய நடைச்சிறப்பு சூழல் நிகழ்ச்சி விபரிப்புகளில் திறம்பட வெளிப் படுகிறது. அதனால் அவ்விபரிப்புகள் பலவும் அழகான சித்திரங்களாக &#8211; நல்ல சினிமாவில் வரும் சிறந்த ‘சொட்ஸ்’களாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக இந்நாவலில் ஆரம்பம் அமைகிறது.</p>
<p>அது பின்வருமாறு:<br />
‘மெல்லிய தென்றலின் பாடலுக்கு தலையசைக் கும் முருங்கை மர இலைகளினூடாக பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. வெண்மேகங்கள் புகையாய் கலைந்து கூட்டம் கூட்டமாய் நிலவைக் கடந்து செல்லும் எழில் காண மனம் பூரித்துப் போகும்.</p>
<p>ஆனால் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் மல்லாந்து வானத்தைப் பார்த்துக் கிடந்த இளையதம்பி காக்காவுக்கு நிலவு பற்றியெரிந்து புகை பரவிக் கொண்டிருப்பதாய்த்தான் தோன்றியது.</p>
<p>குடிசைக்கு அருகில் நின்ற பனை மரத்தில் சில்லூறொன்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் நரிகள் கூட்டத்தின் கூக்குரல், கோணப் புளிய மரத்தில் ஆந்தை ஒன்றி பரிதாப அலறல், கிழங்கு இறங்கிய மயறு மரங்களை உறுமிக் கொண்டே கிளறும் பன்றிகளின் சத்தம் இவை எதுவுமே அவர் காதுகளில் அடையவில்லை.</p>
<p>எங்கோ ஒரு தூரத்துப்பாலை வெளியில் &#8211; கொதிக்கும் வெயிலில் மல்லாக்கப் படுக்க வைத்து நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றி வைத்து யாரோ துன்புறுத்துவதாய் உணர்ந்து கிடக்கும் இளையதம்பி காக்காவின் அந்த மன வேதனைக்குரிய அந்த யாரோ யாரென்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.”</p>
<p>நாவலின் ஆரம்பம் போல் முடிவும் கனகச்சித மான விதத்தில் அமைகின்றது.</p>
<p>‘இளையதம்பி காக்காவின் வேளாண்மை வயல் கதிர் எறிந்து பால் பருவமாய் கிடந்தது. வழமை போல் ஒரு பேரிரைச்சலுடன் வாலான் குருவிக் கூட்டமொன்று அவரின் விறைத்துக்கிடந்த உடம்புக்கு மேலாக எச்சமிட்டுப் பறந்தது. எப்படியும் நம்மை விரட்டுவதற்கு இளையதம்பி காக்கா வருவார் என்ற நம்பிக்கையில்” பழமையும் புதுமையுமான உவமைகள் ஆங்காங்கே அநாயாசமாக வெளிப்படுகின்றன.</p>
<p>ஈழத்தின் வேறு சில நாவல்கள் சிறந்த குறியீட்டுப் பால் கரன தலைப்புகளில் வெளிவந்திருப்பது போன்று (உ-ம் நிலக்கிளி, காட்டாறு, நச்சு வளையம்) இந்நாவலின் தலைப்பும் அமைந்திருப்பது பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் அதிகம் விபரிக்க வேண்டியதில்லை.! (மேற்குறிப்பிட்ட பகுதியில் வரும் வயலான் குருவியும் ஒரு விதத்தில் குறியீடாகவுள்ளது.)</p>
<p>ஒன்றிற்கு மேற்பட்ட விடயங்களுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்தையும் ஒன்றாய் வைத்துள்ள இந்நாவல் அவை ஒவ்வான்றையும் பற்றி விரிவாக விளக்கியிருக்கலாமே என்று வாசகர் சிலர் கருதுதல் கூடும், விளைவாக தலைமுறைகள் (நீல பத்மநாதன்) போன்ற நாவலொன்று ஈழத்தில் வெளிவந்திருக்கு மென்று அத்தகையோர் நினைப்பினும் தவறில்லை.</p>
<p>ஆயினும் பிரக்ஞையோடு அளவாக பல விடயங்கள் பற்றி பேசுவது கூட ஒரு எழுத்தாளனின் ஆளுமையைக் காட்டுமென்றே கருத வேண்டும். நன்கு பிரசித்தமான எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. (வைக்கம் முகமது பஷீர்) நாவல் பற்றி அறிந்துள்ள தீவிர வாசகர்களுக்கு இது பற்றி அதிகம் கூறத் தேவையில்லை. புகலிட நாவலான (கே.எஸ். துரையின்) சுயவரமும், சமகால அரசியல் வடமாராட்சிப் பிரதேச கிராமிய மணம், புகலிட (டென்மார்க்) தமிழரது வாழ்வு ஆகியவற்றை அளவாக வெளிப்படுத்தியிருப்பதும் இவ்வேளை நினைவிற்கு வருகிறது.</p>
<p>இந்நாவல் பற்றிய குறைபாடுகள் எதுவும் கூற வேண்டுமாயின் மொழி நடை சார்ந்த வழுவொன்று பற்றிக் குறிப்பிடலாம். வசன அமைப்பு உருவாக்கத்தில் இலக்கண வழு ஆங்காங்கே தலை நீட்டுகிறது. இத்தகைய வழுஇன்றைய தலைமுறை யினர் பலராலும் எழுத்தாளர், பட்டதாரி, மாணவர், ஆசிரியர் உட்பட கையாளப் படுகிறதெனினும் அது காரணமாக அவ்வழு தொடரப்பட வேண்டு மென்பதில்லை!.</p>
<p>இவ் எழுத்தாளரது எதிர்கால எழுத்துலகம் நிச்சயமாக பிரகாசமானது. ஒரு தடவை பரிசிலும், பாராட்டும் பெற்றவுடன் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ளுகிற ஈழத்து எழுத்தாளர் தடத்தில் இவ் எழுத்தாளர் செல்லாது விடும் வரை அத்தகைய எதிர்பார்ப்பிற்கு இடமில்லை.</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>நூல் மதிப்புரைகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/468/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=468&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%b8%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e2%80%98%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/vayalan.jpg" medium="image">
			<media:title type="html">vayalan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அகதிகள் பலவிதம்  &#8211; கலையரசன்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 15:46:57 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=464</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய ஆவணங்கள், இலக்கியங்கள், தமிழில் வேண்டிய அளவு இருக்கின்றன. ஐரோப்பாவில் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஈழத்தமிழர் மட்டும் புலம் பெயரவில்லை. கொழும்பு தமிழர்கள், மலையகத் தமிழர்கள்,   முஸ்லிம்கள், இவர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த இந்தியத் தமிழரும் புலம்பெயர்ந்துள்ளனர்! இதைவிட “இனப்பிரச்சினையில் மேலாதிக்கம் பெற்ற” சிங்கள இனத்தை சேர்ந்த அகதிகள் குறித்தும் பேசப்படுவதில்லை. எமது தமிழ் இலக்கியங்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=464&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/agathigal.jpg"><img class="alignnone size-full wp-image-465" title="agathigal" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/agathigal.jpg?w=455&#038;h=234" alt="" width="455" height="234" /></a><br />
