Posts filed under ‘சர்வதேசம்’
இந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா
எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காவுகொண்ட, தமிழ்ப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான, கொடூர யுத்தத்தின் பால் வௌ;வேறு வெளிநாட்டு அரசுகள் காட்டிய ஆதரவும் நிலைப்பாடுகளும், இந்த அந் நிய அரசுகளின் பூகோள – போர்த் தந்திரோபாய அக்கறை கள் பற்றிப் பெருமளவில் கூறுகின்றன. இந்திய அரசினதும் மற்றும் சுற்றயல் (periphery) என்று குறிப்பிடக்கூடிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு குழுவைச் சேர்ந்த நாடுகளின் அரசுகளினதும் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது. யுத்தம் முடி வுக்கு வந்தபின் இலங்கையின் உறவுக்கான ஏதாவது எதிர்கால சாத்தியம் கருதி இந்த அரசுகளிற் பெரும் பாலானவை இந்த ஆதரவை மௌனமாகவும் வழங் கின.
இதற்கு மாறாக, யுரேஷியா எனக் கூட்டாகக் குறிப்பிடப்படக் கூடிய, ஈரான், ரஷ்யா போன்ற ஒரு தொகுதி நாடுகளின் அரசுகள் இலங்கை அரசை ஆதரித்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் போரிடும் இரு பகுதிகளுக்குமான இந்த யுரெஷியா மற்றும் சுற்றயல் இவற்றின் ஆதரவுகளின் துருவத்தன்மையானது, உண் மையிலேயே இன்னமும் பரந்துபட்டதான ஒரு போராட்டத்தின் வாசனையை முகர்ந்தறிவதைத் தடுத்து விடுகிறது. இலங்கைத்தீவின் எல்லைகளுக்கும் இப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கும் மிகவும் அப்பால் பரந்தகன்ற ஒரு போராட்டமது.
இது ஏன் அவ்வாறுள்ளது? இப்படியான ஒரு கேள்விக்கான விடையிற் பெரும்பகுதி, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதுமான சர்வதேச மேலாதிக்கத் திற்கெதிராக யுரேஷிய பெரு நிலப்பரப்பில் வளர்ந்து வரும் ஒரு கூட்டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டது. பிறிமாக்கோவ் கோட்பாடு கொடுத்த உற்சாகத் தினால் மொஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த யுரேஷியன் கூட்டு. ‘கிழக்கின் நேட்டோ’ என சில வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களிடையே குறிப்பிடப்படும், உண்மையான இராணுவப் பரிமாணங்களைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்கூட்டான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), இந்தப் பூகோள- அரசியல் செயலூக்கத்தின் ஒரு மெய்யான குறியீடா கும். இச் செயற்பாட்டின் ஒரு களமாகத்தான் 2009ல் இலங்கை உள் நாட்டுப் போரின் கடைசி அத்தியாய மானது அனேகமாக அமைந்தது.
சீனப்பூதத்தின் நுழைவு: அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து இலங்கை விலகுவதன் ஆரம்பம்.
![061605[1]](http://eathuvarai.files.wordpress.com/2010/03/0616051.jpg?w=455)


