Posts filed under ‘சிறுகதை’

கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.

தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும். (more…)

June 2, 2010 at 3:30 pm Leave a comment

அரசனும் குதிரை வீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் – ஜெகன் அபூர்வன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும்
ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன.
ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. தாள்கள் காற்றில் எழுந்து பறந்தபடியிருந்தன. யாரோ வாசிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனின் மௌனத்தை விட்டத்தில் தொங்;கவிட்டு சவுக்கால் அடிப்பது போன்ற பிரமையை உணர்ந்தான். யாருமில்லாத நூலகத்தில் யாரேனும் எப்போதுமிருந்து கொண்டுதானிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான்.
நேரம் நடுப்பகலைத் தொட்டுக் கொண்டிருந்தது. இத்தோடு அவன் இந்த நூலகத்திற்கு நூறாவதோ அல்லது நூற்றியோராவது தடவையோ வருகின்றான். நூலகத்தின் சுவர்களின் வெண்ணிறம் உதிராத நாட்களில் அவனது அநேக பொழுதுகள் இதனுள்த்தான் கழிந்தன . இப்போது பழுப்பேறிய சுவர்களில் வேர் விட்டிருக்கும் மரங்களும் திறந்துகிடக்கும் கதவுகளும் கூரைகளும் மனதை என்னவோ செய்வது போலிருந்தன.
(more…)

March 6, 2010 at 6:44 pm Leave a comment

மூன்று படுகளத்துடன் தேடுபவன் – த மலர்ச்செல்வன்.

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

தற்செயலாக ‘அஃ’ இதழை வாசித்துக் கொண்டிருந்தபோது படுகள இதழ்களை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது.அந்த இதழ்களைத் தேடி நான் அலையாத இடமேயில்லை. தேடாத நூலகங்களே இல்லை. விசாரிக்காத எழுத்தாளர்களேயில்லை இறுதியில் ஆவணக் காப்பாளர் குரும்புச்சிட்டி குலசிங்கத்திடம்இருப்பதாக அறிந்து அவர் வாசல் அடைந்தேன்.

வீடு முழுவதும் பழைய கடதாசியால் நிரம்பியிருந்தன. எழுத்துக்கள் எங்கும் ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடின. அவர் மர வேலைகள் நிறைந்த அறையைத் திறந்து என்னை அழைத்துக்கொண்டு போனார். அறை நகர்ந்து கொண்டே இருந்தது. இரு பகலும் ஒரு இரவும்  நடந்திருப்போம். அறையின் முடிவில் சிலர் எந்தச் சலனமுமில்லாது ஏடுகளை ஆராய்ந்துகொண்டேயிருந்தனர். எங்களைக் கண்டு  எதுவும்  பேசவில்லை. அடிக்கடி கண்ணாடியைச் சரி செய்துகொண்டு படியெடுத்துக்கொண்டேயிருந்தனர்.

“யார் இவர்கள்?” என்று கேட்டேன். “சாம வேதத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இசைஞானிகள்” என்றார் குலசிங்கம்.

“இளையராஜாவின் குழுவினரா?” என்றேன் “இல்லை இல்லை, இவர்கள் மேதைகள்” என்றார். திரும்பினேன் பின் பக்க மொட்டையிலிருந்து ‘சரிகமபதநிச” ஆவியாகிக்கொண்டிருந்தன. சற்றுப் பின் மேதைகள் உறைநிலையாய் போனார்கள். (more…)

December 21, 2009 at 2:52 pm Leave a comment

Older Posts


 

May 2012
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Categories

Feeds

Flickr Photos

Untitled

Upper Dentdale Valley, Yorkshire Dales (Explored)

Nets

More Photos

Recent Posts


Follow

Get every new post delivered to your Inbox.