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய ஆவணங்கள், இலக்கியங்கள், தமிழில் வேண்டிய அளவு இருக்கின்றன. ஐரோப்பாவில் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஈழத்தமிழர் மட்டும் புலம் பெயரவில்லை. கொழும்பு தமிழர்கள், மலையகத் தமிழர்கள்,   முஸ்லிம்கள், இவர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த இந்தியத் தமிழரும் புலம்பெயர்ந்துள்ளனர்! இதைவிட “இனப்பிரச்சினையில் மேலாதிக்கம் பெற்ற” சிங்கள இனத்தை சேர்ந்த அகதிகள் குறித்தும் பேசப்படுவதில்லை. எமது தமிழ் இலக்கியங்கள் புறக்கணித்த சமூகங்களைப் பற்றி இந்தப் பாகம் விவரிக்கின்றது.</p>
<p>முதலில் கொழும்பு அல்லது மலையகத் தமிழ் அகதிகள். ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினரே அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். அதிலும் கொழும்பை சேர்ந்த (வட-கிழக்கு பூர்வீகமற்ற) தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம். மலையகப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஒன்றில் வசதியற்றவர்கள், அல்லது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் நடைமுறை அறியாதவர்கள். அதற்கு மாறாக உலகமயமாக்கப் பட்ட கொழும்பில் வாழ்பவர்கள் எப்படி வெளிநாடு செல்லலாம் என்ற வழிவகை தெரிந்தவர்கள். என்னோடு அகதி முகாமில் சில கொழும்புத் தமிழர்களும் தங்கியிருந்தனர். அவர்கள் இராணுவ ஒடுக்குமுறையை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தனர். கொழும்பு மாநகரில் இடம்பெறும் தேடுதல் வேட்டைகளின் போதும் இவர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதில்லை. ஈழப்போர் தீவிரமடைந்த பிற்காலத்தில் இந்த நிலமை மாறியது. சில கொழும்புத் தமிழரும் புலி உறுப்பினர்களுக்கு மறைவிடம் வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டதால், பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.<br />
<span id="more-464"></span><br />
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் தமிழர்கள் வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், அதற்கு மாறாக இந்திய பூர்வீகத்தை கொண்ட தமிழர்கள் உழைக்கும் வர்க்கமாகவும் காணப் பட்டனர். இனக்கலவரங்களில் சிங்கள இனவெறியர் களின் இலக்கு, வசதிபடைத்த தமிழரின் சொத்துகளை சூறையாடுவதாக இருந்தது. குறிப்பாக “குட்டி யாழ்ப்பாணம்” என அழைக்கப்பட்ட வெள்ளவத்தை பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டது. வறுமை தாண்டவமாடும் சேரிகளை சேர்ந்த சிங்கள குண்டர்களே கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டனர். இதற்காக வாக்காளர் பட்டியலைக் கூட கையில் வைத்திருந்தனர். இருப்பினும் வீதியில் காணப் படுபவர்கள் தமிழராக அடையாளம் காணப்படும் பட்சத்தில் கொல்லப்பட்டனர். இதில் அனைத்து தமிழர்களும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டனர்.<br />
கொழும்பு கலவரங்கள் ஏற்படுத்திய மாறாத வடுக்கள் காரணமாக வட இலங்கைத் தமிழர்கள், பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தனர். வசதியானவர்கள் வெளிநாடு களுக்கும் புலம் பெயர்ந்தனர்.</p>
<p>உழைக்கும் வர்க்கமான இந்திய வம்சாவழித் தமிழர் முன்னால் ஒரேயரு தெரிவு மட்டுமே இருந்தது. சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு பணிந்து போவது. பல பெற்றோர் தமது பிள்ளைகளை சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்பினர். வீட்டில் தமிழும், வெளியில் சிங்களமும் பேசினர். ஒரு சிலர் முற்றுமுழுதாக சிங்களமயமாகினர். இதற்கு பொருளாதார காரணங்கள் முக்கியமாக இருந்திருக் கலாம். சிங்கள மொழிப்புலமை தொழில் வாய்ப்புகளை இலகுவாக்கும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது.</p>
<p>கொழும்புத் தமிழரின் அரசியல் பின்னணி, தஞ்சம் கோரிய நாடுகளிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரும் போது சொல்லப்பட்ட காரணங்கள் வலுவாக அமைந்திருக்கவில்லை. அப்படியே இருப்பினும், கோரிக்கையை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் கொழும்புத் தமிழருக்கு பிரச்சினை இல்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பு பின்னர் யுத்தப் பிரதேசங்களில் இருந்து வந்த தமிழருக்கும் வழங்கப்பட்டது. வட-கிழக்கு பிரதேசங்களில் மட்டுமே யுத்தம் நடப்பதாகவும், அமைதியாக இருக்கும் கொழும்பு நகரில் வசிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. பிற்காலத்தில் கொழும்பு நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற தாக்குதல்களும், பெருவாரியான கைதுகளும் சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றன. அகதி ஆதரவு வக்கீல்களின் சலிக்காத நீதிமன்ற வழக்குகளின் விளைவாக கொழும்பு நகரும் தமிழருக்கு பாதுகாப்பற்ற பிரதேசமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் பல கொழும்புத் தமிழருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் வழங்கப்பட்டது.</p>
<p>ஐரோப்பாவில் இலங்கை அகதிகள் அனைவரும் இன வேறுபாடு இன்றி, இலங்கையராக கருதப் பட்டனர். இலங்கை அகதிகள் சமூகத்தினுள் இருந்த சில உள்ளக பிரிவுகள் யாவும் புறக்கணிக்கப்பட்டன. முக்கியமாக ஒரே ‘ரூமில்’ தங்கவைக்கப்பட்ட சிங்கள-தமிழ் அகதிகள் இடையே பகை முரண் பாடுகள் காணப்பட்டன. ஒரே மொழி பேசும் தமிழர்களும் ஒன்றாக இருக்க தயங்கினர். குறிப்பாக யாழ் மையவாத கண்ணோட்டம் கொண்ட அகதிகள் குழு, முஸ்லிம்களுடனும், கொழும்புத் தமிழருடனும் முரண்பட்டனர். சிங்கள மொழிப் புலமை கொண்ட கொழும்புத் தமிழர்கள், சிங்கள அகதிகளுடன் அந்நியோனியமாக பழகியதை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். சுமுகமான உறவைப் பேண விரும்பிய கொழும்புத் தமிழர்கள், இரு தரப்பினரையும் நண்பர்களாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது இரண்டுங்கெட்டான் நிலை காரணமாக, ஆரம்பத்தில் ஈழ கருத்தியலுடன் தம்மை அடையாளப்படுத்தவில்லை.</p>
<p>முப்பது வருட ஈழப்போர் பல சமூக மாற்றங்களை உருவாக்கியது. ஒரு காலத்தில் வட இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையாக இருந்த “தமிழீழம்”, பின்னர் உலகத் தமிழரை வசீகரித்தது. கொழும்புத் தமிழரும் அதன் பயன்களை உணரத் தொடங்கினர். புலிகளின் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பு செலுத்தாவிடினும், ஆதரவு வழங்கினர். இதற்கு உந்து விசையாக அமைந்த சமூகவியல் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். புற உலகில் அன்றாடம் சிங்கள பேரினவாதத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந் தவர்கள். அயலில் இருந்து தொந்தரவு கொடுக்கும் சிங்கள பேரினவாத சக்தியை பயமுறுத்த, வாய்ப்பு கிடைத்ததையிட்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றனர். இந்திய வம்சாவழி கொழும்புத் தமிழர்கள் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் குடும்ப வசதியை உயர்த்திக் கொண்டனர். நான் முன்பொரு முறை குறிப்பிட்டது போல, மத்திய தர வர்க்க சிந்தனை கைவரப் பெற்றவர்கள் யு.என்.பி.யை ஆதரித்தனர். யு.என்.பி. ஆட்சியில் இருந்த காலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்று, தம்மை வளர்த்துக் கொண்ட சமூகம் அது. மேலும் யு.என்.பி. கட்சிக்குள்ளும் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு சாதகமாக கருதப்பட்டது. வெளிநாடுகளில் இந்த அரசியல் பின்னணி கொண்ட கொழும்புத் தமிழர்கள், புலிகளுக்கு அல்லது ஈழ தேசியத்திற்கு ஆதரவான கொள்கைகளை கொண்டிருந்தனர். சிலர் மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கிறார்கள்.</p>
<p>தமிழை தாய்மொழியாக கொண்ட இலங்கை முஸ்லிம்களின் நிலை வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். முஸ்லிம் அகதிகள் விஷயத்திலும் அது எதிரொலித்தது. ஈழப்போராட்டம் ஆரம்பமாகி, தொண்ணூறுகளின் பின்னர் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு கூர்மையடைந்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் சிறு பொறி தட்டினாலும் கலவரம் பரவும் அபாயம் இருந்தது. வன்னியையும், யாழ்ப்பாணத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றியிருந்தனர். இத்தகைய பின்னணியில், வட-கிழக்கு மாகாணங் களை சேர்ந்த முஸ்லிம்களும் ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.</p>
<p>அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம் இளைஞர் கள் தமிழீழப் போராட்டத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு காணப்பட்டனர். தமிழீழம் தமக் கானதல்ல என்ற உணர்வே மேலோங்கியிருந்தது. அந்த அரசியல் நிலைப்பாடு, சில தீவிர தமிழ் தேசியவாதிகளுடன் கசப்பான கருத்துப் பரிமாற்றத் திற்கு காரணமாக அமைந்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான தமிழ் அகதிகளுடன் சுமுகமான உறவு நிலவியது. வட மாகாணத் தமிழ் அகதிகள் பலருக்கு அன்று எத்தகைய அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. எப்பாடு பட்டேனும் ஒரு பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்ட குடும்பங் களில் இருந்து வந்தவர்கள். புலிகள் அறிமுகப் படுத்திய ‘பாஸ்’ கெடுபிடிக்குள்ளாக வெளியேறியவர் கள். வவுனியாவில் இருந்து ஓட்டம் பிடித்தவர்கள் ஐரோப்பா வந்த பிறகு தான் திரும்பிப் பார்த்தார்கள். அன்றைய காலகட்டத்தில் எந்தவொரு அரசியல் அமைப்பும் அகதிகளை அரசியல்மயப் படுத்தியிருக்க வில்லை. இந்த நிலைமை பின்னர் மாறியது வேறு விஷயம்.</p>
<p>முகாம்களில் இருந்து வெளியேறி, தொழில் வாய்ப்பு பெற்று, தனியாக வீடுகளில் வாழ்ந்தவர்கள் மத்தியில் தான் அரசியல் வேறுபாடுகள் தோன்ற லாயின. அகதி முகாம்களில் வாழும் போது பல்வேறு பட்ட சமூகங்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பக்கத்து கட்டிலில் படுத்திருக்கும் நபர் வேற்று இனத்தவராக  இருந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தனியாக வீடுகளில் வசிப்பவர் களின் நிலைமை வேறு. தனது நண்பர்களை தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கைவரப் பெற்றவர்கள். இவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல யாழ் மையவாத கண்ணோட்டம் துளிர் விடலாயிற்று. விரல்விட்டு எண்ணக் கூடிய தொகையில் இருந்த முஸ்லிம்கள், குறிப்பிட்ட சில தமிழ் சகோதரர்களையே நண்பர்களாக கொண்டிருக்க முடிந்தது. எனக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, முஸ்லிம் இளைஞனை வீட்டில் வைத்திருந்த “குற்றத்திற்காக” பரிகசிக்கப்பட்டது. எண்ணிக்கையில் பெருந்தொகை யான யாழ் மையவாதிகள், தலித் அகதிகளையும் இனங்கண்டு ஒதுக்கி வைத்தனர்.</p>
<p>அனேகமாக முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த வர்கள் மற்றவரை என்ன சாதி என்று விசாரிப்ப தில்லை. முகாம்களில் நடைமுறையில் சமத்துவம் நிலவியது. எண்ணிக்கையில் குறைந்தோராக இருந்த தமிழ் அகதிகளிடையே சாதி பார்த்து பிரித்து வைத்தால், உதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் காணப்பட்டது. இங்கே ஒரு சிறப்பம்சமான முடிதிருத்துதலைக் குறிப்பிட வேண்டும். ஊரில் இருந்ததற்கு மாறாக, புகலிடத்தில் அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் முடி திருத்தக் கற்றுக் கொண்டனர். பொழுதுபோக்காக கற்றுக் கொண்ட இளைஞர்கள் தமது திறமையைக் காட்டினார்கள். ஐரோப்பாவில் சலூனுக்கு போய் முடி திருத்தினால் நிறைய செலவாகும் என்பதாலேயே இந்த ஏற்பாடு.</p>
<p>புகலிடத்தில் சாதி பார்ப்பது மறைவாக இருந்து வந்தது. பொதுவாக உயர்த்தப்பட்ட சாதியினர் தம்மை தனிமைப் படுத்திக் கொள்வதன் மூலம் “சாதித் தூய்மையை” பாதுகாத்தனர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பெருவாரியான தமிழர்கள் நெருக்கமாக வசித்த நாடுகளில் சாதி பகிரங்கமாக உரிமை கோரிக் கொண்டிருந்தது. அதே நேரம் நெதர்லாந்து போன்ற நாடுகளில் எண்ணிக்கையில் குறைவாகவும், எட்டுத் திக்கும் பரவி வாழ்ந்த காரணங்களால் பகிரங்கமாக சாதி பார்ப்பதை தவிர்த்தனர். எங்காவது ஒரு கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் வசித்தால், ஒருவர் உதவி மற்றவருக்கு தேவை என்ற சுயநலமே இதற்கு காரணம். புலம்பெயர்ந்த தமிழரின் பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்யத் துணியும் பொது மட்டுமே பிரச்சினைகள் தோன்றுகின்றன.</p>
<p>புலம் பெயர்ந்த சிங்கள அகதிகளுடனான உறவு குறித்து தனியாக எழுதப்பட வேண்டும். தொண்ணூறுகளில் இலங்கையில் இருந்து மூன்று வகையான சிங்கள அகதிகள் வருகை தந்தனர்.<br />
1.    வெளிநாடு சென்று பொருளீட்ட கிளம்பிய சாமானியர்கள்.<br />
2.    ஜே.வி.பி.யின் தோற்றுப்போன கிளர்ச்சியிலிருந்து தப்பி ஓடி வந்த அகதிகள்.<br />
3.    இராணுவ சேவையில் இருந்து விட்டு விலகி ஓடி வந்தவர்கள்.</p>
<p>இதிலே முதலாவது வகையினரைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. அரசியலில் ஆர்வமற்ற பொருளீட்டுவதை மட்டுமே குறிக் கோளாக கொண்ட தமிழரைப் போலவே அவர்களது குணங்களும் அமைந்திருந்தன. ஜே.வி.பி. உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் தமிழருடன் நட்புணர்வுடன் பழகினர். அவர்களைப் பொறுத்த வரை: “இலங்கை இனப் பிரச்சினைக்கு சுயநல அரசியல்வாதிகளே காரணம். எல்லா வளமும் நிறைந்த தாயக மண்ணை நாசமாக்குகிறார்கள்”. இந்த அரசியல் அடிப்படையில் தமிழ் அகதிகளும் அவர்களுடன் நெருங்கிய நட்பை பேன முடிந்தது. ஆனால் சிங்களவர்கள் அனைவரையும் எதிரிகளாக கருதும் தமிழினவாதிகள் மட்டுமே சேராமல் ஒதுங்கி நின்றனர். இவர்களின் எதிர் பிம்பம் தான் இராணுவத்தில் இருந்து ஓடி வந்த சிங்கள அகதிகள்.</p>
<p>சிங்கள பேரினவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட இராணுவத்தில் இருந்தவர்களின் குணங்களும் அதை பிரதிபலித்தன. அவர்கள் தமிழர்கள் எல்லோரையும் எதிரிகளாக கண்டு ஒதுங்கி நின்றனர். எப்போதும் சிடு சிடு என்று மூஞ்சியை வைத்திருப்பார்கள். தமிழரைக் கண்டால் முறைத்துக் கொண்டு போவார்கள். ஒரு தடவை சுவிட்சர்லாந்தில், சிங்களவர்களை பார்த்திராத யாழ்ப்பாண நண்பர் ஒருவரை தொலை தூர கிராமத்தில் இருந்த சிறிய முகாமுக்கு மாற்றினார்கள். அவரது “ரூம் மேட்” ஒரு இராணுவத்தை விட்டு வந்த சிங்கள அகதி.<br />
அந்த தமிழ் நண்பர் அடுத்த நாளே நகரத்தில் இருந்த பெரிய முகாமுக்கு திரும்பி வந்து விட்டார். “ஒரே அறையில் ஒரு சிங்களவனுடன் என்னை தனியாக விட்டு விட்டீர்களே, இது நியாயமா?” என்று மாற்றல் தந்த முகாம் அதிகாரிகளிடம் புலம்பினார். எனினும் அதிகாரிகள் அவரின் புலம்பலை அசட்டை செய்தனர். மாற்றலை வாபஸ் வாங்க முடியாது எனக் கூறிவிட்டனர். சில வாரங்களுக்கு பின்னர் அந்த தமிழ் நண்பரை நகரத்தில் பார்த்தேன். அப்போது அவரும் அவரது “ரூம் மேட்”டான சிங்கள அகதியும் நண்பர்களாகி விட்ட செய்தியை தெரிவித்தார். முன்னாள் புலிப் போராளியும், முன்னாள் இராணுவ வீரனும், புலம்பெயர்ந்த நாட்டில் ஆருயிர் நண்பர்களாக பழகும் &#8220;அதிசயங்களையும்&#8221; கண்டிருக்கிறேன். இன அடையாளம் கடந்த வர்க்க ஒற்றுமை அவர்களை இணைக்கும் பாலமாக இருக்கலாம்.</p>
<p>இராணுவத்தில் இருந்து ஓடி வந்த அனைவரும் சிங்கள இனவாதிகளல்ல. ஒரு சிலர் தாம் சகோதரர்களாக கருதும் தமிழ் மக்களை கொலை செய்ய மனமின்றி இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தனது சக படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் வெறுத்துப் போய் ஓடியிருக்கிறார்கள். அப்படியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அரசியல் தஞ்சம் கோரும்பட்சத்தில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். எப்படியோ இந்த செய்திகள் சிங்களப் பகுதிகளையும் எட்டிவிட்டது. பொருளீட்ட வந்த சாதாரண சிங்களவர்களும் இராணுவ சேவையில் இருந்து ஓடிய காரணத்தை காட்டி “அகதிக் காட்” எடுத்து விட்டனர். தமிழ் அகதிகள் தரப்பிலும் இது போன்ற கதைகள் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி வந்த பலரின் அரசியல் தஞ்சம் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு ஓடி வந்தவர்களில் சிலர், புகலிடத்தில் புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளாக காட்டிக் கொண்டனர். பலருக்கு அது ஒரு பிழைப்புவாதம்.</p>
<p>புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் பலர் ஏழ்மை காரணமாக வெளிநாடு சென்று வாழ்வை வளப் படுத்த விரும்பியவர்கள். நாட்டுப்புற கிராமங்களில் இருந்து வந்தவர்கள். இலங்கையில் வெகுஜன ஊடகங்கள் தெரிவிக்கும் தலைப்புச் செய்திகள் மட்டுமே அவர்கள் அறிந்த அரசியல். அமைதி தவழும் பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு யுத்தத்தின் கோர முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பணிப்பெண்களாக கிரீஸ் வந்து பின்னர் அகதித் தஞ்சம் கோரிய சிங்களப் பெண் ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பின்னர், அப்போது தான் மேன் முறையீடு செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.</p>
<p>நாடு திரும்ப முடியாத பிரச்சினை என்ன என்று எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மனுவை வாசித்த போது திடுக்கிட்டேன். “இலங்கையில் தான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், அது கட்டி முடியும் வரை கிரீசில் தங்கி வேலை செய்ய அனுமதிக்குமாறும்” கேட்டு எழுதியிருந்தார். அவரது அப்பாவித்தனத்தை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தஞ்சம் கோரும் அகதி எப்படியான காரணங்களை கூற வேண்டும் என்று விளக்கிய பின்னர், இதற்குள் இவ்வளவு விஷயம் உள்ளதா என வியப்புற்றார். அந்த அபலைப் பெண்ணைப் போல, பலர் அப்பாவித்தனமாக அகதித் தஞ்சம் கோருவதை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.</p>
<p>அப்பாவித்தனமாக அகதித் தஞ்சம் கோருவதில் தமிழர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெதர்லாந்தில் அகதி முகாமில் வாழ்ந்த சமயம், சக தமிழ் அகதிகள் வக்கீலுடன் தொடர்பு கொள்ள உதவியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் எந்த லட்சணத்தில் தஞ்சம் கோரி இருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும். புலிகளின் முகாம்களில் சமைத்துக் கொடுத்தது, அவர்களுக்கு பதுங்குகுழி வெட்டிக் கொடுத்தது, இப்படித் தான் கதை விட்டிருக்கிறார்கள். சிலர் வெளிநாடு சென்றால் நன்றாக வாழலாம் என்று நினைத்து வந்ததாக உண்மையை சொல்லியிருக் கிறார்கள். இவர்களது தஞ்ச மனுக்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கும், அப்படித் தானே நினைக்கிறீர்கள்? எப்போதும் அப்படி நடக்க வேண்டிய அவசியமல்லை.</p>
<p>எந்தக் காரணமும் இன்றி தஞ்சம் கோரிய பெரும்பான்மை அகதிகள் நிராகரிக்கப்பட்டது உண்மை தான். இருப்பினும் சில அப்பாவிகள் அகதியாக அங்கீகரிக்கப்பட்டனர். பல நாடுகளைச் சேர்ந்த &#8220;அரசியல் அறிவிலிகள்&#8221; இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டிருப்பதை கண்கூடாகக் கண்டிருக் கிறேன். அதற்குக் காரணம், &#8220;இந்த தேசம் முட்டாள்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. அவர்கள் ஒரு போதும் தஞ்சம் புகுந்த நாட்டிற்கு எதிராக திரும்ப மாட்டார்கள்.&#8221; என்பதேயாகும்.</p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கட்டுரை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/464/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=464&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/agathigal.jpg" medium="image">
			<media:title type="html">agathigal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன்</title>
		<link>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b9%e0%ae%b8%e0%ae%a9/</link>
		<comments>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b9%e0%ae%b8%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 15:30:05 +0000</pubDate>
		<dc:creator>Eathuvarai</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://eathuvarai.wordpress.com/?p=460</guid>
		<description><![CDATA[எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010 ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது. தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=460&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010<br />
<a href="http://eathuvarai.files.wordpress.com/2010/06/comunist-02.jpg"><img class="alignnone size-full wp-image-461" title="comunist-02" src="http://eathuvarai.files.wordpress.com/2010/06/comunist-02.jpg?w=455&#038;h=91" alt="" width="455" height="91" /></a><br />
ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.</p>
<p>தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும்.<span id="more-460"></span></p>
<p>பல்கலைக்கழகம், மலைகள்-மலைகளில் வளரும் மரங்கள், புற்கள், நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் ‘படிப்பறிவில்லாத மக்கள்’ ஆகிய வற்றால் சூழப் பட்டுக்கிடந்தது.</p>
<p>புதிதாக வரும் மாணவர்களை சும்மாவே பயமுறுத்தும் சூழல் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை வேறு. சுற்றிலும் தென்பட்ட புதர்கள் காடுகளிலிருந்து விஷஜந்துகள் தொடங்கி-ஊர்வன வரைக்கும் வீதிக்கும் வளாகத்துக்குமென சுதந்திரமாக உலாவி விட்டுப் போயின. சிலவேளைகளில் விரிவுரை மண்டபங்களுக்குள்ளும் அவை சுதந்திர மாக ஊடுறுவின. ஆனால் அவற்றின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் அவை சுதந்திரமாக உலாவ விடப் பட்டிருந்தன. ‘உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற பௌத்த அறம்’ அங்கு ‘நூற்றுக்கு நூறு வீதம்’ பின்பற்றப் பட்டுக்கொண்டிருப்பதை நாங்கள் உணரமுடியுமாக இருந்தது.<br />
விரிவுரையாளர்கள் விரிவுரைகளை ஆங்கிலத் திலும் சிங்களத்திலுமாக மாறி மாறி விளாசிக் கொண்டிருந்தனர். எங்களில் சிலர் எந்த இழவும் புரியாமலிருந்தோம். எங்களைப் பார்த்து விரிவுரையாளர்கள் பேசும் போது மட்டும் எல்லாம் புரிந்து விட்டதைப்போல சும்மா தலையாட்டும் உத்தியைக் கையாண்டு வந்தோம். சில விடயங்களை தமிழும் சிங்களமும் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால் ஒரு சிறு ‘கெப்’புக்குள் தெரிந்து கொள்ளும் நடவடிக்கைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்டு வந்தோம்.</p>
<p>விரிவுரையாளர்கள் ஏதேனும் ஜோக் அடித்து மாணவர்கள் சிரிக்கும்போது நாங்களும் சும்மா சிரித்தோம். எங்களது சிரிப்பு சிங்கள மாணவர்களின் சிரிப்பை விடவும் பலமாக இருக்க வேண்டும் என்பது நாங்கள் கடைப்பிடிக்கும் உத்திகளில் ஒன்றாகவிருந்தது.</p>
<p>எங்களில் பலர் நாட்டின் வடக்குப்புறத்திலும் கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்ததால் சுத்தச் சிங்களத்தில் அறுவைச் சிகிச்சை செய்யும் விரிவுரையாளர்களுக்குச் சற்றுத் தலைமறைவாக இருக்கும் பொருட்டு பின் வரிசையில் உட்காரத் தலைப்பட்டிருந்தோம். பின் வரிசையிலேயே எல்லா மாணவர்களும் உட்கார விரும்புவதால் பின்னுக்கு இடம் பிடிக்க வழமையைவிட நேரத்தோடு போக வேண்டியிருந்தது. இதனால் விரிவுரைகளுக்கு சற்று நேரத்தோடயே போவது என்று சங்கம் கூடி முடிவு செய்திருந்தது.</p>
<p>சாதாரண பேச்சுச் சிங்களம் வேறு விரிவுரையாளர் களின் தூய இலக்கியச் செழுமை பொங்கும் சிங்களம் வேறு என்பதை மெல்ல மெல்ல உணரத் தலைப் பட்டிருந்தோம். விடுதியில் மாணவர்கள் பேசும் சிங்களத்தை விளங்கிக் கொள்ளுமளவுக்கு எங்களால் விரிவுரையாளர்களின் சிங்களத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை நாங்கள் விளங்காமலிருக் கத்தான் அப்படிப் பேசுகிறார்களா? என்றொரு கேள்வியை சங்கத்தாள் ஒருவன் திடீரென்று எழுப்பினான்.</p>
<p>இந்த இடத்தில் திருமகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். திருமகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப்பகுதியிலிருந்து வந்திருந்தாள். நாட்டின் வடக்குப் புறத்திலிருந்து வந்திருந்தபடியால் அவளுக்கும் சிங்களமோ ஆங்கிலமோ தெரிந்திருக்க வில்லை. அவளை நான் முதன் முதலாக பார்த்தபோது வரிசையில் எனக்குப் பின்னால் நின்றிருந்தாள். ஆனால் அவள் என்னைப்போல் ‘ரெக்கிங்கு’க்கு பயப்படுபவள்போல் காணப்படவில்லை. அவள் ஒரு தமிழ் பெட்டை என்பதை அவளது நெற்றியில் இலங்கிய பொட்டின் துணைகொண்டு அறிந்தேன். நான் அவளைத்திரும்பிப் பார்த்து இலேசாகாப் புன்னகைத்தேன்.</p>
<p>அதைக் கண்டுவிட்ட சிரேஷ்ட மாணவ னொருவன் உளரினான். ‘அடே&#8230; உனக்கு ஐட்டம் கேக்குதோ&#8230; நாயே&#8230; செத்தாய்டா மவனே நீ&#8230;’ தமிழில் உருக்கிய அந்தக் குரல் நிலத்தில் விழுந்து என் கால்வழியாக ஊடுறுவி உச்சந் தலையில் அடித்தது. அச்சத்தில் உறைந்த எனது விழிகள் மீண்டும் அநாதரவாக திருமகளைப் பார்த்தது. ஆனால் அவள் இலேசாகப் புன்னகைத்தாள்.</p>
<p>அன்று விரிவுரை மண்டபத்தில் அவளுடன் எனக்கு அளவளாவக் கிடைத்தது. அவள் மிகுந்த தைரியமாக இருந்தாள். அவளுக்குள் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாத உணர்வு கனன்று கொண்டிருந் ததை உணர்ந்தேன். அவள் ஒரு இயக்கப்பெட்டை யாகத்தான் இருக்கவேண்டும் என்பதை அவளின் கதைப்போக்கிலிருந்து என்னால் அறிய முடியுமாக இருந்தது. சிங்களவர்கள் மீது அதிக கோபம் கொண்டிருந்தாள். நான் ஒரு முஸ்லிம் என்பதை அவளிடம் முன்னரே சொல்லி இருந்தேன். மிகுந்த மன உளைச்லுக்கு அவள் ஆளாகி இருப்பதைப்போல் காணப்பட்டாள். ஆனால் அவள் எதையும் சொல்லி விட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாக இருந்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.</p>
<p>நீண்ட நாட்களாகப் பழகிய ஒருவன் போல் நான் அவளுக்கு ஆகியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் என்னிடம் சொல்லித் தொலைத்தாள். கேட்டுக் கொண்டிருக்கும் எனக்குப் பயம் வந்தது. ஆனால் அவள் பயப்படவில்லை. இங்கு தமிழில் அவளுக்கு முதன் முதலில் பேசக்கிடைத்த மனிதன் நானாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவளுக்கு என்னுடன் இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.</p>
<p>மறுநாள் திருவை நான் கண்டபோது கெண்டினில் சாப்பாட்டுப் பார்சலுடன் நின்று கொண்டிருந்தாள்.</p>
<p>‘எனக்கென்ரா செரியான விசராக் கிடக்குடா&#8230; யார்லாச்சும் பாயனும் போல கிடக்குடா&#8230;’</p>
<p>திருவுக்கு முன்னரை விட கோபம் கூடி இருந்தது. அவள் என்னதான் கோபத்தில் இருந்தாலும் எதையும் பேசிவிட்டு லேசாகச்சிரிக்கும் இயல்புடையவளா யிருந்தாள். இப்போதும் அதே சிரிப்புடன் என்னைக் கடந்து சென்றாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோப மிருந்தது. ஒரு வெறி இருந்தது.</p>
<p>சரியாக மூன்று மாதங்களுக்குப் பின் தமிழ் மாணவர்களிடத்தில் திரு ஒரு புரட்சிகரப் பெண்ணாக அறிமுகமாகிக் கொண்டிருந்தாள். இப்ப நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் இங்கு புரட்சிகள் எதுவும் சரிப்பட்டு வராது என்பதை திருவுக்கு அவசரமாக உணர்த்த வேண்டிய துரதிஸ்ட நிலமைக்கு சங்கத்தார் தள்ளப்பட்டனர். எனவே அவசரமாக சங்கம் கூடி திரு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது. ‘ராஜா ஸ்ரோரில்’ குந்தி இருந்து திரு பற்றி சங்கம் ஆறரை மணித்தியாலங்கள் அமைதியாக  ஆராய்ச்சி செய்தது. திரு அடிக்கடி யார்லயும் பாயும் அபாயகரமான ஆசையை வெளிப்படுத்தி வந்தமை சிங்கள-தமிழ் உறவை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்ற அரசியல் சூத்திரமொன்றை சங்கம் சுட்டிக்காட்டியது. இப்போது நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் திருமகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று அவளை எச்சரிப்பதாக சங்கம் ஆறரை<br />
மணித்தியாலங்களுக்குப் பின் தீர்மானம் நிறைவேற்றியது.</p>
<p>“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்”<br />
யாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.</p>
<p>அரசியல் விஞ்ஞான கனிஷ்ட விரிவுரையாரான திரு. ஹேமக்கொடி சேர் பற்றியும் கொஞ்சம் இங்கு சொல்ல வேண்டியுள்ளது. ஏனைய விரிவுரையாளர் களிலிருந்து சற்று வேறுபட்டவராக அவர் சங்கத்தாரின் கண்களுக்குத் தென்பட்டார். அவர் சம அளவில் சிங்களத்திலும் சிங்களத்தில் தான் என்ன பேசினேன் என்பதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொல்பவராகவும் இருந்தபடியால் சங்கத்தாரை இதுவரைக்கும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்த மொழிப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வொன்றை திரு ஹேமக்கொடி வழங்கினார். காலப்போக்கில் எங்களது சங்கத்தின் ஆஸ்தான குருவாகவும் அவர் யோசிக்கப்பட்டார்.<br />
இப்படியான விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி சேருக்கு என்ன ‘கார்ட்’ நேம் வைப்பது என்பதில் சங்கத்துக்குள் பல்வேறு சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் கிளம்பின. ஓவ்வொரு விரிவுரை யாளருக்கும் சங்கத்தால் ஒவ்வொரு ‘கார்ட்’நேம் வழங்கப்பட்டிருந்தது. சங்கத்தார் வீதியில், விடுதியில், சந்தில், பொந்தில் எல்லாம் கூடும்போது விரிவுரையாளர்களை தூயவார்த்தையில் தொடங்கி தூசன வார்த்தைகள் வரையாக வார்த்தைகளால் ஏலமிடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வாறான நடவடிக்கைகளின் போது விரிவுரையாளர்களின் சொந்தப் பெயரைப் பாவிப்பதில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இவ்வாறு பெயர் சூட்டி அழைக்கும் நடைமுறை எங்களுக்கு முன் சங்கத்தில் மண்டை வேலைசெய்த மாணாக்கார் குழாமொன்றி னால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் ஆண்டாண்டுகாலமாக அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வது சங்கத்தாரின் தார்மீகக் கடமைகளில் ஒன்றாக விருந்தது. புதியதலைமுறை இப்போது இச்சிக்கலுக்கு ஆளாகி இருந்தது. எல்லா விரிவுரையாளர்களுக்கும் பெயர் சூட்டியாயிற்று. ஆனால் ஹேமக்கொடி சேருக்குத்தான் இன்னும் பெயர் வாய்ப்பதாக இல்லை. அவர் தினமும் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வருவதாலேயே இந்த சிக்கல் சங்கத்தாருக்கு ஏற்பட்டிருந்தது. சுமார் மூன்று மணிநேரக் கலந்துரையாடலுக்குப்பின் திரு. ஹேமக்கொடி அவர்களின் எல்லாவிதமான அரசியல் கருத்துக்கள் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்காலிக பெயரொன்றை சூட்டுவதற்கு சங்கம் முன்வந்தது.</p>
<p>“கம்யூனிஸ்ட்”</p>
<p>“கம்யூனிஸ்ட்! கம்யூனிஸ்ட்!! கம்யூனிஸ்ட்!!!”</p>
<p>சங்கம் ஒரே கணத்தில் விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியின் புனை பெயரை உச்சரித்து புளகாங்கிதம் அடைந்தது.</p>
<p>விரிவுரையாளர் திரு ஹேமக்கொடிக்கு ‘கம்யூனிஸ்ட்’ என்று கார்ட் நேம் வைக்க சங்கத்தார் முன் வந்தமைக்கு மேலும் பல சமூக-அரசியல்-பண்பாட்டுக் காரணிகள் இருந்தன. விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியை அவரது விரிவுரைகளிலிருந்து அவர் எந்த அரசியல் முகாமைச் சேர்ந்தவர்-எந்தக் கட்சியில் ஈடுபாடுடையவர் என்ற அரசியல் வகைப்பாடுகளை  செய்வது கடைசி வரைக்கும் கடினமான பணியாகவே இருந்தது. அவர் ஒரு கம்யூனிஸ்டா, லிபரல்வாதியா, ஜேவிபியா அல்லது இனவாதியா என்ற தெளிவான தீர்மானத்துக்கு வர முடியாதபடி தாப்புக்காட்டிக் கொண்டிருந்தார்.</p>
<p>அவர் விரிவுரைகளுக்கு வரும்போது சில நாட்களில் கம்யூனிஸ்ட் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் லிபரல் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் யிக்ஷிறி முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் இனவாத முகமூடி அணிந்திருந்தார். அத்துடன் தனது முதலாவது விரிவுரையிலேயே தன்னை கடவுள் நம்பிக்கையற்றவர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாது அவர் மாணவர்களை சிங்களம்-தமிழ்-முஸ்லிம் என்ற இனக் கண்கொண்டு நோக்காதவராய் இருந்ததும் அவரை கம்யுனிஸ்ட் என்று அழைப்பதற்கு வலுச் சேர்த்தது.</p>
<p>எதையும் தான் வெளிப்படையாகப் பேசுபவன் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைபவர் போன்றும் சில நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செயற்பட்டதை சங்கம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது. இது போன்ற நிலமைகளால்தான் திரு. ஹேமக்கொடிக்கு சங்கத்தார் அந்தப்பெயரைச் சூட்டி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி இருந்தது.</p>
<p>என்னதான் தீவிர அரசியல் நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தாலும் அவரது சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கேற்ப மாணவர்களுக்குப் புள்ளி வழங்கும் விரிவுரையாளர் மனோநிலையுடையவ ராகவே அவரும் இருந்தார்.</p>
<p>விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி தனது விரிவுரைகளை Good morning, Good Afternoon, Good evening இவற்றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து தொடங்குபவராகவே இருந்தார். அவர் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே முகமன் எதுவும் கூறாமல் விரிவுரையாற்றத் தொடங்குபவராக இருந்தார். ஆனால் அவர் எத்தகைய சந்தர்ப்பங்களிலும் இப்படிச் சொல்லத் தவறுவதில்லை.</p>
<p>‘Number of LTTE’s members are studying here but we don’t care that..’</p>
<p>திரு. ஹேமக்கொடி இப்படிச் சொல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் திருவைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருமகளுக்கு அவர் சொல்லுவது புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சற்று நேரத்திலெல்லாம் அவர் மீது பாய்ந்து விடுவதைப் போல் அவள் காணப்படுவாள். என்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்ப்பாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.<br />
‘என்ன இருந்தாலும் திருவுக்கு  சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்’ யாரோ ஒரு சங்கத்தாள் போகும் போது முணுமுணுத்துக்கொண்டு மறைந்தான்.</p>
<p>அன்று ஹேமக்கொடி சேர் ‘பிணக்குகளின் வேர்கள்’ பற்றி விரிவுரையாற்றத் தொடங்கினார். முழுக்க முழுக்க ‘செலபசு’க்கு வெளியிலேயே நின்ற அன்றைய அவரது விரிவுரையில், ‘சிறுபான்மை யினரின் பிரச்சினை..’ எனத் தொடங்கியவர் ‘டக்’கென்று பிரேக் போட்டு நிறுத்தினார். இலங்கையில் தற்போது சிறுபான்மை என்றொரு இனமில்லை என்பது அவருக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும்.</p>
<p>இப்போது வேறொரு கோணத்திலிருந்து விரிவுரையாற்றத் தொடங்கினார். ‘இந்தப் பிணக்குகளுக்கான உண்மையான தீர்வு இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்புவதுதான். இனங் களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்த நாம் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். சிங்கள-தமிழ் சமூகங்களுக்கிடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்துவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்..’</p>
<p>விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி ‘செலபசுக்கு’ வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். பெரும் பான்மையின மாணவர்கள் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பது போல் அவரை வெறுப்புடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். ஒரு தமிழ் பொடியனை காதலிக்கும் சிங்கள மாணவி ஒருத்தி மட்டும் ஹேமக்கொடி சேரின் கருத்தில் ஆர்வமாக இருப்பதுபோல் இருந்தாள். ஆனால் மற்றவர்கள் அதை சங்கடத்துடன் எதிர்கொண்டிருப் பதை திரு. ஹேமக்கொடி அறிந்துகொண்டார். அங்கு ஒரு இறுக்கமான சூழல் நிலவத் தொடங்கி இருந்தது.</p>
<p>அப்போது எல்லார்  முகங்களிலும் இழையோடிய இறுக்கத்தை திரு. ஹேமக்கொடி தளர்த்த விரும்பினார். இப்போது திடீரென்று அவர் ‘செலபசுக்குள்’ பிரவேசித்தார். இந்த ‘செமஸ்டரு’க்கு எப்படி கேள்விகள் வரலாம் என்பதில் தொடங்கி விடை எவ்வாறு எழுதப்படலாம் என்பது வரை ஹேமக்கொடி ‘செலபசுக்குள்’ நின்று ஒரு பிடிபிடித்து விட்டு எல்லா மாணவர்களையும் ஏககணத்தில் உற்றுப்பார்த்தார். பெரும்பாலும் முன்பு குடி கொண்டிருந்த அந்த இறுக்கமான நிலை சற்றுத் தளர்ந்திருந்ததை ஓரக்கண்களால் நோட்டமிட்டார். அதன் பிறகு வந்த நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செலபசுக்குள் நிற்பதை ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டார். நான் திருமகளை உற்றுப் பார்த்தேன். லேசாகச்சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.</p>
<p>எனினும் திருவுக்கு சிங்கள ஆக்களிலிருந்த கோபம் இன்னும் குறையவில்லை என்று சங்கம் அடிக்கடி குசுகுசுத்தது. ஆனால் அவளுக்கு ஆட்களில் பாயும் ஆசை மட்டும் கொஞ்சம் அடங்கி இருப்பதாக சங்கம் கருதியது.</p>
<p>‘எனக்கென்ரா சரியான விசராக்கிடக்குடா’ திரு மகள் தினமும் இந்த வர்த்தைகளை யாருக்காக உச்சரிக்கிறாள். அவள் யாருக்காகவோ எதற்காகவோ உச்சரிக்கிறாள்.<br />
ஆனால் அவள் இப்போது எதையும் பேசிவிட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாயிருந்தாள்.</p>
<p>திடீரென்று ஒரு நாள் திரு கேட்டாள் “ஹேமக் கொடி சேருக்கு  எத்தின வயசிருக்கும்”</p>
<p>“ஒரு முப்பத்தஞ்சி”</p>
<p>“எனக்கு இருபத்திமூணு” என்று விட்டு திரு சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒரு கனவு இருந்தது. ஒரு வெட்கம் தெரிந்தது.<br />
திரு ஏன் அப்படிச் சிரித்தாள். திரு மெல்ல மெல்ல மாறி வருகிறாளா? அல்லது ஹேமக்கொடியை போட்டுத் தள்ளப்போகிறாளா? இருபத்து மூன்று முப்பத்தைந்தின் கதையை முடிக்கப்போகிறதா?</p>
<p>திரு. ஹேமக்கொடி அன்று விரிவுரைகளுக்குச் சமுகமளித்திருக்கவில்லை. மாணவர்கள் ஏதோ ஒரு கிசுகிசுவை குசுகுசுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. திருவின் இருக்கையும் அன்று காலியாகக் கிடந்தது. முதன் முதலாக இன்று திருவும் ஹேமக்கொடியும் ஒன்றாக லீவெடுத்திருக்கிறார்கள். இனியும் வரக்கூடும் என்ற நம்பிக்கையற்று மாணவர்கள் கலையத் தொடங்கி இருந்தனர். நான் எவரும் இல்லாத விரிவுரை மண்டபத்தில் காரணமற்றுத் தனிமையில் இருந்தேன். திரு இன்று வந்திருந்தால் கொஞ்ச நேரம் பேசி இருந்திருக்கலாம். இன்று ஹேமக்கொடி சேர் வரமாட்டார் என்று தெரிந்துதான் வராமல் விட்டாளா?</p>
<p>வகுப்பறையை விட்டும் நான் வெளியேறி மலைப்பாங்கான வீதியில் ஏறத்தொடங்கிய போது இருட்டிக் கொண்டு வந்தது.</p>
<p>யாரோ ஒரு சங்கத்தாள் வேகமாக நடந்து வந்தவன் எனக்கருகில் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினான்.</p>
<p>“ஹேமக்கொடி சேர் ஒரு தமிழ்பெட்டையை கலியாணம் கட்டிட்டாராம்”</p>
<p>பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்த மலைகளிலும், காடுகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும், கட்டடங்களிலும் நிர்வாகத்திலும், மாணவர்களிலும் முட்டிமோதிப் பறந்து கொண்டிருந்தது செய்தி.</p>
<p>“பார்த்தியா, என்ன இருந்தாலும் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட்தான்”</p>
<p>“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல மோகம் அதிகம்”</p>
<p>யாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.</p>
<p><!--Session data--></p>
<br />Filed under: <a href='http://eathuvarai.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/'>சிறுகதை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/eathuvarai.wordpress.com/460/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/eathuvarai.wordpress.com/460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/eathuvarai.wordpress.com/460/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=eathuvarai.wordpress.com&amp;blog=8017802&amp;post=460&amp;subd=eathuvarai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://eathuvarai.wordpress.com/2010/06/02/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b9%e0%ae%b8%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/621aeaeaa386fc36ae291dc238c245a0?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Eathuvarai</media:title>
		</media:content>

		<media:content url="http://eathuvarai.files.wordpress.com/2010/06/comunist-02.jpg" medium="image">
			<media:title type="html">comunist-02</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
